என் மலர்
நீங்கள் தேடியது "Uzhavar Sandhai"
- தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது.
- தக்காளி கிலோ ரூ.10 முதல் 15, முள்ளங்கி ரூ.14-16வரையிலும் விற்பனையானது.
உடுமலை :
உடுமலை உழவர் சந்தைக்கு தொடர் மழை காரணமாக காய்கறி வரத்து குறைந்துள்ளது. தக்காளி விலை குறைந்தும் சின்ன வெங்காயம் விலை உயர்ந்தும் காணப்பட்டது.
தக்காளி கிலோ ரூ.10 முதல் 15 வரையிலும், உருளை ரூ. 45 முதல் 50 வரையிலும் ,சின்ன வெங்காயம்ரூ. 54 -90, கத்தரிக்காய் ரூ.30 -36, வெண்டைக்காய் ரூ.20 -24 ,முருங்கை ரூ.35-48 ,பீர்க்கங்காய் ரூ.20- 38 ,சுரைக்காய் ரூ.10 -15 ,புடலங்காய் ரூ.20 -24, பாகற்காய் ரூ.35 -40, தேங்காய் ரூ. 25- 30 ,முள்ளங்கி ரூ. 14-16 ,பீன்ஸ் ரூ.46- 48, அவரைக்காய் ரூ.50 -55 ,கேரட் ரூ. 60- 65க்கும் விற்பனையானது.
- உழவர் சந்தைகள் வெள்ளி விழாவை கொண்டாடி வருகின்றன.
- தி.மு.க. அரசு விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது.
சேலம்:
உழவர் சந்தை தொடங்கப்பட்டு 25 ஆண்டுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக வெள்ளி விழா சேலம் சூரமங்கலம் உழவர் சந்தையில் நடைபெற்றது.
இந்த வெள்ளி விழாவில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு, சுற்றுலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு சூரமங்கலம் உழவர் சந்தையில் வெள்ளி விழாவை தொடங்கி வைத்து விவசாயிகள் விற்பனை செய்யும் காய்கறிகளின் தரத்தை நேரடியாக ஆய்வு செய்தனர்.
தொடர்ந்து அமைச்சர் எ.வ.வேலு நிருபர்களிடம் கூறியதாவது:-
விவசாயிகளின் நலன் கருதி கடந்த கலைஞர் ஆட்சியில் 1999 ஆம் ஆண்டு முதன்முதலாக 100 உழவர் சந்தைகள் திறக்கப்பட்டது. சேலம் மாவட்டத்தை பொறுத்தவரை முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அமைச்சராக இருந்தபோது 9 உழவர் சந்தைகள் சேலம் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.
இன்று 25-வது ஆண்டு நிறைவடைந்ததை யொட்டி, வெள்ளி விழாவை இந்த உழவர் சந்தைகள் கொண்டாடி வருகின்றன.
அதாவது விவசாயிகள் இடைத்தரகர்கள் இல்லாமல் நேரடியாக லாபம் ஈட்ட வேண்டும் என்பதற்காக இந்த உழவர் சந்தைகள் தமிழகத்தில் கொண்டுவரப்பட்டது.
சேலத்தில் உள்ள சூரமங்கலம் உழவர் சந்தையில் 170 முதல் 200 வரை கடைகள் உள்ளன. அந்த விவசாயிகளுக்கு அடையாள அட்டைகள் வழங்கப்பட்டு, அவர்கள் தங்கள் விற்பனையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். இந்த உழவர் சந்தைகளுக்கு பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் வருகிறார்கள்.
அவர்களிடம் கேட்ட போது, உழவர் சந்தைகளில் தரமான, புதிய காய்கறிகள் கிடைப்பதாக பெருமை யோடு சொல்லுகிறார்கள்.
அந்த வகையில் உழவர் நலன் காக்கும் அரசாக இந்த அரசு செயல்பட்டு வருகிறது. குறிப்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் உழவர் சந்தைகளை மேம்படுத்த 27.50 கோடி ரூபாய் அளவில் ஒதுக்கீடு செய்து, சீரமைக்கப்பட்டு வருகிறது.
அதேபோல விவசாயத்திற்கு என தனி நிதிநிலை அறிக்கையை கொண்டு வந்தவர் ஸ்டாலின். அதாவது தனி நிதிநிலை அறிக்கையில் கடந்த 21- 22 ம் ஆண்டில் 32.75 ஆயிரம் கோடி நிதி ஒதுக்கீடு செய்தார்.
