என் மலர்
நீங்கள் தேடியது "Uttarakhand"
- மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உத்தரகாண்ட் மாநிலம் டேராடூனில் உள்ள சுங்கச் சாவடியில் நின்று கொண்டிருந்த கார் மீது கட்டுப்பாட்டை இழந்த மணல் லாரி மோதியதில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மணல் லாரி மோதி கார் நசுங்கிய சிசிடிவி காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கார் மீது லாரி மோதி விபத்து நடந்ததால் சுங்கச்சாவடியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இதனையடுத்து லாரியை கைப்பற்றி போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர்.
- கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டியுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலம் பவுரி கர்வாலில், கோவில் வளாகத்தில் தலித் தம்பதியினரின் திருமணத்திற்கு அனுமதி மறுத்த பூசாரி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்..
மார்ச் 5 ஆம் தேதி அங்கிதா மற்றும் அஜய் ஆகியோர் கோவிலில் திருமணம் செய்ய திட்டமிட்டிருந்தனர். அப்போது கோவில் பூசாரி நாகேந்திர செல்வால் கோவில் கதவுகளை பூட்டிவிட்டு அவர்களை சாதி ரீதியாக திட்டியுள்ளார். இதனால் அந்த தம்பதியால் அன்று திருமணம் செய்து கொள்ள முடியவில்லை.
கோவிலுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறி மணமகளின் தந்தை மார்ச் 12 அன்று புகார் அளித்ததைத் தொடர்ந்து, எஸ்சி/எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
- உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று அகர்வால் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
- எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன்.
பாஜக ஆளும் உத்தரகாண்ட் நிதியமைச்சர் பிரேம்சந்த் அகர்வால் திடீரென ராஜினாமா செய்வதாக அறிவித்தார். அவரது இல்லத்தில் நேற்று நடந்த செய்தியாளர் சந்திப்பின் போது கண்ணீர் விட்டு அழுதார்.
கடந்த பிப்ரவரி மாதம் மாநில சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் அவர் தெரிவித்த கருத்துகளைச் சுற்றியுள்ள சர்ச்சையை காரணம் காட்டி, பதவி விலகுவதாக கூறி, முதல்வர் புஷ்கர் சிங் தாமியிடம் தனது ராஜினாமாவை அவர் சமர்ப்பித்தார். நாடாளுமன்ற விவகாரத் துறையையும் பிரேம்சந்த் நிர்வகித்து வந்தது குறிப்பிடத்தக்கது.
பட்ஜெட் கூட்டத்தொடரின் போது காங்கிரஸ் எம்.எல்.ஏ மதன் பிஷ்ட்டின் கருத்துக்கு பிரேம்சந்த் பதிலளித்தபோது சர்ச்சை வெடித்தது. உத்தரகண்ட் "பஹாடிகளுக்கு" மட்டுமே உருவாக்கப்பட்டதா என்று பிரேம்சந்த் ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
மேலும் சூடான விவாதத்தின் போது நாடாளுமன்றத்திற்குப் புறம்பான மொழியைப் பயன்படுத்தினார். அவரது கருத்துக்கு பரவலான எதிர்ப்புகள் கிளம்பின. குறிப்பாக பஹாடி மலைவாழ் மக்களிடம் இருந்து எதிர்ப்பு கிளம்பியது. மேலும் எதிர்க்கட்சிகளும் கடுமையான விமர்சனங்களைப் முன் வைத்தன.
தற்போது ராஜினாமா குறித்து செய்தியாளர்களிடம் அழுதபடி பேசிய பிரேம்சந்த் , எனது வார்த்தைகளுக்கும் அவற்றின் தாக்கத்திற்கும் நான் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொள்கிறேன்.
எனது மாநிலம் வளர்ச்சியடைந்து முன்னேற வேண்டும் என்று நான் எப்போதும் விரும்புகிறேன். எனது பங்களிப்பு என்னவாக இருந்தாலும், அதை நான் செய்வேன். எனவே, இன்று, எனது பதவியை ராஜினாமா செய்ய முடிவு செய்துள்ளேன் என்று தெரிவித்தார்.
- ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜூ 4-ம் கட்ட பயிற்சிக்காக உத்திரகாண்ட் மாநிலம் செல்கிறார்.
- ஆணையை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
புதுச்சேரி:
புதுவை அரசில் கமிஷனர் மற்றும் நிதித்துறை செயலராக பணியாற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரியான ராஜூ 4-ம் கட்ட பயிற்சிக்காக உத்திரகாண்ட் மாநிலம் செல்கிறார்.
இதையடுத்து அவர் கவனித்து வந்த நிதித்துறை முதன்மை தேர்தல் அதிகாரி ஜவகர், திட்டம் மற்றும் ஆராய்ச்சி, பொருளா தாரம் மற்றும் புள்ளிவிபரம் ஆகிய துறைகளை அரசு செயலர் முத்தம்மா, தகவல் தொழில்நுட்பம், சுற்றுலா துறைகளை அரசு செயலர் மணிகண்டன் ஆகியோர் லிங்க் அதிகாரி அடிப்படையில் கவனிப்பார்கள்.
இதற்கான ஆணையை அரசின் சார்பு செயலர் ஜெய்சங்கர் வெளியிட்டுள்ளார்.
- கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது.
- மீட்பு நடவடிக்கை கடினமாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
வட இந்திய மாநிலமான உத்தரகாண்டின் ருத்ரபிரயாக் மாவட்டம். ருத்ரபிரயாக்கிலிருந்து 86 கிலோமீட்டர் தொலைவில், கார்வால் இமயமலை பகுதியில் பிரபலமான கேதார்நாத் கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு யாத்திரையாக பக்தர்கள் மேற்கொள்ளும் கேதார்நாத் யாத்திரை தற்போது நடைபெற்று வருகிறது.
சாலை வழியாக இந்த கோயிலுக்கு செல்ல முடியாததால், ருத்ரபிரயாக்கில் உள்ள கவுரிகண்ட் பகுதியிலிருந்து 22 கிலோமீட்டர் மலை வழியில் ஏறி செல்ல வேண்டும். கவுரிகண்ட் பகுதியில் நேற்று இரவு கனமழை பெய்தது. இதனால் அங்கு நிலச்சரிவு ஏற்பட்டது.
இதில் 3 கடைகள் சேதமடைந்துள்ளன. மேலும், பத்திற்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளனர்.
மாவட்ட நிர்வாகம், பேரிடர் மேலாண்மை குழு, காவல்துறை, தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படை ஆகியவை சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன.
தற்போது வரை இடிபாடுகளில் 3 பேரின் சடலங்கள் கிடைத்துள்ளன.
"காணாமல் போனவர்களை கண்டுபிடிப்பதற்கான நடவடிக்கை நடந்து வருகிறது" என்று ருத்ரபிரயாக் பகுதி காவல் கண்காணிப்பாளர், டாக்டர் விசாகா கூறியுள்ளார்.
மழையினாலும், ஆங்காங்கே சரிந்து விழும் பாறைகளினாலும் மீட்பு நடவடிக்கை கடினமாக இருப்பதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர்.
- துரியோதனன் சிலையை வைத்து வழிபடும் வழக்கம் இப்போது இல்லை.
- அங்கு சிவலிங்க வழிபாடு இருக்கிறது.
உத்தரகாண்ட் மாநிலம், உத்தரவாசி மாவட்டத்தில் உள்ளது, ஜகோல் என்ற கிராமம். இங்கு மகாபாரத இதிகாசத்தில் சொல்லப்பட்டுள்ள, கவுரவர்களின் வரிசையில் முதன்மையானவனான துரியோதனனுக்கு ஆலயம் எழுப்பப்பட்டுள்ளது. இந்த கிராமத்தை சேர்ந்தவர்கள் கவுரவர்களை தங்கள் மூதாதையர்களாகக் கொண்டவர்கள். அவர்கள் தான் இந்த ஆலயத்தை துரியோதனனுக்காக கட்டியதாக சொல்லப்படுகிறது.
