என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "varun chakravarthy"

    • பவர்பிளேயில் 2 ஓவர்கள், டெத் ஓவர்களில் 2 முதல் 3 ஓவர்கள் வரை பந்து வீசினேன்.
    • மிடில் ஓவர்களில் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் பந்து வீசினேன்.

    சாம்பியன்ஸ் டிராபி தொடர் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்து முடிந்தது. இதன் இறுதிப்போட்டியில் இந்தியா- நியூசிலாந்து அணிகள் மோதின. இதில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த தொடரில் இடம் பிடித்த தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி சிறந்த பந்து வீச்சை வெளிப்படுத்தினார். முதல் 2 லீக் போட்டிகளில் ஆடும் லெவனில் இடம்பெறாத அவர் 3-வது லீக் போட்டி மற்றும் நாக் அவுட் சுற்றில் களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

    இந்நிலையில் ரோகித் சர்மா தன்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார் என்று தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    ரோகித் சர்மா என்னை நன்றாகப் பயன்படுத்திக் கொண்டார். பவர்பிளேயில் 2 ஓவர்கள், டெத் ஓவர்களில் 2 முதல் 3 ஓவர்கள் வரை பந்து வீசினேன். மிடில் ஓவர்களில் விக்கெட் தேவைப்படும் போதெல்லாம் பந்து வீசினேன்.

    இப்படித்தான் என் திறனை அதிகப்படுத்த முடியும் என்று நான் அவரிடம் சொன்னேன், நான் சொல்லாமலேயே அவர் அதைப் புரிந்துகொண்டார். ஏனென்றால் அவர் எல்லா காலத்திலும் சிறந்த கேப்டன்களில் ஒருவர்.

    இவ்வாறு ரோகித் சர்மா கூறினார்.

    • வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது.
    • எனது முதல் ஓவரில் 12 ரன்கள் சென்றது. மார்க்ரம் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார்.

    ஐதராபாத்:

    ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத்தில் நேற்று இரவு நடந்த லீக் ஆட்டத்தில் கொல்கத்தா ரைட்ரைடர்ஸ் அணி 5 ரன்கள் வித்தியாசத்தில் ஐதராபாத்தை வீழ்த்தியது.

    கொல்கத்தா நிர்ணயித்த 172 ரன் இலக்கை நோக்கி விளையாடிய ஐதராபாத் 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 166 ரன்னே எடுத்தது.

    அந்த அணி வெற்றிக்கு கடைசி ஓவரில் 9 ரன்கள் தேவைப்பட்டது. அந்த ஓவரை வீசிய கொல்கத்தா அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3 ரன்கள் மட்டுமே விட்டு கொடுத்து ஒரு விக்கெட்டை கைப்பற்றினார்.

    அவர் 4 ஓவர் வீசி 20 ரன்கள் விட்டு கொடுத்து ஒரு விக்கெட் வீழ்த்தினார். அவர் கொல்கத்தா வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார்.

    வருண் சக்கரவர்த்திக்கு ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டது. அப்போது அவர் கூறியதாவது:-

    எனது இதய துடிப்பு நிமிடத்துக்கு 200-யை தொட்டு விட்டது. ஆனால் நீண்ட தூர பகுதியை மனதில் வைத்து நான் அவர்களுக்கு சவால் அளிக்க விரும்பினேன். அதுதான் எனது திட்டமாக இருந்தது. அது மட்டுமே என் மனதில் இருந்தது. எனது முதல் ஓவரில் 12 ரன்கள் சென்றது. மார்க்ரம் சில அற்புதமான ஷாட்களை விளையாடினார்.

    அதே வேளையில் உங்கள் செயல்பாட்டில் நீங்கள் இருப்பது முக்கியம் உணர்ச்சிகள் எழுந்தவுடன் நமது செயல்முறை மறந்து விடலாம்.

