என் மலர்
நீங்கள் தேடியது "vaiko"
- 20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார்.
- மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார்.
சென்னை:
ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளராக இருப்பவர் மல்லை சத்யா. கட்சியின் மூத்த நிர்வாகி என்பதோடு கட்சி தொடங் கப்பட்டது முதல் வைகோவுடன் பயணித்து கொண்டு இருப்பவர்.
கட்சி நலிவடைந்த போது எல்.கணேசன், செஞ்சி ராமச்சந்திரன், பாலவாக்கம் சோமு போன்ற முக்கிய நிர்வாகிகள் வெளியேறினார்கள். ஆனாலும் எந்த சலனமும் இல்லாமல் மல்லை சத்யா வைகோவுடனேயே இருக்கிறார்.
இந்த நிலையில் துரை வைகோவுக்கும் மல்லை சத்யாவுக்கும் இடையே எழுந்துள்ள மோதல் உச்ச கட்டத்தை அடைந்து திருச்சி யில் ம.தி.மு.க.வினர் மல்லை சத்யாவை நீக்கக்கோரி தீர்மானம் நிறைவேற்றும் அளவுக்கு சென்றிருக்கிறது.
இந்த நிலையில் நேற்று முன் தினம் சென்னை தாயகத்தில் நடந்த கட்சி கூட்டத்தில் இந்த விவகாரம் வெடித்தது. வைகோ முன்னிலையில் கூட்டத்தில் இருந்து துரை வைகோ வெளியேறினார். இதனால் கட்சிக்குள் பரபரப்பு ஏற்பட்டது.
இதற்கிடையில் துரை வைகோவின் ஆதரவாளர் சத்யகுமரன், இது துரை வைகோவின் காலம். அவரது கட்டளையை ஏற்காத, பின்பற்றாத, மதிக்காத யாராக இருந்தாலும் பெட்டியை கட்டிக் கொண்டு வாயை பொத்திக் கொண்டு வெளியேறுங்கள் என்று அறிக்கை வெளியிட்டார்.
இதற்கு பதிலடி கொடுத்து மல்லை சத்யா வெளியிட்ட பதிவில் ம.தி.மு.க.வில் 32 ஆண்டுகள் உழைத்ததற்கு வெகுமானமாக புற்றுநோய், பகட்டு வேஷம், நம்பிக்கை துரோகி, பத்தினிவேஷம், வெளியேறு என்ற விருதுகளை எனக்கு அளித்துள்ளார்கள். அவர்கள் யார்? எப்படிப்பட்டவர்கள் என்பதையும் விசுவாசமுள்ள கட்சியினர் அறிவார்கள்.
விளிம்பு நிலை தலைமுறையில் இருந்த என்னை குன்றின் மேல் வைத்து அழகு பார்த்து, அரசியல் அங்கீகாரம் வழங்கிய வைகோவுக்கு காலம் முழுவதும் நன்றியோடு இருப்பேன். என் விசுவாசம், நம்பகத் தன்மையை வைகோ அறிவார் என்று குறிப்பிட்டு உள்ளார்.
இன்று வைகோவின் அழைப்பின் பேரில் கோயம்பேட்டில் அம்பேத் கார் சிலைக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சியிலும் மல்லை சத்யா பங்கேற்றார்.
இது தொடர்பாக கருத்து கேட்க மல்லை சத்யாவை தொடர்பு கொண்ட போது எதுவும் கூற மறுத்துவிட்டார்.
அவருக்கு நெருக்கமான சிலரிடம் விசாரித்த போது, துரை வைகோ கட்சி பொறுப்புக்கு வந்த பிறகு அவரை சுற்றியிருக்கும் சிலர் மல்லை சத்யாவை காயப்படுத்தும் வகையில் செயல்பட்டு வருகிறார்கள்.
கடந்த 4 ஆண்டுகளாக அவரது பெயரை கூட சென்னையில் எந்த நிகழ்ச்சியிலும் போடக் கூடாது. சுவர் விளம்பரங்கள், பேனர்களிலும் பெயர் போட்டோக்கள் இடம் பெறக் கூடாது என்று கட்டுப்பாடு போட்டு உள்ளார்கள்.
கட்சி தொடங்கியதில் இருந்து எவ்வளவு போராட் டங்கள், எத்தனை முறை ஜெயில் என்று கட்சிக்காகவே உழைத்து கொண்டிருப்பவர். தன் மீது போடப்பட்ட பல வழக்குகளை கோர்ட்டில் சந்தித்து வென்று இருக்கிறார். அவரையே அசிங்கப்படுத்தி ஓரம் கட்ட வேலை பார்க்கிறார்கள்.