ஒரு முறை துரியோதனன் இந்த பகுதியை தாண்டி சென்ற போது, இதன் இயற்கையான அழகில் மயங்கினான். அங்குள்ள உள்ளூர் தெய்வமான மஹசு என்பவரிடம், இமயமலையை ஒட்டி தனக்கென ஒரு பள்ளத்தாக்கு வேண்டும் என்று வேண்டினான். அதற்கு அந்த தெய்வம், 'தான் இடம் அளிப்பதாகவும், இந்த பகுதி மக்களை நீ காக்க வேண்டும்' என்று கூறியது. அந்த வாக்கின் படி துரியோதனனுக்கு வழங்கப்பட்ட பள்ளத்தாக்கில் தான் அவனுக்கான ஆலயமும் அமைந்திருக்கிறது. மகாபாரத யுத்தத்தில் துரியோதனன் இறந்தபோது, அவனுக்காக இப்பகுதி மக்கள் கண்ணீர் விட்டனர். அந்த நீர் பெருகி, ஏரியாக உருவானது. அதன் பெயர் 'தமஸ்'. இந்த வார்த்தைக்கு 'துன்பம்' என்று பெயர். இங்கு துரியோதனன் சிலையை வைத்து வழிபடும் வழக்கம் இப்போது இல்லை. ஆனால் அங்கு சிவலிங்க வழிபாடு இருக்கிறது.
- சுரங்க விபத்தில் சிக்கியவர்களை மீட்கும் பணிகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
- சுரங்கத்தில் வெளியேறுவதற்கான வழி ஏன் அமைக்கப்படவில்லை.
உத்தரகாண்ட் மாநிலம் யமுனோத்ரி தேசிய நெடுஞ்சாலையில் சுரங்கம் தோண்டும் பணியின் போது விபத்து ஏற்பட்டது. சுரங்கப்பாதை இடிந்து விழுந்ததில் 41 தொழிலாளர்கள் உள்ளே சிக்கி உள்ளனர்.
சுமார் 4.5 கி.மீ. நீளமுள்ள சுரங்கப்பாதையில் 200 மீட்டர் இடிந்து விழுந்துள்ளது. மீட்பு பணிகளில் தேசிய மற்றும் மாநில பேரிடர் மீட்புப் படைகள், தீயணைப்புத்துறை ஈடுபட்டு வருகிறது. அந்த வகையில் மீட்பு பணிகளில் முக்கிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு, குடிநீர் வழங்குவதற்காக 6 இன்ச் அளவில் 57 மீட்டர் நீளமுள்ள துளை போடப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து ஊட்டச்சத்து நிபுணர்கள் அறிவுரைக்கு ஏற்ப தேவையான உணவுகள் இந்த குழாய் மூலம் அனுப்பப்பட இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இது ஒருபுறம் இருக்க, "சம்பவம் நடைபெற்று எட்டு நாட்கள் ஆகிவிட்டன. ஊழியர்கள் இன்னும் மீட்கப்படவில்லை. கட்டுமான தளத்தில் சுரங்கத்தில் இருந்து வெளியேறுவதற்கான வழி ஏன் அமைக்கப்படவில்லை என்பதை கண்டறிய வேண்டும். ஒருவேளை வெளியேறுவதற்கான வழி திட்டத்தில் இருப்பின் ஏன் அதனை அமைக்கவில்லை."
"களத்தில் உள்ள மீட்பு படையினர் மற்றும் பொறியாளர்களுக்கு நான் எனது முழு ஆதரவை வழங்குகிறேன். இந்த விஷயத்தை நான் அரசியலாக்க விரும்பவில்லை. பேரிடர் மீட்பு திட்டங்கள் எதுவும் இல்லை, அவர்களிடம் வல்லுனர்கள் யாருமே இல்லை. இந்த விஷயத்தில் சி.பி.ஐ. விசாரணை மேற்கொள்ளப்பட வேண்டும்," என்று உத்தரகாண்ட் மாநில எதிர்கட்சி தலைவர் யாஷ்பால் ஆர்யா தெரிவித்து இருக்கிறார்.
- உணவு பொருட்கள் அனுப்புவதற்காக 6 அங்குல குழாய் அமைக்கப்பட்டுள்ளது.