    கடந்த ஆண்டு நான் 85 கி.மீ. வேகத்தில் பந்து வீசினேன். எனவே நான் பல விஷயங்களை முயற்சித்து கொண்டிருந்தேன். அது உண்மையில் உதவுகிறது என்றார்.

    • டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார்.
    • முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

    16-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி மிகவும் விறுவிறுப்பாக இந்தியாவில் பல மாநிலங்களில் நடைபெற்று வருகிறது. சென்னை சேப்பாக்கத்தில் நேற்று லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் - கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதின. இப்போட்டியின் முடிவில் கொல்கத்தா 4 விக்கெட்டுகள் இழப்பிற்கு 147 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் சென்னையை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.

    ஐபிஎல் தொடரில் சேப்பாக்கத்தில் நேற்று நடைபெற்ற ஆட்டம் கடைசி லீக் ஆட்டமாகும். இதனால் போட்டி முடிந்ததும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியினர் மைதானத்தில் திரண்டிருந்த ரசிகர்களுக்கு நன்றிகளை தெரிவித்தனர்.

    இதனையடுத்து, டோனி ரசிகர்களை பார்த்து கையை அசைத்து நன்றி என்று தெரிவித்தார். பிறகு டென்னிஸ் பந்துகளை மைதானத்தில் கூடியிருந்த ரசிகர்கள் மீது வீசினார். இதனால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் டோனியை பார்த்து ஆர்ப்பரிக்க ஆரம்பித்தனர்.

    டோனி மைதானத்தில் தன் அணியினருடன் நடந்து வந்துக்கொண்டிருந்தபோது முன்னாள் கிரிக்கெட் வீரர் சுனில் கவாஸ்கர் ஓடி வந்து தன் சட்டையில் டோனிடம் ஆட்டோகிராப் வாங்கினார்.

    இவரையடுத்து, கொல்கத்தா வீரர்கள் ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் தன் அணி சட்டையை கொண்டு வந்து டோனியிடம் ஆட்டோகிராஃப் பெற்றனர்.

    சமீபத்தில் டோனி இந்த ஐபிஎல் சீசன் முடிந்ததும் விடை பெற்றுவிடுவாரோ என்று சோகத்தில் ஆழ்ந்த ரசிகர்களுக்கு, திடீரென்று லக்னோ அணிக்கு எதிரான லீக் போட்டியில் 'இது எனது கடைசி ஐபிஎல் சீசன் என நான் சொல்லவில்லை' என்று வர்ணனையாளரிடம் தெரிவித்து ரசிகர்களை இன்ப கடலில் ஆழ்த்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    தற்போது ரிங்கு சிங், வருண் சக்கரவர்த்தியும் டோனியிடம் ஆட்டோகிராஃப் வாங்கிய வீடியோ இணையதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.   

    • ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.
    • பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    சென்னை:

    சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சேப்பாக்கத்தில் நடந்த கடைசி லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்சிடம் 6 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது.

    இந்த தோல்விக்கு கொல்கத்தா அணியில் இடம்பெற்ற தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி காரணமாக இருந்தார் அவர் 4 ஓவர் வீசி 36 ரன் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்தினார். ருதுராஜ் கெய்க்வாட், ரகானே ஆகியோரது விக்கெட்டை கைப்பற்றினார்.

    31 வயதான சென்னையை சேர்ந்த வருண் சக்கரவர்த்தி கடந்த காலங்களில் சி.எஸ்.கே. அணி வீரர்களுக்கு வலை பயிற்சி பந்து வீச்சாளராக திகழ்ந்தார்.

    2019-ம் ஆண்டு ஐ.பி.எல். ஏலத்தில் அவரை பஞ்சாப் கிங்ஸ் அணி ரூ.8.4 கோடிக்கு எடுத்தது. பின்னர் 2020-ம் ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அவரை ரூ.4 கோடிக்கு வாங்கியது. வருண் சக்கரவர்த்தி இந்த சீசனில் இதுவரை 19 விக்கெட் கைப்பற்றி உள்ளார். ஒட்டு மொத்தமாக 61 விக்கெட் வீழ்த்தி உள்ளார்.

