என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "vetrimaaran"

    • தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று சண்டை போட்டு, அந்த மக்களுக்கான விடுதலையை வென்று எடுத்து கொடுப்பவர்கள்.
    • ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு தலைவர் அவர் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னாடி போய் நிற்கிறார்.

    மதுரையில் நடைபெற்றுவரும் மார்க்சிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாட்டில் கலந்துகொண்ட இயக்குநர் வெற்றிமாறன் கூறியதாவது:

    தலைவர்கள் என்பவர்கள் மக்களோடு மக்களாக நின்று சண்டை போட்டு, அந்த மக்களுக்கான விடுதலையை வென்று எடுத்து கொடுப்பவர்கள். அந்த தலைவர்களை நமக்கு தெரியவே இல்லை. அது மாதிரி நமக்கு ஆயிரக்கணக்கான தலைவர்கள் இருக்கிறார்கள். இங்கேயே இருக்கிறார்கள்.

    ஒவ்வொரு ஊரிலும் ஒவ்வொரு தெருவிலும் ஒரு தலைவர் அவர் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன்னாடி போய் நிற்கிறார். அடுத்த தலைமுறையை உருவாக்குகிறார். அடுத்த தலைமுறையும் ஒரு பிரச்சனை என்றால் முன்னால் நின்று கேள்வி கேட்க போகிறார்கள்.

    விடுதலைக்கு முன்பு சினிமா மாணவனாக இருந்த நான் இப்போது ஒரு மார்க்சிஸ்ட் மாணவனாகவும் இருக்கிறேன்.

    எந்த ஒரு சமூக அமைப்பும் மார்க்சிய கட்டமைப்பு மேல் கட்டமைக்கப்படவில்லை என்றால் ஏதோ கட்டத்தில் மக்களுக்கு எதிர்நிலையில் போய் நின்று விடும் என்பது என்னுடைய புரிதலாக உள்ளது.

    இதெல்லாம் 4 ஆண்டுகளில் நான் கற்றுக்கொண்ட விஷயம் என்று கூறினார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ஹரிஷ் கல்யாண் தற்போது `டீசல்’ என்ற படத்தில் நடித்துள்ளார்.
    • இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.

    'பார்க்கிங்', 'லப்பர் பந்து' என தனது அடுத்தடுத்த ஹிட் படங்களை கொடுத்து வருபவர் நடிகர் ஹரிஷ் கல்யாண். துவக்கம் முதலே வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து வரும் ஹரிஷ் கல்யாண் தற்போது `டீசல்' என்ற படத்தில் நடித்துள்ளார்.

    இந்தப் படத்தின் முதல் பாடல் 'பீர் சாங்' ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இந்தப் பாடல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருக்கிறது. ஹரிஷ் கல்யாண் திரைப்பயணத்தில் அதிக பட்ஜெட்டில் உருவான படம் 'டீசல்' என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தப் படத்தின் முதல் பாடலை தொடர்ந்து இரண்டாவது பாடலான தில்லுபரு ஆஜா பாடலை சமீபத்தில் படக்குழு வெளியிட்டது. இப்பாடலை நடிகர் சிலம்பரசன் மற்றும் ஸ்வேதா மோகன் பாடியுள்ளனர். இப்பாடல் மிகவும் வைபாகவும் குத்து பாடலாக அமைந்துள்ளது. இப்பாடலின் வரிகளை ரோகேஷ் மற்றும் ஜிகேபி எழுதியுள்ளனர்.

    இந்த நிலையில் டீசல் படத்தை இயக்குனர் வெற்றி மாறன் சமீபத்தில் பார்த்து படக்குழுவை பாராட்டியதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இப்படமும் மிகப்பெரிய வெற்றி திரைப்படமாக அமையும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    டீசல் திரைப்படத்தை சண்முகம் முத்துசாமி இயக்கியுள்ளார். சான் லோகேஷ் படத்தொகுப்பை மேற்கொண்டுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர்.
    • படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார்.

    வெற்றி மாறன் மற்றும் அனுராக் காஷ்யப் இணைந்து Bad Girl திரைப்படத்தை தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தை வர்ஷா பரத் இயக்கியுள்ளார். இவர் வெற்றி மாறனின் உதவி இயக்குனர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தில் அஞ்சலி சிவராமன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இவருடன் சாந்தி பிரியா, சரண்யா ரவிச்சந்திரன், ஹ்ரிது ஹரூன், டீஜே, சஷங்க் பொம்மிரெட்டிபல்லி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