- தொழிலாளர்கள் அனைவரும் நலமாக இருப்பது தெரிய வந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழாய் வழியாக கேமரா ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கேமரா, உள்ளே உள்ள தொழிலாளர்களை படம்பிடித்து அனுப்பியுள்ளது. ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது. குழாய் மூலம் அனுப்பப்பட்ட உணவை அவர்கள் பகிர்ந்து கொண்டனர். இந்த வீடியோவை பார்த்து தொழிலாளர்களின் குடும்பம் நிம்மதி அடைந்துள்ளது.
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel rescue | First visuals of the trapped workers emerge as the rescue team tries to establish contact with them. The endoscopic flexi camera reached the trapped workers. pic.twitter.com/5VBzSicR6A
— ANI (@ANI) November 21, 2023
#WATCH | Uttarkashi (Uttarakhand) tunnel collapse: Rescue workers try to establish contact with the trapped workers through walkie-talkie. (Video Source: District Information Officer) pic.twitter.com/eGpmAmwQep
— ANI (@ANI) November 21, 2023
- சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டது.
- ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டு வந்தனர். திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்கள் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்கும் பணி 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. அவர்களுக்கு உணவு வழங்குவதற்காக 6 அங்குல குழாய் ஒன்று அமைக்கப்பட்டது. மேலும், இந்த குழாய் வழியாக கேமரா ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
இந்த கேமரா, உள்ளே உள்ள தொழிலாளர்களை படம்பிடித்து அனுப்பியது. ஊழியர்கள் அனைவரும் பாதுகாப்பாக இருப்பது வீடியோ மூலம் தெரியவந்துள்ளது.
இந்நிலையில், சில்க்யாரா சுரங்கத்தில் 10 நாட்களுக்கும் மேலாக சிக்கியிருந்த 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி ஒரே இரவில் மீண்டும் தொடங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில்," இதுவரை 800 விட்டம் கொண்ட இரும்பு குழாய்கள் இடிபாடுகள் வழியாக 32 மீட்டர் வரை செருகப்பட்டுள்ளன.
ஆஜர் இயந்திரம் சுரங்கப்பாதையில் துளையிடும் பணியை மேற்கொண்டபோது அதிர்வு ஏற்பட்டதால் துளையிடும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இந்நிலையில், ஆஜர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி மீண்டும் தொடங்கியுள்ளதாக மீட்புப் பணிகள் தீவிரமாகும்" என்றார்.
- மீட்பு பணிகள் 13-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
- ஊழியர்கள் எப்போது மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது திடீரென ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதன் காரணமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணிகள் 13-வது நாளாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உணவு அதற்கென உருவாக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளின் போது பல்வேறு இடர்பாடுகள் ஏற்படுவதால் மீட்பு பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் சிக்கியுள்ள ஊழியர்கள் 41 பேரும் எப்போது மீட்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் மனநிலையை சீராக வைத்துக் கொள்ளும் முயற்சியாக அவர்களுக்கு செஸ் போர்டு மற்றும் சீட்டுக் கட்டு உள்ளிட்டவைகளை அனுப்ப மீட்பு படையினர் திட்டமிட்டுள்ளனர். 13 நாட்களாக சுரங்கத்தில் சிக்கியுள்ளவர்களின் இக்கட்டான சூழ்நிலையில், அவர்கள் மனதளவில் உறுதியாக வைத்துக் கொள்ள இவை உதவியாக இருக்கும் என்று மீட்பு படையினர் நம்புகின்றனர்.
- தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று காலை 11 மணிக்கு பிறகு துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது.
- இன்று மாலைக்குள் தொழிலாளர்களை மீட்டுவிடலாம் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷி என்ற இடத்தில் சுரங்கம் தோண்டும் பணியில் 41 தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது திடீரென ஏற்பட்ட நிலச்சரிவால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதனால் 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்று வருகிறது.
சுரங்கத்தில் சிக்கியுள்ள 41 தொழிலாளர்களுக்கு தப்பிக்கும் பாதையைத் தயார் செய்வதற்காக அமெரிக்க ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணி தொடங்கப்பட்டது.
துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக, உள்ளே சிக்கிய 41 தொழிலாளர்களை மீட்கும் முயற்சியில் நேற்று பின்னடைவு ஏற்பட்டது. சுமார் 46.8 மீட்டர் வரை துளையிடப்பட்ட நிலையில், மீட்பு பணி நேற்று தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.
இந்நிலையில், துளையிடும் இயந்திரத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு சரி செய்யப்பட்டு இன்று காலை 11 மணிக்கு பிறகு துளையிடும் பணி மீண்டும் தொடங்கியது.
இன்னும் 12-14 மீட்டர்களே உள்ள நிலையில் எல்லாம் சரியாக நடந்தால் இன்று மாலைக்குள் தொழிலாளர்களை மீட்டுவிடலாம் என உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்நிலையில், தொழில்நுட்பம் கோளாறு காரணமாக துளையிடும் பணி மீண்டும் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களில் இரண்டு முறை துளையிடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் மீண்டும் பின்னடைவு.
- ஆகர் இயந்திர பிளேடுகளை வெட்டி அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன.
உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள உத்தர்காஷியில் சுரங்கம் தோண்டும் பணியின் போது திடீரென ஏற்பட்ட விபத்தால் சுரங்கத்தின் ஒரு பகுதி மூடியது. இதன் காரணமாக அங்கு பணியில் ஈடுபட்டு வந்த 41 தொழிலாளர்களும் சுரங்கத்திற்குள் சிக்கிக் கொண்டனர்.
தற்போது வரை சுரங்கத்தில் சிக்கியவர்களுக்கு தேவையான உணவு அதற்கென உருவாக்கப்பட்ட குழாய் மூலம் தொடர்ந்து அனுப்பப்பட்டு வருகிறது. மீட்பு பணிகளின் போது பல்வேறு இடர்பாடுகளால் அடிக்கடி இடையூறு ஏற்படுகிறது. அந்த வகையில், சுரங்கத்திற்குள் துளையிடுவதற்காக அமெரிக்காவில் இருந்து கொண்டுவரப்பட்ட ஆகர் இயந்திரம் மூலம் துளையிடும் பணிகள் நேற்று (நவம்பர் 25) துவங்கின.

எனினும், ஆகர் இயந்திர பிளேடுகள் சிக்கிக் கொண்டதால் சுரங்கத்திற்குள் இருக்கும் 41 தொழிலாளர்களை மீட்கும் பணிகளில் மீண்டும் பின்னடைவு ஏற்பட்டது. இதன் காரணமாக துளையிடும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன.
"சுரங்கத்தில் சிக்கிக் கொண்டிருக்கும் ஆகர் இயந்திர பிளேடுகளை வெட்டி அகற்றும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. ஆகர் இயந்திரத்தின் 16 மீட்டர்கள் வரை வெட்டி அகற்றப்பட வேண்டும். பிளாஸ்மா கட்டர் இயந்திம் மூலம் வெட்டி எடுக்கப்படுவதால், ஆகர் இயந்திர பிளேடுகளை வேகமாக அகற்ற முடியும்," என்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வரும் சுரங்க நிபுணரான க்ரிஸ் கூப்பர் தெரிவித்து இருக்கிறார்.

"இந்த பணிகள் முழுமையாக நிறைவு பெற நீண்ட காலம் ஆகிவிடும். மலை பகுதியில் பணியாற்றும் போது, எதையும் கணிக்கவே முடியாது. நாங்கள் இதுதொடர்பான பணிகள் நிறைவடைவது குறித்து எந்த கணிப்பையும் தெரிவிக்கவில்லை," என்று தேசிய பேரிடர் நிர்வாக கூட்டமைப்பின் உறுப்பினரான சையத் அடா ஹசைன் தெரிவித்து உள்ளார்.
சுரங்கம் உருவாக்குவதில் சர்வதேச நிபுணரான ஆர்னால்டு டிக்ஸ், சுரங்கத்தில் சிக்கியுள்ள தொழிலாளர்களை கிறிஸ்துமஸ் பண்டிகைக்குள் மீட்க முடியும் என்று தெரிவித்து இருக்கிறார். கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு இன்னும் ஒரு மாத காலம் இருப்பதை அடுத்து, இவரின் தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.