என் மலர்
நீங்கள் தேடியது "Veeranam Lake"
- கடந்த 3 நாட்களாக வீராணம் ஏரியின் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது.
- கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கூடுதல் தண்ணீர் வருகிறது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும்.
இந்த ஏரி மூலம் 44,856 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது. மேலும் சென்னை மாநகரின் முக்கிய குடிநீர் ஆதாரமாக உள்ளது.
இந்த ஏரிக்கு பருவமழை காலங்களிலும், மேட்டூர் அணை மூலமும் தண்ணீர் வரத்து இருக்கும். இந்த ஆண்டு முன்கூட்டியே திறக்கப்பட்டதால் வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து வழக்கத்தைவிட அதிகமாக இருந்தது.
எனவே, வீராணம் ஏரி கடந்த மாதமே முழு கொள்ளளவான 47.50 அடியை எட்டியது. அதன் பின்னர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வரும் உபரிநீர் வி.என்.எஸ். மதகு வழியாக திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் வீணாக கடலில் கலந்து வருகிறது.
கடந்த 3 நாட்களாக வீராணம் ஏரியின் பகுதியில் கனமழை நீடித்து வருகிறது. அதோடு கொள்ளிடம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக கூடுதல் தண்ணீர் வருகிறது.
எனவே, ஏரியின் பாதுகாப்பு கருதி நீர்மட்டம் 47.50 அடியாக குறைக்கப்பட்டுள்ளது. தற்போது பெய்து வரும் கனமழை காரணமாக வீராணம் ஏரிக்கு அதிகளவு நீர் வந்து கொண்டிருக்கிறது.
எனவே ஏரிக்கு வரும் உபரிநீரான 2 ஆயிரம் கனஅடி நீர் அப்படியே வெளியேற்றப்படுகிறது. இதனால் வீராணம் ஏரி கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வீராணம் ஏரியில் திறக்கப்படும் தண்ணீர் சாலியத்தோப்பு, உசூப்பூர், கடவாச்சேரி, வல்லம்படுகை, ராதவிளாகம், பின்னத்தூர், தில்லைவிடங்கன், வடமூர், தெம்மூர், பரிவிளாகம், சிவாயம், பொன்னாந்திட்டு, நாஞ்சனூர், குமராட்சி, கொளக்குடி, திருநாரையூர், அண்ணாமலை நகர், அண்ணாநகர் உள்பட 30 கிராமங்களில் உள்ள 2,000 ஏக்கர் விளைநிலங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.
இதனால் அந்த பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. விளை நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.
- தஞ்சை மாவட்டம் கீழணைக்கு வரும் நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வருவது வழக்கம்.
- மழைக்காலங்களில் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை உள்ளிட்ட பல்வேறு நீரோடைகள் வழியாகவும் நீர் வரும்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டத்தின் முக்கிய நீராதாரங்களில் ஒன்று வீராணம் ஏரியாகும். இந்த ஏரி காட்டுமன்னார் கோவில் அருகே லால்பேட்டையில் உள்ளது.
காவிரியின் கடைமடை பகுதியில் அமைந்துள்ள இந்த ஏரி, டெல்டா விவசாயிகளுக்கு மிகப்பெரிய நீர் ஆதாரமாக இருந்து வருகிறது. 47.50 அடி முழு கொள்ளளவு கொண்ட இந்த ஏரியின் மூலம் சுமார் 45 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலம் பாசன வசதி பெற்று வருகிறது. இது தவிர சென்னை மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதிலும் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
மேட்டூர் அணையிலிருந்து டெல்டா பாசனத்திற்கு திறந்து விடப்படும் நீர் கல்லணை வழியாக கொள்ளிடம் ஆற்றுக்கு வருகிறது. அதிலிருந்து தஞ்சை மாவட்டம் கீழணைக்கு வரும் நீர் வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு நீர் வருவது வழக்கம். இது தவிர மழைக்காலங்களில் கருவாட்டு ஓடை, செங்கால் ஓடை உள்ளிட்ட பல்வேறு நீரோடைகள் வழியாகவும் நீர் வரும்.