நேற்று முன் தினம் கூட்டத்தில் இருந்து வெளியேறிய துரை வைகோ வை சமாதானப்படுத்த ஓடியவர்களில் ஒருவர் மல்லை சத்யாவை நான் தாக்குகிறேன் தலைவரே என்று சொன்னபோதும் அதை துரை வைகோ கண்டிக்கவில்லை. எனவே அவரது மனநிலை புரிகிறது.
20-ந்தேதி நிர்வாக குழுவை கூட்டி தலைவர் வைகோ விவாதிக்கிறார். மகனா? மல்லை சத்யாவா? என்ற கேள்வி வரும் போது வைகோ என்ன முடி வெடுப்பார் என்று தெரிய வில்லை. நிச்சயம் மல்லை சத்யா கட்சியை விட்டு விலக வாய்ப்பு இல்லை. ஆனால் அவரை வெளி யேற்ற வாய்ப்பு இருப்ப தாகவே கருதுகிறோம் என்றனர்.
நிர்வாக குழுவில் என்ன முடிவெடுக்கப் போகிறார்கள் என்ற பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.
- மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
- ஒரு 5 நிமிடமாவது வரவேற்று பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மௌன சாமியாக அமர்ந்திருந்தார்.
சென்னை:
எழும்பூரில் ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
* எக்காரணம் கொண்டும் பா.ஜ.க.வுடன் கூட்டணி இல்லை என்று எடப்பாடி பழனிசாமி கூறியிருந்தார்.
* மத்திய அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் எடப்பாடி பழனிசாமி ஒரு வார்த்தை கூட பேசவில்லை.
* ஒரு 5 நிமிடமாவது வரவேற்று பேசி இருந்தால் நன்றாக இருந்திருக்கும். ஆனால் மௌன சாமியாக அமர்ந்திருந்தார்.
* இந்த கூட்டணி நீடிக்குமா? இல்லை கருத்து வேறுபாடு ஏற்படுமா? என்று தெரியவில்லை.
* பா.ஜ.க.வுக்கு எடுபிடி போல்தான் இருந்தார்கள். அ.தி.மு.க. சார்பில் ஒருவர்கூட பேசவில்லை என்றார்.
- பல மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த மாமேதை, அண்ணல் அம்பேத்கர் பிறந்த பொன்னாள் ஏப்ரல் 14.
- அண்ணல் அம்பேத்கரின் பிறப்பும், அறிவுப் பரப்பும், எண்ணுந்தொறும் உள்ளம் சிலிர்க்கும்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இளைய வயதினருக்கு இச்சித்திரை மாதம் தான் வசந்த விழா காலம் என இலக்கியம் கூறுகிறது. "சித்திரை சித்திரை திங்கள் சேர்ந்தன என்றும், இதுவே இந்திர விழா எடுக்கும் பருவம்" என்றும் சிலப்பதிகாரத்தில் இளங்கோ அடிகள் வர்ணிக்கின்றார். மலரும் சித்திரையை மகிழ்வோடு கொண்டாடி மகிழ்வோம்.
பல மாநிலங்களின் ஒன்றியமான இந்தியாவின் அரசமைப்புச் சட்டத்தை உருவாக்கித் தந்த மாமேதை, அண்ணல் அம்பேத்கர் பிறந்த பொன்னாள் ஏப்ரல் 14. ஒடுக்கப்பட்டுக் கிடந்த மக்களுள் ஒருவராகப் பிறந்து, மதி நுட்பத்தால், பல்வேறு துறைகளில் மேன்மையான பட்டங்களைப் பெற்று, உலக நாடுகளின் அரசமைப்புச் சட்டங்களின் மிகப்பெரும் தன்மைகளை எல்லாம் ஆராய்ந்து, இந்திய மாநிலங்களின் ஒன்றியத்திற்கான அரசமைப்புச் சட்டத்தை, நெகிழ்ச்சி உடையதாகவும், அதே நேரத்தில் இறுக்கமானதாகவும் உருவாக்கித் தந்த அண்ணல் அம்பேத்கரின் பிறப்பும், அறிவுப் பரப்பும், எண்ணுந்தொறும் உள்ளம் சிலிர்க்கும். அறிவின் வாராத வெற்றிகள் இல்லை என்பதை நிலைநாட்டியவர்.
உலகெங்கும் வாழும் தமிழ் மக்களுக்கு சித்திரை திருநாள் வாழ்த்துகளை ம.தி.மு.க. சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது.
- இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம்.
பிரதமர் மோடியின் இலங்கை பயணத்தில், திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துவதில் ஒத்துழைப்புக்காக இந்தியா, இலங்கை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் உள்ளிட்ட 7 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்கும் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், இலங்கைக்கு அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு அதிபர் அனுரா திசநாயகாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார். மேலும் இந்தியா - இலங்கை இடையே ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன. அதில் முக்கியமானது, இந்தியா - இலங்கை பாதுகாப்பு ஒத்துழைப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகும்.
