search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vallikummi"

    • கும்மி என்பது கொம்மை கொட்டுதல் என இலக்கியம் கூறுகிறது.
    • கொம்மைதான் கும்மியாக திரிந்திருக்கலாம்.

    கொங்கு நாட்டின் மிகவும் தனித்தன்மையாக காணப்படுவது வள்ளிக்கும்மி. கும்மி என்பது கொம்மை கொட்டுதல் என இலக்கியம் கூறுகிறது. கொம்மைதான் கும்மியாக திரிந்திருக்கலாம்.

    வள்ளிக்கும்மி ஆண்கள் தான் ஆடுவார்கள். பெண்கள் ஆடு்ம் கும்மியில் சலங்கை மற்றும் இசைக்கருவி இல்லை. இப்போது பெண்கள் மிகுதியாக கலந்துகொள்ளும் கலையாக கொங்கு நாட்டின் வள்ளிக்கும்மி திகழ்கிறது. கும்மிப்பாடலை ஒருவரே பலமணி நேரம் பாடுவார். ஆண்கள் மட்டுமே வள்ளி கும்மியை ஆடினார்கள் என்று சங்க இலக்கியங்கள் மூலம் அறியலாம்.

    வள்ளிக்கும்மி என்பது முருகன், வள்ளி, பிறப்பு முதல் திருமணம் வரை உள்ள செய்திகளை பாடுவதாக வள்ளிக் கும்மி அமைகிறது. கொங்கு நாட்டின் நாகரிகம், பண்பாட்டை எடுத்துச்சொல்லும் வகையில் வள்ளி கும்மி உள்ளது.

    ஆயற்கலை 64 கலைகளில் முதன்மையானது வள்ளிக் கும்மி. முறையாக பயிற்சி பெற்றே இதனை அரங்கேற்றம் செய்கிறார்கள். 40 நாட்கள் அல்லது 30 நாட்கள் முறையாக பயிற்சி பெற்று அதற்கு முறையாக பூஜை செய்து சலங்கை அணிந்து அரங்கேற்றம் செய்வார்கள். அரங்கேற் றம் என்பது தனக்கு கற்று தந்த ஆசிரியர்களை கவுரவிக் கும் வகையில் அமையும்.

    வள்ளி கும்மி ஆடுவதற்கு முன்னர் முதலில் காப்பு பாடல்களை பாடி துவங்குவார் கள். தண்டபானி, பரிவார தெய்வங்கள், அம்மனை அழைத்து, மன்னர்களை போற்றி என்ன செய்வோம் கன்னிமாரே என்று கிழங்கு எடுக்க போய் அங்கு குழந்தை கிடைக்கும் மகாதேவன் தன்னருளால் வள்ளி குழியிலே கிடக்க நீராட்டி 12 வரிகளிலேயே பெரிய பெண்ணாகி விடுவாள் என்று பாடல்கள் தொடங்கும்.

    குறவர் இனங்களில் பெண்கள் தான் காவல் செய்ய வேண்டும். கிளி விரட்டி விடும் வள்ளி முருகனுக்கு ஏற்ற பெண் என்று வரைந்து கொடுக்கிறார். விநாயகர் பெருமானை அனுப்பி சம்மதம் கேட்டு வள்ளி முருகன் திருமணம் நடக்கிறது. இவ்வாறு கதையில் அமையும். திருமணத்திற்கு மேல் உள்ள கதைகளை பாடிச் செல்ல 2 மாதங்கள் ஆகும் என்று வள்ளி கும்மி ஆடுபவர் கள் மற்றும் பாடுபவர்கள் சொல்கிறார்கள்.

    வள்ளி கும்மி என்பது தமிழர்கள் பண்பாட்டிற்கு பெருமை சேர்ப்பது மட்டுமில் லாமல் உடல் நலமும் நன்றாக இருக்கிறது. மூச்சிப்பயிற்சி போன்றும் இது அமையும். வள்ளி கும்மி ஆடுவதன் மூலம் உடலும் உள்ளமும் சேர்ந்தே பயணிக்கிறது. பாடல், நடனம் என்று இருப்பதால் மனதும் சுத்தமாகிறது. கர்ப்பிணி பெண்களும் இதனை கற்று ஆடுகிறார்கள். அவர்கள் உடல் நலம் ஆரோக்கியமாக இருப்பதை இதன் மூலம் அறிய முடிகிறது.