அதன்படி, தற்போது இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக 14.95 கனஅடி நீர் வருகிறது. மேலும் கிளை வாய்க்கால்கள் வழியாக மழைநீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் முழுக் கொள்ளவான 47.50 அடியை நிரப்பாமல் ஏரியின் பாதுகாப்பு கருதி 46.50 அடி நீர் மட்டும் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. சென்னையின் குடிநீர் தேவைக்காக தினமும் 65 கனஅடி நீர் அனுப்பி வைக்கப்படுகிறது. அந்த வகையில் வீராணம் ஏரி இந்த ஆண்டு 6-வது முறையாக நிரம்பியது. இதனால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர்ந்து நீர்வரத்து அதிகரிக்குமேயானால் வெள்ளியங்கால் ஓடை, வி.என்.எஸ். மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றப்படும். வீராணம் ஏரியினை சிதம்பரம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான 47.50 அடியை இன்று காலை எட்டியது.
- வீராணம் ஏரி நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர்.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரி 11 கி.மீ. நீளமும், 4 கி.மீ. அகலமும் கொண்டது. இந்த ஏரியில் 1.46 டி.எம்.சி. நீரினை தேக்கி வைக்கமுடியும். இந்த ஏரியின் முழுக் கொள்ளளவு 47.5 அடியாகும். இந்த ஏரி சென்னையின் முக்கிய ஆதாராமாக திகழ்ந்து வருகிறது. இந்த ஏரியின் மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
இந்த ஏரிக்கு பருவகால மழை மூலமாகவும் காவிரியின் கொள்ளிடத்தில் உள்ள கீழணையில் இருந்து வடவாறு வழியாக நீர் வரும். கடந்த ஆண்டில் மழை பெய்யாத மாதமே இல்லை. இதனால் வீராணம் ஏரிக்கு நீர் வந்து கொண்டே இருந்தது. இதனால் வீராணம் ஏரி கடந்த ஆண்டு மட்டும் 6 முறை நிரம்பியது குறிப்பிடத்தக்கதாகும். இதனை அடுத்து சென்னையில் தடையின்றி குடிநீர் விநியோகம் நடந்தது.
மேலும், ஏரியில் இருந்து திறந்து விடப்பட்ட நீரினால் காட்டுமன்னார்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் நெல் உட்பட பயிர்களின் விளைச்சல் அமோகமாக இருந்தது. இதனால் விவசாயிகள் மகிழ்ச்சியுடன் இருந்தனர். இதனால் விவசாயத் தொழிலாளர்களுக்கும் தொடர்ச்சியான பணிகள் கிடைத்தது. காட்டுமன்னார்கோவில் பகுதிகளில் தற்போது அறுவடை முடிந்த நிலையிலும், வடவாறு வழியாக ஏரிக்கு நீர் வந்து கொண்டே உள்ளது.
இந்நிலையில் வீராணம் ஏரி தனது முழுக் கொள்ளளவான (1.46 டி.எம்.சி.) 47.50 அடியை இன்று காலை எட்டியது. இதனால் வீராணம் ஏரி நிரம்பி விட்டதாக பொதுப்பணித்துறையினர் அறிவித்தனர். இதனால் காட்டுமன்னார்கோவில் பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேலும், சென்னை நகருக்கும் தங்கு தடையின்றி குடிநீர் விநியோகிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.
- கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பியது.
- இந்த ஆண்டு கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கீழணையில் தேக்கப்பட்டு வந்தது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவிலில் வீராணம் ஏரி உள்ளது. கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வருகிறது.
இந்த ஏரியின் மொத்த கொள்ளவு 47.5 அடியாகும். ஏரி மூலம் சுமார் 50 ஆயிரம் ஏக்கர் விளை நிலங்கள் பாசனம் பெறுகின்றன. இங்கிருந்து சென்னைக்கு புதிய வீராணம் திட்டத்தில் குடிநீர் அனுப்பப்படுகிறது.
கடந்த ஆண்டு வீராணம் ஏரி 7 முறை நிரம்பியது. இந்த ஆண்டு கடந்த 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. அது கீழணையில் தேக்கப்பட்டு வந்தது.