இதன் அடிப்படையில், இந்திய ராணுவம் மற்றும் இலங்கை ராணுவத்திற்குமிடையே கூட்டு நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு ஒத்துழைப்பும் உதவியும் வழங்கும். இது இலங்கை அரசுடன் போடப்பட்டிருக்கும் முதல் ராணுவ புரிந்துணர்வு ஒப்பந்தம் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. எங்கள் தொப்புள் கொடி உறவுகளான ஈழத் தமிழர்கள் ஒரு லட்சத்து 37 ஆயிரம் பேரை கொன்று குவித்தது இலங்கை ராணுவம்தான்.
ஆயிரக்கணக்கான தமிழ் பெண்களை பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி சிங்கள இராணுவம் கொன்றது. தங்கள் மண்ணின் விடுதலைக்காக பல்லாயிரக்கணக்கான வீரர்களை பலி கொடுத்து தாயகத்தை மீட்பதற்குப் போராடிய விடுதலை இயக்கத்தைக் கருவறுத்தது சிங்கள ராணுவம். யுத்தக் களத்தில் போராடிய தமிழ் வாலிபர்கள் எட்டு பேரை நிர்வாணப்படுத்தி, கைகளைக் கட்டி பின்னந்தலையில் சிங்கள ராணுவ வெறியர்கள் சுட்டுக் கொன்றனர்.
இனப்படுகொலை நடத்திய சிங்கள ராணுவத்தை ஹேக் நகரில் உள்ள பன்னாட்டு நீதிமன்றத்தில் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி, விசாரித்து தண்டிக்க வேண்டும் என்று தமிழ் இனம் போராடிக் கொண்டிருக்கிறது.
இந்நிலையில், இலங்கை இராணுவத்தோடு பிரதமர் நரேந்திர மோடி ராணுவ ஒப்பந்தம் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது மட்டுமின்றி தமிழ் மக்களுக்கு செய்திருக்கும் கொடும் துரோகம் ஆகும். தமிழ் இனத்தை வஞ்சித்திருக்கும் பிரதமர் மோடிக்கு இலங்கையின் உயரிய 'ஸ்ரீலங்கா மித்ர விபூஷன்' விருது வழங்கப்பட்டிருப்பதும் பொருத்தமானது என்றுதான் தமிழ் மக்கள் கருதுவார்கள்" என்று தெரிவித்துள்ளார்.
- ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார்.
- அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா..." என்று தமிழில் கூறினார்.
கடந்த ஜனவரி 31 ஆம் தேதி தொடங்கிய பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவுபெற்றது. இதைத்தொடர்ந்து பாராளுமன்ற இரு அவைகளும் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டன.
வக்பு மசோதா நிறைவேற்றம் உள்ளிட்டவற்றால் பாராளுமன்றம் கடந்த நாட்களில் பரபரப்பாக காணப்பட்டது.
இந்நிலையில் இன்று மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கும், மதிமுக எம்.பி வைகோவுக்கும் இடையில் கருத்து மோதல் ஏற்பட்டது.
வக்பு மசோதா மீதான விவாதத்தின்போது உத்தரப்பிரதேச பாஜக எம்பி சுதான்ஷூ திரிவேதி, இஸ்லாமியர்களை பயங்கரவாதிகள் என பொருள்படும்படி பேசினார். இதற்கு எதிர்க்கட்சி இருக்கையில் இருதவர்கள் கடும் ஆட்சேபம் தெரிவித்தனர். எனினும், சுதான்ஷூ திரிவேதி தொடர்ந்து பேசிக் கொண்டே இருந்தார்.
அப்போது ஆவேசமாக எழுந்த மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தனது ஆட்சேபனையை பதிவு செய்தார். அவருக்கு ஆதரவாக தமிழக எம்பிக்களும் எழுந்து குரல் எழுப்பினர்.
அப்போது எழுந்த நிர்மலா சீதாராமன், கொஞ்சம் பொறுங்கப்பா... என்று தமிழில் கூறிவிட்டு, சபாநாயகரை நோக்கி வைகோ குறித்து முறைப்பாடு வைக்கத் தொடங்கினார்.
அவர் கூறியதாவது, வைகோ எப்போதும் உணர்ச்சிவசப்பட்டுப் பேசக்கூடியவர், ஆனால் இப்போது அவர் பயன்படுத்திய மொழியை பொறுத்துக்கொள்ள முடியாது. நீ தமிழ்நாட்டுல கால் வை பாக்குறேன், நீ தமிழ்நாட்டுல நுழஞ்சுடுவியா நான் பாக்குறேன் என்ற அவர் பேசுகிறார். இது ரொம்ப தப்பு என சபாநாயகரிடம் முறையிட்டார்.