    இந்த வள்ளி கும்மியை ஆடுவதால் உச்சி முதல் உள்ளாங்கால் வரை ஆரோக்கியமாக இருப்பதாக கூறி வருகிறார் கள். வள்ளி கும்மியாட்டம் பாரம்பரியமான கலைகளில் ஒன்றாகும். 2 ஆயிரம் ஆண்டு களுக்கு முன்பே போற்றப்பட் டது. 2 மணி நேரம் சளைக்காமல் ஆண்களும், பெண்களும் வளைந்து நெளிந்து குனிந்து கைகளை உயர்த்தி தாழ்த்தி ஆடுகிறார்கள்.

    இதனால் உடல் ஆரோக்கியம் மேம்படும் என்று ஆய்வுகள் கூறுகின்றன. அழிவின் விழிம்பு வரை பெற்ற இந்த கலை என்றும் போற்றத்தக்கதாக விளங்கி வருகிறது.

    • வள்ளிகும்மி கலைக்குழு கடந்த 10 ஆண்டுகளாக சோமனூர் பகுதியில் செயல்பட்டு வருகின்றது.
    • கிட்டாம்பா ளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 130 நபர்கள் பங்கேற்றனர்.

    நீலாம்பூர்,

    தமிழரின் பாரம்பரியக்க லைகளை மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புற ஒயிலாட்டம் மற்றும் வள்ளிகும்மி கலைக்குழு கடந்த 10 ஆண்டுகளாக சோமனூர் பகுதியில் செயல்பட்டு வருகின்றது.

    அழிந்து வரும் பாரம்பரிய கலைகளை கொங்கு நாட்டில் மீட்டெடுக்க வேண்டும் என்பதற்காக சங்கமம் நாட்டுப்புற க்கலைக்குழு சோமனூர் பகுதியில் பல்வேறு இடங்களில் அரங்கேற்றத்தை நடத்தியு ள்ளது.

    இதை ஒட்டி 26-வது சங்கமம் நாட்டுப்புற க்கலைக்குழுவின் வள்ளி கும்மி அரங்கேற்றம் நேற்று சோமனூர் அடுத்த காடுவெட்டிபாளையம் விநாயகர்கோவில் வளாகத்தில் நடைபெற்றது.

    கிட்டாம்பா ளையத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் 3 வயது முதல் 65 வயது வரையிலான 130 நபர்கள் கொண்ட ஆண்களும், பெண்களும் தங்களது, வள்ளி கும்மி ஆட்டம் ஆடி திறமையை காட்டினர்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் செந்தில்குமார் பேசியதாவது:-, கொங்கு மண்டலத்தில் உருவான ஒயிலாட்ட கலைகள், வள்ளி கும்மியாட்டகலை, மற்றும் அழிந்து போன பல நாட்டுப்புற கலைகள் பல வருடங்களுக்கு பின் உயிர் பெற்று வருகின்றது.

    நாட்டுபுறக்கலைகள் உயிர்ப்போடு இருந்தால் தான் அந்த நாட்டின் பாரம்பரியம் காப்பாற்றப்படும். இதற்காக ஒவ்வொரு கிராமத்தையும் தத்தெதெடுத்து கலை ஆர்வம் உள்ளவர்களை தேர்வு செய்து ஆறு மாதம் பயிற்சி வழங்கி கலைக்குழு உருக்கி வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் கோவை தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் தளபதி முருகேசன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு 50 ஆயிரம் ரூபாய் வள்ளி கும்மி ஆட்ட கலைக்குழுவுக்கு பரிசு வழங்கினார். சுற்றுவட்டார பகுதியில் இருந்து பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    சோமனூரை சேர்ந்த ஒயிலாட்ட ஆசிரியர் செந்தில்குமார் ஒயிலாட்ட கலையையும் வள்ளிகும்மியாட்ட கலையையும் மீட்டெக்கும் முயற்சியில் பல்வேறு கிராமங்களில் தனது குழுவை அமைத்து வள்ளி கும்மி மற்றும் ஒயிலாட்டக் கலையை அரங்கேற்றி வருகின்றார். கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கலையை ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு கற்று கொடுத்து உள்ளார்.

    இவரது பயிற்சியில் தற்போது சோமனூர் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த கலைஞர்கள் கொங்கு மண்டலத்தின் பல்வேறு இடங்களுக்கு சென்று இந்த பாரம்பரிய கலை நிகழ்ச்சியை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

    ×