search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vandebharat"

    • அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ரெயில்தான் வந்தே பாரத்.
    • 50 சதவீதத்துக்குமேல் டிக்கெட் பதிவு செய்யப்படாமல் காலியாக பயணிக்கிறது.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    இந்தியாவில் அதிகப்படியான கட்டணம் வசூலிக்கும் ரெயில்தான் வந்தே பாரத். ஆனால் அந்த ரெயிலில் பல பகுதிகளில் இயங்கும் 50 சதவீதத்துக்குமேல் டிக்கெட் பதிவு செய்யப்படாமல் காலியாக பயணிக்கிறது. இது போன்ற தேவையில்லாத செலவுகளுக்கு பதிலாக சாதாரண மக்கள் அதிகமாக பயன்படுத்தும் ரெயிலில் அடிப்படை கட்டமைப்புகளை வலிமைப்படுத்தி பயன்படுத்தினால் பயனுள்ளதாக இருக்கும்.

    1924-ம் ஆண்டு முதல் இந்திய அரசு பயன்பாட்டில் வைத்திருந்த ரெயில்வே பட்ஜெட் 2016-ம் ஆண்டு மத்திய பா.ஜ.க. அரசு ரத்து செய்து பொதுப் பட்ஜெட் அறிக்கையில் ரெயில்வே துறைக்கான பட்ஜெட்டையும் இணைத்தனர்.

    இந்திய ரெயில்வே தனி பட்ஜெட் இருந்திருந்தால் ரெயில்வேக்களில் இருக்கும் பிரச்சனைகள் குறித்து வெளியே தெரிந்திருக்கும். ஆனால் அவையெல்லாம் பா.ஜ.க. அரசால் மூடி மறைத்ததும் இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளாக ரெயில் விபத்துகள் ஏராளமாக நடைபெறுவதற்கு ஒரு முக்கிய காரணம்.

    பா.ஜ.க. அரசு ஏற்கனவே நடைமுறையில் இருந்த ரெயில்வேக்கான தனி பட்ஜெட் முறையை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டும்.

    காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்பி ரெயில்வேக்களில் தேவையான அடிப்படை வசதிகள் செய்து அதை முறையாக பராமரித்து சாதாரண மக்கள் வசதியாக பயணம் செய்ய தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • உணவு தரமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.
    • விற்பனையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள்.

    நாட்டில் முக்கிய நகரங்களுக்கு இடையே பயணிகள் விரைவாக செல்ல வசதியாக வந்தே பாரத் ரெயில்கள் இயக்கப்படுகின்றன. இதில் சில ரெயில்களில் வழங்கப்படும் உணவு தரமாக இல்லை என விமர்சனங்கள் எழுந்துள்ளது.

    இந்நிலையில் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு சென்ற வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்த ஒரு தம்பதிக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    இதுதொடர்பாக விதித் வர்ஷ்னி என்ற பயணி தனது எக்ஸ் தள பக்கத்தில் செய்துள்ள பதிவில், `கடந்த 18-ந் தேதி எனது மாமாவும், அத்தையும் போபாலில் இருந்து ஆக்ராவுக்கு வந்தே பாரத் ரெயிலில் பயணம் செய்தனர். அப்போது அவர்களுக்கு வழங்கப்பட்ட உணவில் கரப்பான் பூச்சி இருந்தது.

    தயவு செய்து விற்பனையாளருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுங்கள். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நடக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள் என ரெயில்வே அதிகாரிகளை டேக் செய்திருந்தார்.

    அவரது இந்த பதிவு 70 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்வைகளுடன் வைரலாகியது. இதைப்பார்த்த பயனர்கள் பலரும் தங்களது விமர்சனங்களை பதிவிட்டனர்.

    இதைத்தொடர்ந்து ரெயில்வே சார்பில் அவருக்கு அளிக்கப்பட்ட பதிலில், உங்களுக்கு ஏற்பட்ட பயண அனுபவத்திற்காக நாங்கள் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். இந்த விவகாரம் தீவிரமாக பார்க்கப்பட்டு சம்பந்தப்பட்ட சேவை அளித்தவருக்கு தகுந்த அபராதம் விதிக்கப்பட்டது என கூறி உள்ளனர்.

    ×