கீழணையின் மொத்த கொள்ளளவான 9 அடியில் 4 அடி தேக்கப்பட்டது. இதனை தொடர்ந்து கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு கடந்த 24-ந்தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த தண்ணீர் வீராணம் ஏரியை வந்தடைந்தது.
வினாடிக்கு 900 கன அடி வீதம் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. இதனால் ஏரியில் தற்போது 94 மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது.
இதனால் சென்னைக்கு கூடுதலாக குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 56 கன அடி வீதம் அனுப்பப்பட்டு வருகிறது.
- வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 175 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
- சென்னை குடிநீருக்கு நேற்று மட்டும் 50 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தினந்தோறும் 30 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் உள்ளது வீராணம் ஏரி. இது கடலூர் மாவட்ட மிகப்பெரிய நீராதாரம் ஆகும்.
இந்த ஏரி மூலம் கடலூர் மாவட்ட காவிரி டெல்டா பகுதிகளான காட்டுமன்னார்கோவில், சிதம்பரம், புவனகிரி, வட்டங்களில் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசனம் பெறுகிறது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும். இந்த வீராணம் ஏரியில் இருந்து தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் கடும் வெயிலால் ஏரிக்கு தண்ணீர் வரத்து இல்லாததால் ஏரியில் நீர் மட்டம் குறைந்தது.
இதனையடுத்து கடந்த சில நாட்களாக டெல்டா மாவட்டத்தில் மழை மற்றும் மேட்டூர் தண்ணீர் கொள்ளிடம் ஆறு வழியாக கீழணைக்கு வருகிறது. வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் வரத்து வந்து கொண்டிருக்கிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம் 42.50 அடியாக உள்ளது.
வீராணம் ஏரிக்கு வடவாறு வழியாக விநாடிக்கு 175 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீருக்கு நேற்று மட்டும் 50 கனஅடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் தினந்தோறும் 30 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. இந்த ஏரியில் இருந்து அதனை சுற்றியுள்ள விவசாய பாசன வசதிக்கு தண்ணீர் திறப்பது பற்றி விவசாயிகள் கூட்டம் நடத்தி அவர்கள் தெரிவித்த பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என அதிகாரிகள் கூறினர். மேட்டூரில் இருந்து தண்ணீர் வரத்து வீராணம் ஏரிக்கு வந்து கொண்டிருப்பதால் இன்னும் சில நாட்களில் ஏரியின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டிவிடும் என நீர்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
- வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர்.
- கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் லால்பேட்டையில் வீராணம் ஏரி உள்ளது. இந்த வீராணம் ஏரியில் இருந்து சென்னை குடிநீருக்கு தினமும் தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது.
மேலும் புவனகிரி, ஸ்ரீமுஷ்ணம், லால்பேட்டை உள்ளிட்ட காட்டுமன்னார்கோவிலை சுற்றியுள்ள பல்வேறு விவசாய நிலங்கள் இந்த ஏரியின் மூலம் பாசனம் பெற்று வருகிறது. வீராணம் ஏரியில் அந்த பகுதி மட்டுமல்லாமல் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள மீனவர்கள் இங்கு வந்து மீன்பிடித்து செல்கின்றனர். கடந்த சில நாட்களாக கர்நாடக மாநிலத்தில் கன மழை காரணமாக மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
இந்த நீர் கல்லணையில் இருந்து கொள்ளிடத்திற்கு ஆற்றில் திறந்து விடப்பட்டது. கொள்ளிடம் கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு 298 கனஅடி நீர் வந்து கொண்டு இருக்கிறது. இதனால் வீராணம் ஏரிக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. ஏரியின் முழு கொள்ளளவு 47.50 கன அடி ஆகும். கடந்த மாதத்திலிருந்து வீராணம் ஏரிக்கு நீர் வரத்து வருவதால் ஏரியின் நீர்மட்டம் 42.75 கன அடியாக அதிகரித்தது.