அதனை தொடர்ந்து 2022 -2023 -ல் 33 ஆயிரம் கோடியும், 2023 -2024- ம் ஆண்டில் ரூ.38 ஆயிரத்து 904 கோடி அளவில் நிதி ஒதுக்கீடு செய்து விவசாயம் சார்ந்த பல்வேறு திட்டங்களை சிறப்பாக செய்து வருகிறார்.
அது மட்டுமில்லாமல் நீர் வளத் துறையை உருவாக்கி அதற்காக மூத்த அமைச்சர் துரைமுருகனை நியமித்து, நீர் மேலாண்மை பாதுகாக்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்த அரசு, விவசாயிகளின் நலன் காக்கும் அரசாக உள்ளது. தொடர்ந்து அமைச்சர் எ.வ. வேலுவிடம் திருவண்ணாமலையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் டாக்டர் அன்புமணி ராமதாஸ் விவசாயிகளுக்கு தமிழக அரசு எதும் செய்யவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளாரே? என்று கேட்டதற்கு பதிலளித்து அமைச்சர் எ.வ.வேலு கூறியதாவது:-
தோழமைக் கட்சிகளைப் பொறுத்தவரை இந்த ஆட்சியை பாராட்டி வருகிறார்கள்.
ஆனால் எதிர்க்கட்சியாக இருக்கிறோம் என்பதற்காக பா.ம.க. தற்போது மனசாட்சியை மறந்து பேசி வருகிறது. வேளாண்மைக்கு தனியாக நிதி ஒதுக்குகிறோம், அதற்கான செலவு செய்யப்படுகிறது.
ஆனால் காழ்புணர்ச்சி காரணமாக மனசாட்சியை மறந்து பேசுகின்றனர். மனசாட்சியோடு இருப்பவர்கள் இவ்வாறு பேச மாட்டார்கள் என பா.ம.க.விற்கு காட்டமான பதில் அளித்தார்.
- தெற்கு உழவர்சந்தைக்கு 75 முதல் 90 டன் காய்கறிகளும், வடக்கு சந்தைக்கு 12 முதல்16 டன் காய்கறிகளும் தினசரி விற்பனைக்கு வருகிறது.
- நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் 2 முதல் 3 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகிறது.
திருப்பூர் :
திருப்பூர் பல்லடம் ரோட்டில் தென்னம்பாளையம் உழவர் சந்தையும், புதிய பஸ் நிலையம் பின்புறம் வடக்கு உழவர் சந்தையும் செயல்படுகிறது.
ற்கு உழவர்சந் தைக்கு நாள் ஒன்றுக்கு 75 முதல் 90 டன் காய்கறிகளும், வடக்கு சந்தைக்கு தினசரி 12 முதல்16 டன் காய்கறிகளும் விற்பனைக்கு வருகிறது.திருப்பூர் மாவட்டம் மட்டுமின்றி, பிற மாவட்டங்களில் இருந்தும் சந்தைக்கு காய்கறி வாங்க வியாபாரிகள் பலர் திரள்கின்றனர். திருப்பூர் தெற்கு சந்தைக்கு நாள் ஒன்றுக்கு 350 விவசாயிகள் காய்கறிகளை விற்பனைக்கு கொண்டு வருகின்றனர். வாங்கிச்செல்ல 4,500 பேர் வருகின்றனர்.நள்ளிரவு முதல் அதிகாலைக்குள் 2 முதல் 3 லட்சம் ரூபாய்க்கு காய்கறி விற்பனையாகிறது. இச்சந்தையில் கடந்த ஜூன் மாதத்தில் 2,507 டன் காய்கறி விற்பனையாகியுள்ளது. ரூ.6.98 கோடிக்கு காய்கறி விற்பனை நடந்துள்ளது. காய்கறி வாங்க கடந்த மாதத்தில் 1.49 லட்சம் பேர் வருகை புரிந்துள்ளனர்.
வடக்கு சந்தையில் கடந்த மாதத்தில் 513 டன் காய்கறி ரூ. 1.47 கோடிக்கு விற்பனையாகியுள்ளது. 63 ஆயிரம் பேர் காய்கறி வாங்க வந்துள்ளனர். கடந்த ஜூன் மாதத்தில் இரு சந்தைகளிலும் சேர்த்து ரூ. 8.45 கோடிக்கு விற்பனை நடந்துள்ளது.