மேலும் வைகோ பேசியதை அவைகுறிப்பில் இருந்து நீக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். அதன்படி வைகோவின் பேச்சு அவைகுறிப்பில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
- எம்புரான் திரைப்படம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்று சித்தரித்து அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
- எனவே இத்திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளும் வசனங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மோகன்லால் நடிப்பில் உருவான எம்புரான் திரைப்படம் கடந்த மாதம் 27ஆம் தேதி வெளியானது. மலையாளத்தில் எடுக்கப்பட்டு, அனைத்து மொழிகளிலும் மொழிமாற்றம் செய்யப்பட்டு, திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.
நெடும்பள்ளி என்கிற இடத்தில் அணை இருப்பதாகவும், அந்த அணையை குண்டு வைத்து தகர்க்க வேண்டும் எனவும், அந்த அணையானது திருவிதாங்கூர் மன்னர் காலத்தில் வெள்ளையர்களால் மிரட்டி 999 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் போடப்பட்டது எனவும் வசனம் இடம் பெற்றுள்ளது.
திருவிதாங்கூர் மன்னர் போய்விட்டார், வெள்ளையர்கள் போய்விட்டார்கள், ஆனால் ஜனநாயகம் என்கிற பெயரில் அந்த அணை மட்டும் கேரளாவை காவு வாங்க காத்திருப்பது போன்ற வசனங்கள் நேரடியாகவே இந்த திரைப்படத்தில் நான்கு இடங்களில் முல்லைப் பெரியாறு அணையை பற்றி இடம்பெற்றுள்ளது.
முல்லைப்பெரியாறு அணை இருக்கும் பகுதியை, ஆங்கிலேய அரசுக்குள் அடங்கி இருந்த திருவிதாங்கூர் மன்னர், 999 வருடங்களுக்கு இலவயமாக எழுதிக் கொடுத்தாராம். எழுதி வாங்கிய பிரிட்டீஷ்கார்கள் போய்விட்டனர். மன்னராட்சியும் போய் விட்டது; ஆனாலும் அந்த ஆபத்து மக்களை காவு வாங்க காத்து நிற்கிறது என்று ஒரு வசனம்.
இரண்டு ஷட்டரை திறந்தாலே, மக்களை பலிவாங்குற அணையை, அதாவது முல்லைப்பெரியாறு அணையை, குண்டு வைத்து தகர்த்தால், கேரளம் மறுபடியும் தண்ணீருக்குள் மூழ்கும்னு ஒரு வசனம்.
அணையை காப்பாற்ற செக் டேம் எனும் சுவர்களால் பயனில்லை, அணையே இல்லாமல் இருந்தால்தான் சரி என்று ஒரு வசனம்.
இப்படி வசனங்கள் இடம் பெற செய்து காட்சி அமைப்புகளை சித்தரித்து முல்லைப் பெரியாறு அணையால் கேரள மக்களுக்கு ஆபத்து என்று எம்புரான் திரைப்படத்தில் திட்டமிட்டு கருத்து திணிக்கப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.
முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பை உச்சநீதிமன்றம் அமைத்த நிபுணர் குழு ஆய்வு செய்து அணையின் நீர்மட்டத்தை 152 அடி உயர்த்தினாலும் எந்த பாதிப்பும் வராது என்பது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஆனால் முல்லைப் பெரியாறு அணையை உடைத்து எறிவதற்கு திட்டமிட்டு கேரளாவில் திரைப்படங்கள் மூலம் அம்மாநில மக்களை பீதியில் ஆழ்த்துவதற்கு சில அக்கறை உள்ள சக்திகள் முயற்சித்து வருகின்றன.
2011 நவம்பர் மாதம் டேம் 999 அதாவது அணை 999 என்று பெயரிடப்பட்ட ஒரு திரைப்படம், ஆங்கிலம், தமிழ், மலையாளம், தெலுங்கு மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் திரையிடப்பட்டது.
கேரளத்தைச் சேர்ந்த முன்னாள் கடற்படை மாலுமியான சோஹன் ராய் என்பவர் இந்தப் படத்தை இயக்கி இருந்தார்.
ஒரு அணை உடைந்தால் எவ்வளவு பெரிய அழிவு ஏற்படும் என்பதுதான் இந்தப் படத்தின் மையக் கருத்து. ஏற்கனவே முல்லை பெரியாறு அணை குறித்து சர்ச்சை நிலவி வந்த சூழலில் இந்த படம் முல்லைப் பெரியாறு அணை ஆபத்தானது என்று சித்தரித்துக் காட்டியது.
