என் மலர்
நீங்கள் தேடியது "Vandalur park"
- மனிதகுரங்கு குட்டி தனது தாயுடன் சேர்ந்து செய்யும் சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.
- ஆதித்யா குட்டியை, தாய் குரங்கு எப்போதும் தன்னுடனே வைத்து கவனித்து வருகிறது.
வண்டலூர்:
வண்டலூர் உயிரியல் பூங்காவில் சுமார் 1200-க்கும் மேற்பட்ட பறவைகள், விலங்குகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. கொரோனா கட்டுப்பாடு தளர்வுகளுக்கு பிறகு பூங்காவுக்கு வரும் பார்வையாளர்களின் எண்ணிக்கை பழைய நிலைக்கு திரும்பி வருகிறது.
பூங்காவில் உள்ள மனித குரங்கு ஜோடியான கொம்பி-கவுரிக்கு கடந்த ஆண்டு குட்டி பிறந்தது. இதற்கு பூங்கா ஊழியர்கள் ஆதித்யா என்று பெயர் வைத்து உள்ளனர்.
இந்த மனிதகுரங்கு குட்டி தனது தாயுடன் சேர்ந்து செய்யும் சேட்டை பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. ஆதித்யா குட்டியை, தாய் குரங்கு எப்போதும் தன்னுடனே வைத்து கவனித்து வருகிறது.
இந்த நிலையில் ஆதித்யா மனிதகுரங்கு குட்டிக்கு நேற்று முதல் பிறந்த நாள் ஆகும். இதனை பூங்கா ஊழியர்கள் சிறப்பாக கொண்டாட முடிவு செய்தனர்.
மனித குரங்கு உள்ள இருப்பிடம் அருகே பூங்கா துணை இயக்குனர் காஞ்சனா மற்றும் ஊழியர்கள், பார்வையாளர்களுடன் சேர்ந்து கேக் வெட்டி கொண்டாடினர். அந்த கேக்கில் " முதல் பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஆதித்யா..." என்று எழுதப்பட்டு இருந்தது.
பின்னர் மனிகுரங்கு குடும்பத்துக்கு ஆதித்யாவின் பிறந்த நாள் பரிசாக அதற்கு பிடித்தமான உலர் பழங்கள் நிறைந்த கேக் கொடுக்கப்பட்டது.
அந்த கேக்கை ஆதித்யா குட்டியுடன் சேர்ந்து மனித குரங்குகள் ருசித்து சாப்பிட்டன. இந்த வீடியோ காட்சியை வண்டலூர் பூங்கா தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டு உள்ளது.
சென்னை:
வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு வார இறுதி நாட்கள், பண்டிகை நாட்களில் கூட்டம் அலைமோதும். இங்குள்ள புலி, சிங்கம், கரடி, முதலைகள் போன்ற விலங்குகளை பொதுமக்கள் கண்டு ரசித்து வருகிறார்கள்.
வண்டலூர் பூங்காவில் நுழைவு கட்டணம் பெரியவர்கள், குழந்தைகளுக்கு தனித்தனியாக வசூலிக்கப்படுகிறது. மேலும் பார்வையாளர்கள் கொண்டு வரும் கேமராவுக்கு தனியாக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இந்த நிலையில் கேமரா வசதியுள்ள செல்போன்களுக்கு கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவதாக பார்வையாளர்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக பார்வையாளர்களில் சிலர் கூறியதாவது:-
வண்டலூர் பூங்காவுக்கு செல்ல நுழைவு கட்டணம் செலுத்தி வாங்கினோம். உள்ளே செல்ல முயன்றபோது அங்கிருந்த காவலாளிகள் கேமராவிற்கு கட்டணம் செலுத்த வேண்டும் என்று கூறினார்கள். ஆனால் கேமரா இல்லை என்று தெரிவித்தோம். ஆனால் கேமரா வசதியுள்ள செல்போனை எடுத்து செல்வதால் அதற்கு தனியாக கட்டணம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்தனர்.
இதைகேட்க அதிர்ச்சியாக இருந்தது. கேமராவுக்கும், செல்போன் கேமராவுக்கும் உள்ள வித்தியாசம் என்ன என்று பூங்கா நிர்வாகத்துக்கு தெரியவில்லையா? செல்போன் கேமராவில் ஒரளவுக்குதான் விலங்குகளை ‘ஜூம்’ செய்து படம் பிடிக்க முடியும். கேமரா போன்று படம் பிடிக்க முடியாது.
நாங்கள் ‘செல்பி’ மட்டும் தான் எடுக்கிறோம். அதற்காக செல்போனுக்கு கேமரா கட்டணம் வசூலிக்கப்படுவது எப்படி முறையாகும்?. இவ்வாறு அவர்கள் கூறினார்கள். #VandalurPark
வண்டலூர் பூங்காவில் பொதுமக்கள் பார்வைக்காக புதியதாக 7 வண்ண கிளிகள் வைக்கப்பட்டு உள்ளன.
இதுதொடர்பாக பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
வண்டலூர் பூங்காவில் பொதுமக்களின் பார்வைக்கு புதிய ஏழு பறவை இனங்கள் வைக்கப்பட்டுள்ளது. அவை ‘ஸ்கார்லெட் பஞ்சவர்ண கிளி, கேட்டிலைனா பஞ்சவர்ணகிளி, ஹர்லிகுயின் பஞ்சவர்ண, சீவர் பஞ்சவர்ணகிளி, டஸ்கீ பாய்னஸ், ரூபெல்ஸ் கிளி, அமேசான் ஆரஞ்ச் இறகு கிளி’ ஆகும்.
இப்பறவைகள் பொதுவாக மத்திய மற்றும் தென் அமெரிக்கா நாடுகளில் காணப்படுபவை. இந்த புதிய பறவையினங்கள் சென்னையில் மீட்கப்பட்டு பின்னர் கால்நடை மருத்துவமனையில் தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. #VandalurPark