    படத்தின் இசையை அமித் த்ரிவேடி மேற்கொண்டுள்ளார். இந்த படத்தின் டீசரை படக்குழு சமீபத்தில் வெளியிட்டது. இப்படம் ஒரு டீனேஷ் பெண் வளர்ந்து வரும் சூழலில் அவளுக்கு ஏற்படும் ஆசைகள், கனவுகள், இச்சைகள் அவள் எப்படி இந்த உலகத்தை பார்க்கிறாள், அனுபவிக்கிறாள் என்பதை பற்றி இப்படம் பேசியுள்ளது. திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் ரோட்டர்டாமின் மதிப்பிற்குரிய விருதான NETPAC விருதை இப்படம் வென்றது. திரைப்படத்தின் முதல் பாடலான "ப்ளீஸ் என்ன அப்படி பாக்காதே" பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. இப்பாடலை கேபர் வாசுகி வரிகளில் மாளவிகா மனோஜ் பாடியுள்ளார். திரைப்படம் விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

    • சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார்.
    • வெற்றிமாறன், விஜய்யுடன் இணைவது குறித்து பேசியுள்ளார்.

    தனுஷ் நடிப்பில் 2007ம் ஆண்டு வெளியான பொல்லாதவன் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் வெற்றிமாறன். அதன்பின்னர் ஆடுகளம், விசாரணை, வடசென்னை, அசூரன், விடுதலை உள்ளிட்ட படங்களை இயக்கி ரசிகர்களை கவர்ந்தார். இவர் தற்போது சூரியின் விடுதலை-2 படத்திலும் சூர்யாவின் வாடிவாசல் பட பணிகளிலும் தீவிரம் காட்டி வருகிறார்.




    இந்நிலையில் சென்னையில் நடைபெற்ற தமிழ்த் திரைப்பட பத்திரிகையாளர்கள் சங்கத்தின் விழாவில் வெற்றிமாறன் கலந்து கொண்டார். அப்போது விஜய்யுடன் இணைவது குறித்து வெற்றிமாறன் பேசினார். அவர் பேசியதாவது, மாணவர்களுக்கு விருது வழங்கும் விழாவில் விஜய், அசூரன் பட வசனத்தை பேசியது எனக்கு சந்தோஷம். விஜய்யுடன் பேசிக் கொண்டு தான் இருக்கிறேன். தற்போது விஜய் இரண்டு படங்களில் பிசியாக இருக்கிறார், நானும் விடுதலை-2 மற்றும் வாடிவாசல் படங்களில் பிசியாக இருக்கிறேன். இப்படங்களின் பணிகள் முடிந்த பிறகு கண்டிப்பாக விஜய்யுடன் விரைவில் இணைவேன் என்றார்.

    • ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.
    • இப்படம் ஏப்ரல் 4 வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கள்வன். ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியிடுவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில் இப்படத்தின் டிரெயிலர் வெளியிடும் விழா இன்று காலை சென்னையில் நடைப்பெற்றது. இவ்விழாவில் நடிகர் ஜி வி பிரகாஷ், இவானா, இயக்குனர் வெற்றி மாறன் மற்றும் படக்குழுவினர் கலந்துக் கொண்டனர். கள்வன் படத்தின் டிரெயிலர் 11.30 மணி அளவில் வெளியானது.

    படத்தின் டிரெயிலர் மிகவும் விறுவிறுப்பாக அமைந்துள்ளது. ஊரினுள் யானை நழைந்ததாக தகவல் வருகிறது அதனால் யாரும் காட்டுப் பகுதிக்குள் செல்ல வேண்டாம் என வனத்துறை எச்சரிக்கின்றனர். அக்காட்டுப் பகுதியில் காவல் நிப்பதற்கு யாரும் முன்வரவில்லை.

    அப்பொழுது கதாநாயகனான ஜி வி பிரகாஷ் மற்றும் அவன் கூட்டாளியான தீனா காட்டு பகுதிக்குள் காவலுக்காக செல்கின்றனர் அதற்கடுத்து அவர்களுக்கு என்ன ஆனது, காட்டில் இருந்து அவர்கள் எப்படி யானையிடம் இருந்து மீண்டு வந்தனர் என்பதே மீதிக்கதை.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • யூ ட்யூபில் இதுவரை 2.5 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது கள்வன் படத்தின் டிரெயிலர்.
    • இந்நிலையில் படத்தின் பாடலான 'அட கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது.

    ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் வெளியாக இருக்கும் படம் கள்வன். ஜனவரி மாதம் இப்படத்தின் டீசர் வெளியானது. பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படம் ஏப்ரல் 4 வெளியாகவுள்ளது.

    டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

    படத்தின் டிரெயிலர் கடந்த வாரம் வெளியிடப்பட்டது. படத்தின் டிரெயிலருக்கு மக்களிடையெ மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. யூடியூபில் இதுவரை 2.5 மில்லியன் வியூஸ்களை அள்ளியுள்ளது கள்வன் படத்தின் டிரெயிலர்.