இது முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கேரள அரசு மற்றும் கேரளத்தில் உள்ள செல்வந்தர்களால் செய்யப்படும் திட்டமிட்ட சதி என்றும் இந்தப் படத்தை எங்கும் திரையிட அனுமதிக்க மாட்டோம் என்றும் நான் அறிக்கை தந்தேன்.

படத்தின் சிறப்புக்காட்சி திரையிடப்படவிருந்த சென்னை தனியார் திரையரங்கில் நுழைந்து படப்பெட்டிகளையும் எடுத்துச் சென்ற மல்லை சத்யா உள்ளிட்ட கழக கண்ணின் மணிகள் 25 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மீண்டும் எம்புரான் திரைப்படம் மூலம் முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பு அற்றது என்று சித்தரித்து அணையை உடைக்க சதித்திட்டம் தீட்டப்பட்டு இருக்கிறது.
எனவே இத்திரைப்படத்தில் முல்லை பெரியாறு அணை பற்றிய காட்சிகளும் வசனங்களும் உடனடியாக நீக்கப்பட வேண்டும்.
தமிழ்நாட்டில் எம்புரான் திரைப்படம் திரையிடலை தமிழ்நாடு அரசு தடை செய்ய வேண்டும்.
- நகைக் கடன் வாங்கியவர்கள் மறு அடமானம் வைப்பதற்கு ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள வழிமுறைகளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள்.
- ரூ.2 லட்சம் கடன் வாங்கிய ஒருவர் வட்டியை மட்டுமே திருப்பிச் செலுத்தி நகைக்கடனைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
பாராளுமன்ற மாநிலங்களவையில் நேரமில்லா நேரத்தில் மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:
மக்கள் தங்கள் அவசர பணத் தேவைகளுக்காக வங்கிகள் மற்றும் கூட்டுறவு வங்கிகள் மற்றும் வங்கி சாரா நிதி நிறுவனங்களிடமிருந்து நகைக் கடன்களைப் பெறுவது தவிர்க்க இயலாத ஒன்றாகிவிட்டது. ஏழை மக்கள், விவசாயிகள், சிறு தொழில் பிரிவுகளில் உள்ள சிறு வணிகர்கள் தங்கள் உடனடித் தேவைகளுக்கு நகைக் கடன்களை பெரிதும் நம்பியுள்ளனர்.
அடகு கடைகளிலோ அல்லது கமிஷன் முகவரிடமோ நகையை அடமானம் வைத்தால், அவர்கள் அதிக வட்டி செலுத்த வேண்டிய நிலை ஏற்படுகிறது. குறைந்த வட்டியில் கிடைப்பதாலும், பாதுகாப்புக் காரணமாகவும் இவர்கள் வங்கிகளில் இருந்து நகைக் கடன்களைப் பெறுகிறார்கள்.
இருப்பினும், நகைக் கடன் வாங்கியவர்கள் மறு அடமானம் வைப்பதற்கு ரிசர்வ் வங்கி தற்போது வெளியிட்டுள்ள வழிமுறைகளால் கடுமையாக பாதிக்கப்படுகிறார்கள். தற்போது நடைமுறையிலுள்ள விதிமுறைகளின்படி, நகைக் கடன் காலத்தின் முடிவில், கடன் வாங்குபவர் வட்டியை மட்டுமே செலுத்தி நகைக்கடனை புதுப்பித்து கொள்ளலாம்.
ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில், வங்கியில் அடமானம் வைக்கப்பட்ட நகைக் கடன்களை அசல் மற்றும் வட்டியுடன் முழுமையாக செலுத்தி நகைகளைப் பெற்ற பின்பு, மறுநாள்தான் மீண்டும் மறு அடமானம் வைத்துதான் கடன் பெறமுடியும். இதன் காரணமாக, ஏழை மக்கள், விவசாயிகள் முழுத் தொகையையும் திருப்பிச் செலுத்த வேண்டும். அது அவர்களுக்கு பெரிய அளவில் நிதி நெருக்கடியையும், மன அழுத்தத்தையும் ஏற்படுத்துகிறது.
வட்டி மட்டும் செலுத்தி நகைக் கடனை புதுப்பிக்கும் முறை ஏழை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. உதாரணமாக, ரூ.2 லட்சம் கடன் வாங்கிய ஒருவர் வட்டியை மட்டுமே திருப்பிச் செலுத்தி நகைக்கடனைப் புதுப்பித்துக் கொள்ள முடியும்.
ரிசர்வ் வங்கியின் புதிய நகைக் கடன் வழிகாட்டு முறைகளால் விவசாயிகள் அதிக வட்டி விகிதத்தில் தனியார், தனிநபர்கள், அடகு தரகர்கள் மற்றும் கமிஷன் முகவர்களிடமிருந்து கடன் வாங்கும் சூழ்நிலையை உருவாக்குவதோடு அவர்களுடைய வாழ்வாதாரத்தை சுரண்டுவதற்கும் வழி வகுத்துவிடும்.