    இந்த நிலையில் வருண் சக்கரவர்த்தியை ஏலத்தில் எடுக்காதது இன்னும் வருத்தமாகவே இருக்கிறது என்று பயிற்சியாளர் ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    வருண் சக்கரவர்த்தி எங்கள் அணியின் வலை (நெட்) பயிற்சி பவுலராக சில காலங்களில் இருந்தார். அப்போது அவர் எங்களது பேட்ஸ்மேன்களுக்கு தொந்தரவு அளிக்கும் வகையில் பந்து வீசினார். தற்போது ஐ.பி.எல். போட்டியில் அவர் அபாரமாக பந்து வீசி வருகிறார்.

    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ஏலத்தின் போது வருண் சக்கரவர்த்தியை எடுக்க முடியாமல் போனது எங்களுக்கு இன்னும் வருத்தமாகவே இருக்கிறது.

    பல்வேறு அணிகளைச் சுற்றியிருக்கும் தமிழக வீரர்களிடம் விஷயம் இருக்கிறது.

    இவ்வாறு ஸ்டீபன் பிளமிங் கூறியுள்ளார்.

    • ரஜினிகாந்த்துடன் எடுக்கப்பட்ட புகைப்படங்களை வருண் சக்கரவர்த்தி டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.
    • சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒவ்வொரு ஆட்டத்திலும் குறைந்தபட்சம் 1 விக்கெட்டையாவது வீழ்த்தி விடுகிறார். அசத்தலாக சுழற்பந்து வீசி வரும் வருண் சக்கரவர்த்தி, கொல்கத்தா அணியின் வெற்றிக்கு முக்கியப் பங்களித்து வருகிறார்.

    சிஎஸ்கே, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் இடையே 61-வது லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் கடந்த 14-ம் தேதி நடைபெற்றது. நடந்துமுடிந்த இந்த ஆட்டத்தில் வருண் சக்கரவர்த்தி 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.

    இந்நிலையில், வருண் சக்கரவர்த்தி நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளார். இதுதொடர்பாக புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ள அவர்,

    வானத்தில் லட்சக்கணக்கான நட்சத்திரங்களை நாம் தினமும் பார்க்கலாம். ஆனால், சூப்பர் ஸ்டாரை பார்ப்பது வாழ்நாளில் மறக்க முடியாத தருணம். குடும்பத்தில் ஒருவரைப் போல உணர வைக்கும் அளவுக்கு அவர் அன்புடன் பேசினார். லவ் யூ தலைவா" என்று நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டுள்ளார். அவருடன் வெங்கடேஷ் ஐயரும் உடனிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • இந்தியாவுக்கு எதிரான 2வது டி20 போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றது.
    • இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

    கெபேஹா:

    தென் ஆப்பிரிக்கா, இந்தியா அணிகளுக்கு இடையிலான 2-வது டி20 போட்டி கெபேஹாவில் உள்ள செயிண்ட் ஜார்ஜ் பார்க் மைதானத்தில் நடந்தது.

    முதலில் ஆடிய இந்தியா 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 124 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய தென் ஆப்பிரிக்கா 128 ரன்கள் எடுத்து வென்றது. இதனால் தென் ஆப்பிரிக்கா டி20 தொடரை 1-1 என சமன் செய்தது.

    இந்தியாவின் வருண் சக்கரவர்த்தி சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இந்நிலையில், போட்டிக்கு பிறகு இந்திய அணியின் கேப்டன் சூர்யகுமார் யாதவ் பேசியதாவது:

    முதல் பேட்டிங் ஆடும்போது பேட்ஸ்மேன்களால் எந்த ரன்கள் சேர்க்க முடிகிறதோ அதனை ஏற்றுக்கொள்ள வேண்டும்.