ஏரிக்கு வரும் நீர்வரத்தால் நீர்மட்டம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனால் ஏரியின் நீர்மட்டம் தற்போது 44.80 கன அடியாக உயர்ந்துள்ளது. வீராணம் ஏரியிலிருந்து சென்னை மெட்ரோ குடிநீருக்காக தினமும் 50 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. வீராணம் ஏரியை சுற்றியுள்ள விவசாய நிலத்திற்கு தண்ணீர் திறந்து விடுவது குறித்து விவசாயிகள் கூட்டம் நடத்தப்பட்டு அதன் பின்னர் தண்ணீர் திறக்கப்படும் என விவசாயிகள் மத்தியில் எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ஏரியில் நீர் வரத்து அதிகரித்து வருவதால் இன்னும் ஓரிரு நாட்களில் ஏரியின் முழுகொள்ளளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
- கீழணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது.
காட்டுமன்னார்கோவில்:
கடலூர் மாவட்டம் காட்டு மன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரிக்கு கீழணையில் இருந்து வடவாறு வழியாக தண்ணீர் வருகிறது.
வீராணம் ஏரி மூலம் 44 ஆயிரத்து 865 ஏக்கர் விளைநிலங்கள் பாசன வசதி பெறுகிறது.
இந்த ஆண்டு ஜூன் மாதம் 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டது. கல்லணையில் இருந்து கீழணைக்கு ஜூன் மாதம் 18-ந் தேதி தண்ணீர் திறந்து விடப்பட்டது.
இந்த தண்ணீர் படிப்படியாக கீழணையில் இருந்து கடந்த ஜூன் மாதம் 24-ந் தேதி முதல் வீராணம் ஏரிக்கு திறக்கப்பட்டது.
இந்த தண்ணீர் ஏரியில் திறக்கப்பட்டு தற்போது 45.10அடி தண்ணீர் உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவு 47.50 அடியாகும். ஏரியின் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் வருகிற திங்கட்கிழமைக்குள் ஏரி முழு அளவில் நிரம்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்காக வினாடிக்கு 50 கன அடி தண்ணீர் அனுப்பப்படுகிறது. தற்போது விவசாய பணிகள் நடைபெறாததால் பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படவில்லை.
- வீராணம் ஏரியில் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வரும் நிலையில், நெற்பயிர்கள் கருகுவதால் விவசாயிகள் கவலையடைந்து உள்ளனர்.
- ஏரியிலிருந்து மெட்ரோ நிறுவனம் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் அனுப்பி வருகிறது.
காட்டுமன்னார்கோவில்:
கடலுார் மாவட்டத்தில் விவசாயமே பிரதான தொழிலாக உள்ளது. காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள வீராணம் ஏரி கடைமடை டெல்டா பாசன விவசாயிகளின் வாழ்வாதாரமாக உள்ளது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
பாசன வசதிக்காக பூதங்குடியில் தொடங்கி லால்பேட்டை வரை 32 மதகுகள் உள்ளது. இந்த ஏரியை நம்பி கடைமடை டெல்டா பாசன பகுதியான காட்டுமன்னார்கோவில், கீரப்பாளையம், குமராட்சி, புவனகிரி உள்ளிட்ட வட்டாரங்களில் 50 ஆயிரம் ஏக்கருக்கு மேல் பயிர் சாகுபடி செய்யப்படுகிறது.
ஏரியிலிருந்து மெட்ரோ நிறுவனம் சென்னை மாநகரத்திற்கு குடிநீர் அனுப்பி வருகிறது.
டெல்டா பாசன பகுதியான கந்தகுமரன், நெடுஞ்சேரி, புத்துார், கண்ணங்குடி, மதுராந்தகநல்லுார், பன்னப்பட்டு, சிதம்பரம் உள்ளிட்ட பகுதிகளில் 30 ஆயிரம் ஏக்கரில் விவசாயிகள் ஆடி மாதத்தில் நேரடி நெல் விதைப்பு செய்தனர்.