ரிசர்வ் வங்கி மிகவும் வெளிப்படையான மற்றும் நியாயமான கடன் சூழலை உருவாக்க விரும்புகிறது என்பதையும் அதன் காரணமாக இந்த புதிய வழிகாட்டுதலை வெளியிட்டுள்ளது என்பதையும் நான் புரிந்துகொள்கிறேன். ஆனால் இது "குழந்தையை குளியல் நீரோடு வீசுவது" போன்றதாகும். அதாவது தேவையில்லாத ஒன்றை நீக்குவதாக நினைத்து பயனுள்ள ஒன்றையும் அகற்றிவிடுகிறோம்.
எனவே, நிதியமைச்சர் நகைக்கடனை புதுப்பிக்கும் முறையில் ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள புதிய வழிகாட்டு முறையை திரும்பப் பெற்று, பழைய விதிமுறைகள் பழைய நடைமுறைகள் தொடர உறுதி செய்யுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்று அவர் கூறினார்.
- கூடங்குளம் அணுமின் நிலையம் தென் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது.
- அணுக்கழிவுகளை அணுஉலைக்கு அருகிலுள்ள கடற்கரையைத் தவிர வேறு எங்கும் கொட்டப்போவதில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையத்தில் உள்ள அணுக்கழிவுகள் பாதுகாப்பாக அகற்றுவது குறித்தும், அதன் ஆபத்து குறித்தும் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ பாராளுமன்ற மாநிலங்களவையில் பேசினார்.
நேரமில்லா நேரத்தின்போது வைகோ பேசியதாவது:-
குஜராத் மாநிலத்தில் மிதி-விர்தி கிராமத்திற்கு அருகிலுள்ள பாவ்நகரில் அணுமின் நிலையத்தை நிறுவ ஒன்றிய அரசு ஒரு திட்டம் வகுத்தது. அந்த நேரத்தில், குஜராத் முதல்வராக இருந்த விஜய் ரூபானி குஜராத் மாநிலத்தில் அனுமதி தர மறுத்தார். குஜராத் மாநிலம் இந்திய பிரதமருக்கு சொந்த மாநிலம். எனவே, அவர் குஜராத்தில் அணுமின் நிலையத்தை நிறுவ ஒருபோதும் முயற்சிக்கவில்லை.
நவம்பர் 22, 1988 அன்று, அப்போதைய சோவியத் ஒன்றிய அதிபர் கோர்பச்சேவ் இந்தியாவிற்கு வருகை தந்தபோது, அப்போதைய இந்திய பிரதமர் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ஓர் அறிக்கை வெளியிட்டு உரையாற்றினார்.
அதில், இந்தியாவும் சோவியத் ஒன்றியமும் இணைந்து, இந்தியாவில் அணுமின் நிலையத்தை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதாகக் கூறினார். மக்களவையில், இதுகுறித்து அறிக்கை வெளியிட்டபோது யாரும் எந்த எதிர்ப்பும் தெரிவிக்கவில்லை. ராஜ்யசபாவிலும் யாரும் கேள்வி எழுப்பவில்லை.
இந்திய பிரதமரிடம் இது குறித்து விளக்கம் கேட்ட ஒரே ஒரு உறுப்பினர் நான்தான். அணுமின் நிலையம் அமைக்க நீங்கள் எந்த இடத்தைத் தேர்ந்தெடுத்துள்ளீர்கள் என்று கேட்டேன். பதில் இல்லை. ஆனால் தென் தமிழ்நாட்டின் கடற்கரைப் பகுதியான கூடங்குளத்தில் அணுமின் நிலையத்தை அமைக்க நீங்கள் திட்டமிட்டுள்ளீர்கள் என்று கூறினேன். இதுபற்றி அறிந்ததும் கூடங்குளம் பகுதி பொதுமக்களும், மீனவர்களும் கிளர்ந்தெழுந்தனர்.
அமெரிக்காவின் மூன்று மைல் தீவில் உள்ள அணு உலையிலும், சோவியத் ரஷ்யாவின் செர்னோபிலிலும் அணு உலை பேரழிவுகள் நிகழ்ந்தன. ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தனர். ஜப்பான் புகுஷிமாவில், மார்ச் 11, 2011 அன்று, அணு பேரழிவு ஏற்பட்டு பலர் இறந்தனர். அணுக் கதிர் பாதிப்பால் மக்கள் இன்றும் அவதிப்படுகிறார்கள்.