    டி20 கிரிக்கெட்டில் 125 ரன்களோ அல்லது 140 ரன்கள் எடுப்பதையோ விரும்பமாட்டோம்.

    இந்திய அணியின் பவுலர்கள் செயல்பட்ட விதம் பெருமையாக உள்ளது. இதுபோன்ற கடினமான சூழலில் ஒரு பவுலர் 5 விக்கெட்டுகளை வீழ்த்தியது அற்புதமான விஷயம்.

    டி20 கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக வருண் சக்கரவர்த்தி கடினமான உழைத்து வருகிறார். அதேபோல் இப்படியான தருணத்திற்காக நீண்ட காலமாக காத்திருந்தார் என்று சொல்ல வேண்டும்.

    மிகச்சிறந்த பவுலிங்கை வருண் சக்கரவர்த்தி வெளிப்படுத்தி இருக்கிறார். இன்னும் 2 போட்டிகள் மீதமுள்ளது என தெரிவித்தார்.

    • வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
    • பட்லர் மட்டும் தாக்குப்பிடித்து 68 ரன்கள் விளாசினார்.

    ஜாஸ் பட்லர் தலைமையிலான இங்கிலாந்து கிரிக்கெட் அணி ஐந்து டி20 மற்றும் மூன்று ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இந்தியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது.

    இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் முதல் டி20 போட்டி கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன் மைதானத்தில் இன்று தொடங்கி நடைபெற்று வருகிறது.

    டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் சூர்யகுமார் யாதவ் பந்து வீச்சை தேர்வு செய்தார். அதன்படி இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் செய்தது.

    பில் சால்ட், பென் டக்கெட் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். பில் சால்ட் ரன்ஏதும் எடுக்காமல் அர்ஷ்தீப் சிங் வீசிய முதல் ஓவரின் 3-வது பந்தில் அட்டமிழந்தார்.

    அடுத்து ஜாஸ் பட்லர் களம் இறங்கினார். 3-வது ஓவரை அர்ஷ்தீப் சிங் வீசினார். இந்த ஓவரின் 5-வது பந்தில் டக்கெட் 4 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.

    அதன்பின் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இங்கிலாந்து ரன் குவிக்க தவறியது. கேப்டன் ஜாஸ் பட்லர் மட்டும் தாக்குப்பிடித்து 44 பந்தில் 68 ரன்கள் எடுத்தார். இவரை வருண் சக்ரவர்த்தி வீழ்த்தினார்.

    ஹாரி ப்ரூக் 17 ரன்னிலும், லிவிங்ஸ்டன் ரன்ஏதும் எடுக்காமலும் வருண் சக்ரவர்த்தி பந்தில் ஆட்டமிழந்தது இங்கிலாந்து அணிக்கு பின்னடைவாக அமைந்தது. கடைசி பந்தில் மார்க் வுட் ரன்அவுட் ஆக இங்கிலாந்து 20 ஓவரில் 132 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது.

    இந்திய அணி சார்பில் அர்ஷ்தீப் சிங், ஹர்திக் பாண்ட்யா, அக்சார் படேல் தலா 2 விக்கெட்டும், வருண் சக்ரவர்த்தி 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    பின்னர் 133 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி பேட்டிங்கை தொடங்கியது.

    • இங்கிலாந்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.
    • இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 2-வது டி20 போட்டி இன்று சென்னையில் நடக்கிறது.

    சென்னை:

    இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடி வருகிறது. இதில் கொல்கத்தாவில் நடந்த முதலாவது போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் எளிதில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த போட்டியில் சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.

    டி20 கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு வரும் வருண் சக்கரவர்த்தி இன்று சொந்த மண்ணான சென்னையில் இன்று இந்திய அணிக்காக முதல் முறையாக விளையாட உள்ளார்.