மேட்டூரிலிருந்து தண்ணீர் வரத்து தற்போது இல்லாத நிலையில், கடும் வெயிலால் ஏரியின் நீர் மட்டம் படிப்படியாக குறைந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர்மட்டம் 38 அடியாக உள்ளது. சென்னைக்கு 454 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்டு வருகிறது. தற்போது முளைவிட்டுள்ள நெற்பயிர்கள் தண்ணீரின்றி கருகி வருவது விவசாயிகளை கவலையில் ஆழ்த்தியுள்ளது.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு வீராணம் ஏரியிலிருந்து தண்ணீர் திறக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். ஆனால், தண்ணீர் திறப்பதை திடீரென ஒத்தி வைத்தனர். இதனால், ஆவலுடன் காத்திருந்த விவசாயிகள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.
வேறு வழியின்றி நெற்பயிர்கள் கருகிய பகுதிகளில் விவசாயிகள் மறு உழவு செய்து விதைப்பு செய்து வருகின்றனர். நெற்பயிர்கள் கருகி வருவதை தடுக்க நேரடி நெல் விதைப்பிற்கு விரைவில் தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- ஏரியில் இருந்து வினாடிக்கு 54 கன அடி நீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
- ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
சேத்தியாதோப்பு:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது. இந்த ஏரியின் முழுகொள்ளளவு 47.50 அடியாகும். இந்த ஏரி மூலம் 44 ஆயிரத்து 856 ஏக்கர் பாசன வசதி பெறுகின்றன. சென்னைக்கு இந்த ஏரியில் இருந்து குடிநீருக்காக தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
மேட்டூர் அணை நீரே வீராணம் ஏரிக்கு முக்கிய நீர் ஆதாரம் ஆகும். மேட்டூர் அணை நீர் கீழணையில் இருந்து வடவாறு வழியாக ஏரிக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும் மழைக்காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதியான அரியலூர், ஜெயங்கொண்டம் பகுதிகளில் இருந்து காட்டாறுகள் மூலம் ஏரிக்கு நீர் வந்து சேரும்.
மேட்டூர் அணையின் நீர் மட்டம் குறைந்து வரும் நிலையில் கடந்த மாதம் கீழணையில் இருந்து 8 அடி தண்ணீர் ஏரிக்கு தொடர்ந்து அனுப்பி வைக்கப்பட்டதால் ஏரியின் நீர் மட்டம் 46 அடி வரை உயர்ந்தது.
இந்த நிலையில் மேட்டூர் அணையின் நீர் மட்டம் வெகுவாக குறைந்ததாலும், கீழணையில் தண்ணீர் இல்லாததாலும், தொடர்ந்து சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வந்ததாலும் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக சரிந்தது.
ஏரியின் நீர் மட்டம் தற்போது 41.85 அடியாக உள்ளது. ஏரியில் இருந்து வினாடிக்கு 54 கன அடி நீர் சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது.
விவசாய பணிகளுக்காக வினாடிக்கு 200 கன அடியும், வி.என்.எஸ்.எஸ். வடிகால் மதகு வழியாக விவசாய பணிகளுக்கு 30 கன அடியும் என மொத்தமாக வினாடிக்கு 284 கன அடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஏரியின் நீர் மட்டம் குறைந்து கொண்ட வருகிறது.
இன்னும் ஒரு வாரம் வரை தான் ஏரியில் தண்ணீர் இருக்கும் என கூறப்படுகிறது . இதனால் சென்னை குடிநீருக்கு தண்ணீர் அனுப்பி வைப்பதில் சிக்கல் ஏற்படும் நிலை உள்ளது.
இந்த நிலையில் ஏரிக்கு மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் கொண்டு வர சிதம்பரம் நீர்வளத்துறை அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருகின்றனர்.
- வடக்கு ராஜன் வாய்க்காலில் விடப்பட்டுள்ள குறைந்தளவு தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்த வயலுக்கு இறைத்து வருகின்றனர்.
- நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் மட்டம் 40.55 அடியாக உள்ளது.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.
டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.
இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.
மழைக் காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.