இந்த உண்மைகளை எல்லாம் மறைக்க முயற்சிக்கிறார்கள். ஏதேனும் பேரழிவு ஏற்பட்டால், தென் தமிழ்நாடு முற்றிலுமாக அழிக்கப்படும்.
கூடங்குளத்தில் அணு மின் நிலையம் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஆயிரக்கணக்கான மீனவ பெண்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்தனர். அவர்கள் 18 மாதங்கள் போராடினர். நானும் மூன்று முறை அந்தப் போராட்டங்களில் கலந்து கொண்டேன். போராட்டம் நடத்திய மக்கள் மீது அப்போதைய மாநில அரசால் குற்றவியல் வழக்குகள் தொடரப்பட்டன. பலர் கைது செய்யப்பட்டனர். போராட்டத்தில் என் மீதும் வழக்குத் தொடுக்கப்பட்டது.
கூடங்குளத்தில் ஏற்கனவே நான்கு அணு உலை அலகுகள் நிறுவப்பட்டுள்ளன. மேலும் இரண்டு அலகுகள் அமைக்க முடிவுசெய்துள்ளனர். மேலும் முழுப் பகுதியும் அணு நரகமாக மாறி வருகிறது.
பேரழிவு ஏற்பட்டால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்படுவார்கள். கற்பனை செய்ய முடியாத அளவு மரணங்கள் நடக்கும்.
இப்போது எழும் முக்கியமான மில்லியன் டாலர் கேள்வி என்னவென்றால், அவர்கள் அணுக்கழிவுகளை பாதுகாப்பாக எங்கே அப்புறப்படுத்தப் போகிறார்கள்? இப்போது அணுக்கழிவுகள் ஆலையிலேயே வைக்கப்பட்டிருக்கிறது. அந்த அணுக் கழிவுகளை கடலில் கொட்டப்போகிறார்கள் என்று நான் அச்சப்படுகின்றேன். ஒரு எரிமலை எங்கள் தலையில் அமர்ந்திருக்கிறது.
இதை எதிர்த்துப் போராடும் பூவுலக நண்பர்கள் அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தது. அதில். அணுமின் நிலையம் 2018ஆம் ஆண்டுக்குள் நிலத்தடி ஆழ்நிலைக் கிடங்கு (DGR) அமைக்க வேண்டும் என்று கூறியது.
அது அமைக்கப்படாததால், பூவுலகின் நண்பர்கள் அமைப்பு மீண்டும் உச்ச நீதிமன்றத்தை அணுகியது. உச்ச நீதிமன்றமானது DGR கட்டுவதற்கு ஏப்ரல் 2022 வரை காலகெடு வழங்கியது. ஆனால் இதுவரை அதற்கான எந்த முயற்சியும் மேற்கொள்ளப்படவில்லை.
கூடங்குளம் அணுமின் நிலையம் தென் தமிழ்நாட்டு மக்களின் தலையில் எரிமலையாக அமர்ந்திருக்கிறது, இந்த அணுக் கழிவுகளை அணுஉலைக்கு அருகிலுள்ள கடற்கரையைத் தவிர வேறு எங்கும் கொட்டப் போவதில்லை. அணுஉலையை நிரந்தரமாக மூட வேண்டும் என்பதுதான் தென் தமிழக மக்களின் கோரிக்கையாகும். அணுமின் நிலையத்தை மூடவும், வரவிருக்கும் பேரழிவிலிருந்து மக்களைக் காப்பாற்றவும் நடவடிக்கை எடுக்குமாறு ஒன்றிய அரசையும், பிரதமர் அவர்களையும் கேட்டுக்கொள்கிறேன்."
வைகோ அவர்கள் இவ்வாறு உரையாற்றினார்.
- “என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு. உள்ளமோ வெள்ளை” என்று எம்.ஜி.ஆரால் பாராட்டிப் போற்றப்பட்டவர்.
- எங்களுக்குள் அரசியலுக்கு அப்பாற்பட்டதோர் இணக்கமான நட்பு பேணப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள்.
சென்னை:
ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
மக்கள் திலகம் எம்.ஜி.ஆரின் தளகர்த்தர்களில் ஒருவரும், அ.தி.மு.க. அமைப்புச் செயலாளரும், ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. முதல் மாவட்டச் செயலாளர் என்கிற பெருமைக்குரிய வருமான ஆருயிர்ச் சகோதரர் வீ.கருப்பசாமி பாண்டியன் இயற்கை எய்தினார் என்ற செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்தேன்.
தமது 26-வது வயதிலேயே ஆலங்குளம் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். தொடர்ந்து பாளையங்கோட்டை சட்டமன்ற உறுப்பினராகவும் மக்கள் பணி ஆற்றியவர்.