    இந்நிலையில் நடிகரும் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான விஜயின் படத்தை வருண் சக்கரவர்த்தி அவரது கையில் பச்சை குத்தியுள்ளார். தலைவா படத்தில் வரும் பிரபலமான விஜயின் போஸ்-ஐ அவர் பச்சை குத்தியுள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
    • மொத்தத்தில் இவர் 29 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி இங்கிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பான பந்துவீச்சை பதிவு செய்து வருகிறார். அந்த வகையில், வருண் சக்கரவர்த்தி தொடர்ச்சியான டி20 போட்டிகளில் இந்திய அணிக்காக அதிக விக்கெட்டுகளை எடுத்த சுழற்பந்து வீச்சாளர் என்ற சாதனையை படைத்துள்ளார்.

    கடந்த 2021-ம் ஆண்டு இந்திய அணியில் அறிமுகமான வருண் சக்கவர்த்தி சிறிய இடைவெளிக்கு பிறகு கடந்த ஆண்டு மீண்டும் அணியில் இடம்பிடித்தார். அதன் தொடர்ச்சியாக தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றி அசத்தியுள்ளார்.

    இந்தப் போட்டியில் நான்கு ஓவர்கள் பந்துவீசிய வருண் சக்கரவர்த்தி வெறும் 24 ரன்களை விட்டுக் கொடுத்து ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றினார். இங்கிலாந்து கேப்டன் ஜாஸ் பட்லர் உள்பட ஜேமி ஸ்மித், ஜேமி ஓவர்டன், பிரைடன் கார்சே மற்றும் ஜோஃப்ரா ஆர்ச்சர் ஆகியோரின் விக்கெட்டுகள் அடங்கும்.

    கடந்த ஆண்டு டி20 கிரிக்கெட்டில் ரீ-எண்ட்ரி கொடுத்ததில் இருந்து வருண் சக்கரவர்த்தி பத்து போட்டிகளில் விளையாடி 27 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். இவரது சராசரி 10.96 ஆகும். இதில் சிறந்த பந்துவீச்சாக 17 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை எடுத்தது இடம்பெற்றுள்ளது. மொத்தத்தில் 16 போட்டிகளில் இவர் 29 விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார்.

    இங்கிலாந்து அணிக்கு எதிரான மூன்றாவது டி20 போட்டியில் ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றியதன் மூலம் வருண் சக்கரவர்த்தி இந்தத் தொடரில் மட்டும் பத்து விக்கெட்டுகளை கைப்பற்றியுள்ளார். அந்த வகையில், இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையிலான ஒற்றை டி20 தொடரில் பத்து விக்கெட்டுகளை கைப்பற்றிய முதல் வீரர் என்ற பெருமையை வருண் சக்கரவர்த்தி பெற்றுள்ளார்.

    இதன் மூலம், தொடர்ச்சியாக பத்து டி20 போட்டிகளில் விளையாடி இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய வீரர் என்ற சாதனையை வருண் சக்கரவர்த்தி படைத்துள்ளார். முன்னதாக இந்திய வீரர் குல்தீப் யாதவ் பத்து டி20 போட்டிகள் முடிவில் 25 விக்கெட்டுகளை கைப்பற்றி அதிக விக்கெட்டுகளை எடுத்த வீரராக இருந்தார்.

    • ஐ.சி.சி. டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை வெளியிட்டது.
    • இதில் பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் திலக் வர்மா 2வது இடத்துக்கு முன்னேறியுள்ளார்.

    துபாய்:

    டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது.

    இதில் இந்திய பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 25 இடங்கள் முன்னேறி 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    நேற்று நடந்த இங்கிலாந்துக்கு எதிரான டி20 போட்டியில் வருண் சக்கரவர்த்தி 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதனால் அவர் 5-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

    நேற்று நடந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய இங்கிலாந்து வீரர் ஆதில் ரஷித் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். வெஸ்ட் இண்டீஸ் வீரர் அகில் ஹொசைன் 2வது இடத்திலும், இலங்கை வீரர் ஹசாரங்கா 3வது இடத்திலும் உள்ளனர்.

