என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Vattamalai Karai Odai dam"

    • அணையை சுற்றி உள்ள 6 ஆயிரம் ஏக்கர் பூமி பாசனம் பெரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.
    • கோடை காலம் என்பதால் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது.

    வெள்ளகோவில் :

    திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் அருகே உள்ள உத்தமபாளையத்தில் வட்டமலை கரை ஓடை அணை உள்ளது. இந்த அணை 600 ஏக்கர் பரப்பளவில்,27 அடி உயரத்தில், அணையை சுற்றி உள்ள 6 ஆயிரம் ஏக்கர் பூமி பாசனம் பெரும் வகையில் கட்டப்பட்டுள்ளது.

    இந்த அணைக்கு 2021 ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நடவடிக்கையின் பேரில் பரம்பி குளம் ஆழியாறு பாசன திட்ட கிளை வாய்க்காலில் இருந்து வடமலைக்கரை ஓடை அணைக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது. வடமலைக்கரை ஓடை அணைக்கு நீர் வந்த பிறகு கடந்த ஆண்டு 3 முறை பாசனத்திற்காகவும், கால்நடைகளின் குடிநீருக்காகவும் தண்ணீர் திறந்து விடப்பட்டன.தற்போது கோடை காலம் என்பதால் அணையில் நீர்மட்டம் மிகவும் குறைந்து உள்ளது. வட்ட மலைக்கரை ஓடை அணை க்கு தொடர்ந்து நீர் அமராவதி ஆற்றில் இருந்து கொண்டுவர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அதையடுத்து அமராவதி ஆற்றில் இருந்து வட்டமலை கரை ஓடை அணைக்கு தண்ணீர் கொண்டு வர நீர்வள ஆதாரத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது பொதுப்பணித்துறை உதவி பொறி யாளர் நித்தியா, லக்கமநா யக்கன்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் பழனிச்சாமி, ஊராட்சி ஒன்றிய குழு உறுப்பினர் லோகநாதன், வட்டமலை கரை ஓடை அணை சங்கத் தலைவர் பால பூபதி ஆகியோர் உடன் இருந்தனர்.

    • 6-வது ஆண்டாக அணையில் தீப வழிபாடு மேற்கொண்டனர்.
    • ஓடையில் வரும் மழை நீரை நம்பி 6,040 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது.

    வெள்ளகோவில்:

    திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் அருகே 24.75 அடி கொள்ளளவு கொண்ட வட்டமலை அணை உள்ளது. போதிய நீர்வரத்து இல்லாத இடத்தில் கட்டப்பட்ட இந்த அணைக்கு நிரந்தரமாக நீர் வழங்க தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் தொடர்ந்து 6-வது ஆண்டாக விவசாயிகள், பொதுமக்கள், தன்னார்வலர்கள் அணையில் தீப வழிபாடு மேற்கொண்டனர். மொத்தம் 10 ஆயிரத்து 8 தீபங்கள் ஏற்றப்பட்டது. இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-

    1980-ம் ஆண்டு கட்டப்பட்ட இந்த அணையின் இரண்டு கால்வாய்கள் மூலம் 6,040 ஏக்கர் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஓடையில் வரும் மழை நீரை நம்பி அணை கட்டப்பட்டதால் கடந்த 43 ஆண்டுகளில் இரண்டு முறை மட்டுமே பாசனத்திற்காக அணை திறக்கப்பட்டுள்ளது.

    பரம்பிக்குளம்-ஆழியாறு பாசன வாய்க்கால் மூலம் அணைக்கு தண்ணீர் கொண்டு வந்து நிரப்ப வேண்டும். அணை பகுதியில் வளர்ந்து கிடக்கும் சீமை கருவேல மரங்களை தொடர்ந்து வெட்ட வேண்டும். அணையை அசுத்தப்படுத்தி அருகில் உள்ள அரசு மதுபான கடையை மாற்ற வேண்டும். விவசாயம் செழிக்க வேண்டியும் விளக்குகள் ஏற்றப்பட்டன.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×