"என் தம்பி கருப்பசாமி பாண்டியன் உருவம்தான் கருப்பு. உள்ளமோ வெள்ளை" என்று எம்.ஜி.ஆரால் பாராட்டிப் போற்றப்பட்டவர்.
1980-களில் நானும், அவரும் மாவட்ட அரசியலில் எதிரும் புதிருமாகப் பணியாற்றிய நெருப்புப் பொறி பறந்த காலகட்டத்தில்கூட எங்களுக்குள் அரசியலுக்கு அப்பாற்பட்டதோர் இணக்கமான நட்பு பேணப்பட்டு வந்ததை அனைவரும் அறிவார்கள்.
50 ஆண்டு காலமாக நெல்லை மாவட்ட அரசியல் களத்தில் சிறந்ததோர் ஆளுமையாக வலம் வந்து, நெல்லைச் சீமைத் தொண்டர்களால் "நெல்லை நெப்போலியன்" எனப் போற்றப்பட்ட சகோதரர் வீ.கருப்பசாமி பாண்டியன் மறைவுக்கு ம.தி.மு.க. சார்பில் ஆர்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- பாராளுமன்றத்தில் எனக்கு 24 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது.
- நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன்.
ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று மாநிலங்களவையில் வைகோ பேசினார்.
மாநிலங்களவையில் தொடர்ந்து எம்.பி. வைகோ பேசியதாவது:
நான் பேசியதில் எந்த அன் பார்லிமெண்ட்ரி வார்த்தை இருக்கிறது என்று கேள்வி எழுப்பிய வைகோ திடீரென,
எங்கள் வாழ்வும் எங்கள் வளமும்
மங்காத தமிழ் என்று சங்கே முழங்கு!
எம்பக்கம் புகுந்து வந்துவிடும் இந்தி
எத்தனை பட்டாளம் கூட்டிவரும்?
கன்னங் கிழிபட நேரும்
கட்டாய இந்தியை வெட்டிப் புதைப்போம்
என முழங்கினார்.
இந்த பாராளுமன்றத்தில் எனக்கு 24 ஆண்டுகால அனுபவம் இருக்கிறது. மத்திய அரசின் புதிய கல்விக்கொள்கையை குப்பைத் தொட்டியில்தான் தூக்கி வீச வேண்டும் . புதிய கல்விக்கொள்கையை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம்.
நான் வைகோ. என்னை பேசக்கூடாது என சொல்ல நீங்கள் யார்? நான் அண்ணாவின் இயக்கத்தில் இருந்து வந்தவன். நான் இந்தி திணிப்பு எதிர்ப்பு இயக்கத்தில் இருந்து உருவானவன்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட மாடல் அரசு, இந்தி மொழியை ஏற்காத, புதிய கல்விக் கொள்கையை ஏற்காத மாநிலங்களின் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டி இருக்கிறது.
இவ்வாறு வைகோ பேசினார்.
- மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
- மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா?
மாநிலங்களவையில் எம்.பி. வைகோ பேசியதாவது:
மணிப்பூர் நிலவரம் பற்றி இங்கே ஆழமான விவாதம் நடைபெற்று வருகிறது. மணிப்பூர் மாநிலத்தில் பலாத்காரம், படுகொலைகள் என அனைத்து கொடுமைகளும் அரங்கேறுகின்றன.
எங்களுக்கு உள்ள மில்லியன் டாலர் கேள்வியே பிரதமர் மோடிக்கு மணிப்பூர் செல்வதைத் தவிர வேறு என்ன வேலை இருக்கிறது?
நரேந்திர மோடி Not Prime Minister. அவர் Picnic Minister. ஒவ்வொரு நாடாக செல்கிற நரேந்திர மோடியால் மணிப்பூர் மாநிலத்துக்கு ஏன் செல்ல முடியவில்லை? மணிப்பூர் இந்தியாவின் ஒரு அங்கம் இல்லையா என்று வைகோ பேசினார்.
இதை சபை குறிப்பில் இருந்து நீக்குவேன் என்று மாநிலங்களவை துணைத்தலைவர் கூறினார்.
- பா.ஜ.க. தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள்.
- தி.மு.க. நயவஞ்சகர்கள் அல்ல.
தமிழ்மொழி விஷயத்தில் தி.மு.க. நாடகமாடுவதாக பாராளுமன்றத்தில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.
இதற்கு ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ பதிலடி கொடுத்தார். அவர் கூறியதாவது:-
அவர்கள் (பா.ஜ.க.) தமிழ் நாட்டின் அரசியல் எதிரிகள். அவர்கள் ஏதாவது சொல்ல வேண்டும். தி.மு.க. நயவஞ்சகர்கள் அல்ல. அவர்கள் (பா.ஜ.க.) நயவஞ்சகர்கள்.
இவ்வாறு வைகோ கூறினார்.