இந்த நிலையில் சிதம்பரம் நீர் வளத்துறை அதிகாரிகள் கடந்த ஜனவரி மாதம் கீழணையில் வடவாறு வழியாக தண்ணீரை அனுப்பி வைத்து ஏரியை நிரப்பினர். இதன் மூலம் ஏரி 47.50 அடி முழு கொள்ளளவை எட்டியது.
தற்போது ஏரிக்கு நீர் வரத்து இல்லாத நிலையிலும், கடும் வெயிலால் பாதிக்கப்பட்ட சூழலிலும் கீழணையில் தேக்கி வைத்த தண்ணீரை கொண்டு தொடர்ந்து சென்னைக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. கர்நாடகத்தில் இருந்து நீர் வரத்து இல்லாத சூழ்நிலையில் மேட்டூர் அணை கடந்த வாரம் மூடப்பட்டது. இதனால் கீழணைக்கு காவிரி நீர் கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
தற்போது கீழணையில் 6 அடி தண்ணீர் மட்டுமே உள்ளது. இதில் இருந்து வடக்கு ராஜன் வாய்க்காலுக்கு வினாடிக்கு 115 கன அடியும், வடவாற்றில் வினாடிக்கு 203 கன அடியும் தண்ணீர் விடப்பட்டு வருகிறது. வடவாற்றில் விடும் தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து இறைத்து வருவதால் நீர் மட்டம் வெகுவாக குறைந்து வீராணம் ஏரிக்கு தண்ணீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதே போல் வடக்கு ராஜன் வாய்க்காலில் விடப்பட்டுள்ள குறைந்தளவு தண்ணீரை விவசாயிகள் என்ஜின் வைத்து சம்பா பருவ நேரடி நெல் விதைப்பு செய்த வயலுக்கு இறைத்து வருகின்றனர்.
நேற்றைய நிலவரப்படி வீராணம் ஏரியின் நீர்மட்டம் மட்டம் 40.55 அடியாக உள்ளது. இதில் இருந்து சென்னை குடிநீருக்காக வினாடிக்கு 42 கன அடியும், பாசன வாய்க்கால் மூலம் விவசாய பாசனத்துக்கு வினாடிக்கு 106 கன அடி அனுப்பப்பட்டு வருகிறது. நீர் வரத்து இல்லாத நிலையில் சென்னை குடிநீருக்காக தண்ணீர் அனுப்புவது நிறுத்தப்படும் சூழல் உருவாகும்.
கீழணையில் தண்ணீர் இல்லாத நிலை ஏற்பட்டால் வடலூரில் இருந்த பண்ருட்டி வரை உள்ள 100-க்கும் மேற்பட்ட போர்வெல் மூலம் தண்ணீர் எடுக்கப்பட்டு அந்த தண்ணீரை சென்னைக்கு வீராணம் ஏரி தண்ணீரை எடுத்து செல்லும் குழாய்கள் வழியாக செலுத்தி கொண்டு செல்வது என தீர்மானிக்கப்பட்டு உள்ளது.
கடந்த காலங்களில் இது போன்ற பற்றாக்குறை ஏற்பட்ட போது என்.எல்.சி. சுரங்க நீரை பெற்று லாரி மூலம் சென்னைக்கு எடுத்து செலப்பட்டது.
எனவே அடுத்தடுத்து ஏற்படும் நெருக்கடியை கொண்டு சென்னை குடிநீரின் தேவைக்காக இந்த 2 கட்ட பணிகளையும் மேற்கொள்ள தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் (மெட்ரோ வாட்டர்) முடிவு செய்துள்ளனர்.
- கடந்த 1967-ம் ஆண்டு வீராணம் திட்டம் தொடங்கப்பட்டு 235 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது.
- வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கடுமையாக சரிந்து வருகிறது.
காட்டுமன்னார் கோவில்:
கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக விளங்கி வரும் வீரநாராயணன் ஏரி நாளடைவில் வீராணம் ஏரியாக மாறி விட்டது. இந்த ஏரி லால்பேட்டையில் அமைந்துள்ளது. 14 கிலோ மீட்டர் பரப்பளவில் பரந்து விரிந்து காணப்படுகிறது.