    இந்நிலையில் படத்தின் பாடலான 'அட கட்டழகு கருவாச்சி' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இப்பாடல் வெளியானபோதே  மிக ஹிட்டாகியது. தற்பொழுது இப்பாடலின் வீடியோ வெளியிடப்பட்டதால் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    இப்பாடலின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
    • ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    ஒளிப்பதிவாளர் பி வி ஷங்கரின் இயக்கத்தில் ஜி.வி பிரகாஷ் நடிப்பில் ஏப்ரல் 4 வெளியாகிய படம் கள்வன். பாரதிராஜா, இவானா மற்றும் தீனா முன்னணி கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    டில்லி பாபு இப்படத்தை தயாரித்துள்ளார். ஜி வி பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ராட்சசன், மரகத நாணயம், முண்டாசுப்பட்டி படத்திற்கு ஒளிப்பதிவு செய்தவர் இப்படத்தின் இயக்குனரான பி.வி.ஷங்கர் என்பது குறிப்பிடத்தக்கது.

    படம் வெளியான நிலையில் மக்களிடையே கலந்த விமர்சனத்தை பெற்று வருகிறது

    இந்நிலையில் படத்தின் பாடலான 'பேசாம பேசும் கண்' வீடியோ பாடல் வெளியிடப்பட்டுள்ளது. இதனால் ரசிகர்களிடம் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இப்பாடலின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ‘போகும் இடம் வெகுதூரமில்லை’
    • படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'போகும் இடம் வெகுதூரமில்லை' படத்தில் விமல், கருணாஸ், வேல ராமமூர்த்தி, ஆடுகளம் நரேன், அருள்தாஸ், தீபாசங்கர் உள்பட பலர் படத்தில் நடித்துள்ளனர்.

    ரகுநந்தன் இசையமைத்துள்ளார். படம் பற்றி மைக்கேல் கே.ராஜா கூறியதாவது:-

    மந்திரி குமாரி படத்தில் இடம் பெற்ற வாராய் நீ வாராய் என்ற பாடலில் இடம்பெற்ற போகும் இடம் வெகு தூரமில்லை என்ற பாடல் வரிகளை தலைப்பாக எடுத்தோம். படத்துக்கு இந்த தலைப்பு பொருத்தமாக அமைந்தது.

    விமல் ஆம்புலன்ஸ் டிரைவர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தெருக்கூத்து கலைஞராக கருணாஸ் நடித்துள்ளார். அரசியல் புள்ளி ஒருவர் இறந்துவிட அவரது உடலை ஏற்றிக்கொண்டு அவர் சொந்த ஊரான நெல்லை மாவட்டம் களக்காடை நோக்கி சென்று கொண்டிருக்கிறார் விமல்.

    ஆம்புலன்ஸ் சென்று கொண்டிருக்கும் நிலையில் விமல் மனைவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அந்த மன அழுதத்தில் அரசியல் பிரமுகர் உடலை ஏற்றி சென்று கொண்டிருக்கும் விமல் ஆம்புலன்சை வழிமறித்து கருணாஸ் ஏறுகிறார். மன அழுத்தத்தில் சென்று கொண்டிருக்கும் விமலின் அருகில் அமர்ந்து கொண்ட கருணாஸ் வள வளவென பேசிக் கொண்டே வருகிறார். இது ஒருபுறமிருக்க மரணமடைந்த அரசியல் புள்ளிக்கு இரண்டு மனைவிகள். இருவருக்கும் ஆளுக்கொரு ஆண் பிள்ளைகள். இவர்களால் யார் தனது தந்தைக்கு இறுதி சடங்கு செய்வது என்பது பற்றி குடும்பத்தில் தகராறு ஏற்படுகிறது.

    இதையொட்டி நடந்தது என்ன? என்பது தான் படத்தின் கதை. படத்தின் டிரெய்லர் வெளியாகி வலைதளங்களில் வரவேற்பை பெற்றுள்ளது. இத்திரைப்படம் மே அல்லது ஜூன் மாதத்தில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கருடன் படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார்.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கருடன் திரைப்படம் மே மாதம் ரிலீசாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டுள்ளது. எனினும், எந்த தேதியில் வெளியாகும் என்று போஸ்டரில் குறிப்பிடப்படவில்லை. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

     


    கருடன் படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் கே. குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • 2002 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அமீர்.
    • வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்.

    2002 ஆம் ஆண்டு சூர்யா மற்றும் திரிஷா இணைந்து நடித்து வெளியான மௌனம் பேசியதே திரைப்படத்தை இயக்கி தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமாகினார் அமீர். அதைத் தொடர்ந்து ஜீவா நடிப்பில் வெளிவந்த ராம் திரைப்படத்தை இயக்கினார்.