    பேட்ஸ்மேன்களில் இந்தியாவின் திலக் வர்மா ஒரு இடம் முன்னேறி 2-வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். டிராவிஸ் ஹெட் முதலிடத்திலும், பிலிப் சால்ட் 3-வது இடத்திலும், சூர்யகுமார் யாதவ் 4-வது இடத்திலும் உள்ளார்.

    • டி20 பேட்டர்கள் தரவரிசையில் அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்துள்ளார்.
    • பந்து வீச்சாளர்கள் பட்டியலில் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்திற்கு முன்னேறி உள்ளார்.

    டி20 போட்டிகளில் வீரர்களுக்கான புதிய தரவரிசை பட்டியலை ஐ.சி.சி வெளியிட்டுள்ளது. அதன்படி பந்து வீச்சாளர்கள் பட்டியலில் இந்திய அணியின் சுழற்பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி 3-வது இடத்திற்கு முன்னேற்றம் கண்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் மிகச்சிறப்பாக பந்துவீசி 14 விக்கெட்டுகள் வீழ்த்தியிருந்தார். தரவரிசையில் 6-வது இடத்தில் ரவி பிஷ்னாய், 9-வது இடத்தில் அர்ஷ்தீப் உள்ளனர்.

    அதன்படி டி20 பேட்டர்கள் தரவரிசையில் இந்தியாவின் அபிஷேக் சர்மா 38 இடங்கள் முன்னேறி 2-வது இடத்தை பிடித்து அசத்தியுள்ளார். டாப் 10-ல் மற்ற இந்திய வீரர்களாக 3-வது இடத்தில் திலக் வர்மாவும் 5-வது இடத்தில் சூர்யகுமார் யாதவும் உள்ளர். முதல் இடத்தில் ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் உள்ளார்.

    • டி20-யை விட இது வித்தியாசமான ஃபார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன்.
    • நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை.

    இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் நாளை தொடங்க உள்ளது. அந்தத் தொடருக்காக அறிவிக்கப்பட்ட இந்திய அணியில் கடைசி நேரத்தில் தமிழக வீரர் வருண் சக்கரவர்த்தி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

    இங்கிலாந்துக்கு எதிரான டி20 தொடர்களில் அபாரமாக பந்து வீசி இந்தியாவின் வெற்றிக்கு பங்காற்றினார். அந்த தொடரில் 14 விக்கெட்டுகள் எடுத்த அவர் தொடர்நாயகன் விருது வென்று அசத்தினார்.

    இந்நிலையில் வருண் சக்கரவர்த்தி வித்தியாசமான திறமையைக் கொண்டுள்ளதாகவும் அதனாலேயே அவரை இங்கிலாந்து தொடரில் தேர்ந்தெடுத்துள்ளதாகவும் கேப்டன் ரோகித் சர்மா தெரிவித்துள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    வருண் சக்கரவர்த்தி ஏதோ ஒரு வித்தியாசமான விஷயத்தை அவருக்குள் கொண்டிருக்கிறார் என்பது தெளிவாகத் தெரிகிறது. எனவே நாங்கள் எங்களால் என்ன செய்ய முடியும் என்று பார்க்கிறோம். அதே சமயம் டி20-யை விட இது வித்தியாசமான ஃபார்மட் என்பதை நான் புரிந்துக் கொள்கிறேன்.

    தற்போது நாங்கள் சாம்பியன்ஸ் டிராபியை பற்றி சிந்திக்கவில்லை. ஒருவேளை வருண் இங்கு நன்றாக விளையாடினால் பின்னர் நாங்கள் அதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.

    என்று ரோகித் கூறினார்.

    இதனால் இங்கிலாந்து தொடரில் வருண் சக்கரவர்த்தி ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகமாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×