5 கிலோ மீட்டர் அகலம் உடைய இந்த ஏரியின் மொத்த நீர் மட்ட அளவு 47.50 அடி. 1461 மில்லியன் கனஅடி தண்ணீரை சேமிக்க முடியும். இந்த ஏரியில் 34 மதகுகள் உள்ளன. இதனால் இந்த ஏரி கடல் போல் ரம்மியமாக காட்சியளிக்கும் இருப்பினும் ஏரியை முழுமையாக தூர்வாராததால் ஏரியின் மட்டத்தில் சற்று வேறுபாடுகள் இருக்கிறது.
மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் கல்லணை, கீழணை வந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு வருகிறது. இது தவிர நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், பெரம்பலூர், செந்துறை, ஆண்டிமடம், ஸ்ரீமுஷ்ணம் ஆகிய பகுதிகளில் பெய்யும் மழைநீரும் கருவாட்டு ஓடை, வெண்ணங்குழி ஓடை வழியாக வருகிறது.
இருப்பினும் பிரதான நீர் வடவாறு வழியாகவே வருகிறது. இந்த ஏரியை நம்பி சுமார் 44 ஆயிரத்து 856 ஏக்கர் நிலங்கள் நேரடியாகவும், 40 ஆயிரத்து 526 ஏக்கர் நிலங்கள் மறைமுகமாகவும் பாசன வசதி பெறுகிறது. சென்னைக்கு குடிநீர் கொண்டு செல்வதற்காக இந்த ஏரியில் கோடை காலத்திலும் தண்ணீர் சேமித்து வைக்கப்படுகிறது.
கடந்த 1967-ம் ஆண்டு வீராணம் திட்டம் தொடங்கப்பட்டு 235 கி.மீ. தொலைவில் உள்ள சென்னைக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டது. பல்வேறு சர்ச்சைகளுக்கு பிறகு இந்த திட்டம் கைவிடப்பட்டு மீண்டும் 2004-ம் ஆண்டிலிருக்து வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு நாளொன்றுக்கு 65 கன அடி குடிநீர் அனுப்பி வைக்கப்படுகிறது.
இந்த ஏரி கடந்த ஆண்டில் 7 முறை நிரம்பியது. இதனால் வீராணம் ஏரியை நம்பியுள்ள விளைநிலங்களில் கடந்த ஆண்டு 3 போகமும் பயிரிடப்பட்டது. மேலும், சென்னைக்கு குடிநீரும் தங்கு தடையின்றி சென்றது. ஆனால், இந்த ஆண்டு இந்த ஏரி ஒரு முறைகூட நிரம்பவில்லை. இதற்கு போதிய மழை இல்லை என்று அதிகாரிகளால் கூறப்படுகிறது. அதேசமயம் ஏரிக்கு நீர் வரத்து வாய்க்கால்கள் துர்ந்து போயுள்ளதே காரணமென விவசாயிகள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் வீராணம் ஏரி வறண்டது.
இந்நிலையில் வீராணம் ஏரியின் நீர்மட்டம் தற்போது கடுமையாக சரிந்து வருகிறது. ஏரியின் நீர்மட்ட அளவான 47.50 அடியில் தற்போது 20.50 அடி நீர் மட்டுமே உள்ளது. குறிப்பாக ஏரியின் கரைப்பகுதியில் மட்டுமே நீர் உள்ளது. ஏரியின் மையப்பகுதி வறண்டு புல் மற்றும் பூண்டு செடிகள் முளைத்துள்ளன. மேலும், மேடாக உள்ள வீராணம் ஏரிக்கரை ஓரங்களும் வறண்டு வருகின்றன.
இதனால் நடப்பு சம்பா பயிரிட போதுமான நீர் கிடைக்காத அபாயம் ஏற்பட்டுள்ளது. நெற்பயிர்களை நாற்று விட்டு நடவு செய்துள்ள நிலையில் வீராணம் ஏரி வறண்டு வருவது விவசாயிகளிடம் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. வீராணம் ஏரி நீர் கிடைக்கவில்லை எனில் நடவு செய்யப்பட்டுள்ள நெற்பயிர்கள் கருகும் அபாயமும் உள்ளது. மேலும், சென்னைக்கு குடிநீர் அனுப்புவதிலும் சிக்கல் ஏற்பட்டு நாளொன்றுக்கு 30 கனஅடி குடிநீர் மட்டுமே அனுப்பப்படுகிறது.