    மேலும் 2007 ஆம் ஆண்டு நடிகர் கார்த்தியின் முதல் படமான பருத்தி வீரன் திரைப்படத்தை இயக்கினார். இப்படம் அமீருக்கு மிகப் பெரிய பேரும் புகழையும் சம்பாதித்து கொடுத்தது. அதைதொடர்ந்து சிலப் படங்களில் கவுரவ தோற்றத்திலும், முக்கிய கதாப்பாத்திரத்திலும் நடித்து வந்தார்.

    2009 ஆம் ஆண்டு வெளிவந்த யோகி திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்தார். வெற்றி மாறன் இயக்கத்தில் வெளிவந்த வட சென்னை திரைப்படத்தில் ராஜன் என்ற கதாப்பாத்திரத்தில் நடித்து மக்கள் மனதில் பதிந்தார்.

    நேற்று வெளியான உயிர் தமிழுக்கு திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இப்படம் மக்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது. அப்படத்திற்கான கொடுத்த நேர்காணலில் வாடிவாசல் திரைப்படத்தின் சுவாரசிய தகவல்களை கூறியுள்ளார்.

    தமிழ் சினிமாவில் முக்கிய இயக்குனர்களுள் வெற்றிமாறன் தவிர்க்க முடியாதவர். அவர் அடுத்ததாக விடுதலை 2 படத்திற்கு பிறகு சூர்யா நடிப்பில் வாடிவாசல் என்ற படத்தை இயக்கவுள்ளார். இப்படத்தை குறித்து எதிர்பார்ப்புகள் ரசிகர்கள் மத்தியில் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே போகிறது.

    சமீபத்தில் நடந்த நேர்காணலில் அமீர் கூறியதாவது " படத்தின் படப்பிடிப்பு பணிகள் விரைவில் தொடங்கவுள்ளதாகவும். படம் திட்டமிட்ட படியே நடக்கும் எனவும், வெற்றிமாறன் விடுதலை பாகம் 2 வேலைகளில் பிசியாக இருப்பதால் அதை முடித்துவிட்டு வாடிவாசல் திரைப்படத்தை இயக்கவுள்ளார் என்றும் , முழுக்க முழுக்க ஹீரோவுடன் பயணிக்கும் வில்லன் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறேன், பல ஆண்டுகளுக்கு பிறகு சூர்யாவுடன் இணையும் தருணத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கிறேன்" என கூறியுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • கருடன் படத்தை இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார்.
    • இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    'கருடன்' திரைப்படத்தில் பிரபல நடிகர் சசிகுமார் கதாநாயகனாக நடித்து வருகிறார். இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கும் கருடன் திரைப்படத்தில் உன்னி முகுந்தன், சமுத்திரக்கனி, மைம் கோபி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தில் நகைச்சுவை வேடத்தில் சூரி நடிக்கிறார்.

    இந்த படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், கருடன் திரைப்படம் மே 31 ஆம் தேதி ரிலீசாகும் என படக்குழு புதிய போஸ்டர் வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


     

    கருடன் படத்தை லார்க் ஸ்டூடியோஸ் மற்றும் கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி சார்பில் கே. குமார் தயாரிக்கிறார். இந்த படத்தின் கதையை இயக்குநர் வெற்றிமாறன் எழுதியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • எஸ்.பி. சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.
    • இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார்.

    'காக்கா முட்டை' ,'விசாரணை', 'கொடி' ,'வட சென்னை' உட்பட பல வெற்றி படங்கள்ளை தயாரித்த கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பனி பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் உடன் இணைந்து தயாரிக்கும் புதிய படம் "மாஸ்க்". இந்த படத்தின் மூலம் நிர்வாக தயாரிப்பாளர் எஸ்.பி. சொக்கலிங்கம்  தயாரிப்பாளராக அறிமுகமாகிறார்.

    இத்திரைப்படத்தை விகர்ணன் அசோக்  இயக்குகிறார். இவர் 'தருமி' என்ற குறும்படத்திற்காக தனியார் நிறுவனம் வழங்கிய சிறந்த குறும்படத்திற்கான கோல்ட் மெடல் விருதை பெற்றுள்ளார்.

    இத்திரைப்படத்தின் கவின் கதாநாயகனாக நடிக்கிறார். இவருடன் ஆண்ட்ரியா, சார்லி, ருஹானி ஷர்மா, பாலா சரவணன், வி.ஜே. அர்ச்சனா, சந்தோஷ் மற்றும் பலர் நடிக்கிறார்கள்.

    இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். ஆர்.டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், ராமர் படத்தொகுப்பு கவனிக்கிறார், கலை இயக்குனராக ஜாக்கியும் ,ஆடை வடிவமைப்பாளர்களக பூர்த்தி மற்றும் விபின் ஆகியோரும் பணியாற்றுகின்றனர். மாஸ்க் திரைப்படம் பூஜையுடன் துவங்கியது. இந்த படத்தின் படப்பிடிப்பு மே மாத இறுதியில் சென்னையில் துவங்குகிறது.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    ×