இதே நிலை நீடித்தால், அடுத்த 15 நாட்களுக்குள் வீராணம் ஏரி முழுமையாக வறண்டு போய்விடும். இதனால் நடப்பு சம்பா பயிரிடும் விவசாயிகள் பாதிக்கப்படுவதோடு, சென்னையில் குடிநீர் பிரச்சனை உருவாகும் சூழலும் உருவாகியுள்ளது.
- கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 1,614 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.
- ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடலூர்:
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே வீராணம் ஏரி உள்ளது.
டெல்டா பகுதி விவசாயிகள், விவசாய தொழிலாளர்களுக்கு வாழ்வாதாரமாக இந்த ஏரி விளங்கி வருகிறது. கடலூர் மாவட்டத்தின் மிகப்பெரிய நீர் ஆதாரமாக இந்த ஏரி உள்ளது.
இந்த ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த ஏரியின் முழு கொள்ளளவு 47.50 அடி ஆகும்.
காவிரி நீர் மேட்டூர் அணையில் இருந்து கல்லணைக்கு வந்து அங்கிருந்து அணைக்கரையில் கொள்ளிடம் ஆற்றில் அமைந்துள்ள கீழணைக்கு வரும். கீழணையில் இருந்து வடவாறு வழியாக வீராணம் ஏரிக்கு தண்ணீர் அனுப்பி வைக்கப்படும்.
மழைக்காலங்களில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம், அரியலூர், கடலூர் மாவட்டம் ஸ்ரீமுஷ்ணம் பகுதியில் பெய்யும் மழை செங்கால் ஓடை, கருவாட்டு ஓடை மற்றும் காட்டாறுகள் மூலம் ஏரியை வந்தடையும்.
இந்த ஆண்டு மேட்டூர் அணை தண்ணீர் இல்லாமல் மூடப்பட்டது. இதனால் ஏரிக்கு நீர் வரத்து இல்லாமல் ஏரியின் நீர் மட்டம் வெகுவாக குறைந்தது.
ஈரோடு மற்றும் கீழணைக்கு மேல் பகுதியில் சுமார் 80 கி.மீ. தூரத்தில் உள்ள பகுதிகளில் தொடர் மழை பெய்ததால் நேற்று முதல் கீழணைக்கு வினாடிக்கு சுமார் 3 ஆயிரம் கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
இதனால் 9 அடி உள்ள கீழணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று கீழணையில் இருந்து வடவாறு வழியாக வினாடிக்கு 1,614 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஏரியின் நீர்ப்பிடிப்பு பகுதிகளான அரியலூர், ஜெயங்கொண்டம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் தொடர் மழை பெய்து வருவதால் காட்டாறு மற்றும் செங்கால் ஓடை வழியாக வினாடிக்கு ஆயிரம் கன அடி தண்ணீர் ஏரிக்கு தொடர்ந்து வருகிறது.
மேலும் வீராணம் ஏரி பகுதியில் நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை 6 மணி வரை 8 செ.மீ மழை பெய்துள்ளது.
மேலும் நேற்று காலை முதல் மாலை 4 மணி வரை 4.8 செ.மீ மழை பெய்துள்ளது. இதனால் ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருகிறது. தற்போது ஏரியின் நீர் மட்டம்44.25 அடியாக உள்ளது. கொள்ளிடம் ஆற்றில் இருந்து வீராணம் ஏரிக்கு இன்னும் 3 அடி தண்ணீரை அனுப்பி தேக்கி வைத்தால் மழை பெய்யாவிட்டாலும் எந்த பிரச்சனையும் இல்லாமல் சமாளித்து விடலாம் என அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
வீராணம் ஏரியில் இருந்து சென்னைக்கு குடிநீருக்கு 50 கன அடி தண்ணீர் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. ஏரியின் நீர் மட்டம் உயர்ந்து வருவதால் இப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.