என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Villivakkam"

    • பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
    • இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன

    பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் முதல்கட்டமாக ஏப்ரல் 19-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.

    இந்நிலையில், சென்னை வில்லிவாக்கம் அருகே அரியானா மாநிலத்தில் இருந்து வந்த கண்டெய்னர் லாரியை தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர்.

    அந்த கண்டெய்னர் லாரியில் உரிய ஆவணங்கள் இன்றி 500க்கும் மேற்பட்ட மூட்டைகளில் கொண்டு வரப்பட்ட பாஜக கொடிகள், தொப்பிகளை பறக்கும்படை அதிகாரிகள் கைப்பற்றினர்.

    இதனை அடுத்து லாரியில் இருந்த நபர்களையும் ஓட்டுநரையும் காவல் நிலையம் அழைத்துச் சென்று காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    வடசென்னை மற்றும் தென் சென்னை பாஜக வேட்பாளர்களுக்காகவும் மத்திய சென்னையில் திறக்கப்பட உள்ள அலுவலகத்திற்காக இந்த பொருட்கள் கொண்டுவரப்பட்டது என்று காவல்துறையினரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. 

    • வில்லிவாக்கத்தில் இருந்து மாதவரம் பணிமனையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன.
    • வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட மினி பஸ் தடம் எண்கள் எஸ்43, எஸ்44 பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும்.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்து பிராட்வே, அண்ணாசாலை, திருவல்லிக்கேணி, அம்பத்தூர், ஆவடி, பட்டினப்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளுக்கு மாநகர பஸ்கள் இயக்கப்பட்டு வந்தது.

    அப்பகுதியில் வில்லிவாக்கத்தில் இருந்து மாதவரம் பணிமனையை இணைக்கும் வகையில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் சாலையின் ஒரு புறம் இருந்த வீடு மற்றும் கடைகள் அகற்றப்பட்டு சாலை விரிவாக்க பணிகளும் மெட்ரோ ரெயில் பணிகளும் நடைபெறுவதால் அந்த வழியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டு உள்ளது.

    இதனால் வில்லிவாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் பஸ்கள் மேற்கு மாட வீதி வழியாக வில்லிவாக்கம் பஸ் நிலையத்திற்கு வரும் போது கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது.

    இதைத்தொடர்ந்து மெட்ரோ ரெயில் பணிகள் முடியும் வரை வில்லிவாக்கம் பஸ்நிலையம் தற்காலிகமாக ஐ.சி.எப். ரெயில்வே முன்பதிவு மையத்தை ஒட்டியுள்ள சர்வீஸ் சாலையில் மாற்றப்பட்டுள்ளது. இதனால் வில்லிவாக்கத்தில் இருந்து செல்லும் பஸ்கள் தற்போது ஐ.சி.எப். பஸ்நிலையத்தில் இருந்து புதிய ஆவடி சாலைவழியாக சென்று நாதமுனி வழியாக வில்லிவாக்கம் வந்து மீண்டும் வழக்கமான வழித்தடத்திலேயே செல்லும் என்று போக்குவரத்து துறை அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

    இது தொடர்பாக மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெற உள்ளதால் இந்த பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்ட 7 வழித்தடங்களின் 63 பஸ்கள் தற்காலிகமாக நேற்று முதல் ஐ.சி.எப். பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    அதன்படி தடம் எண். 20, 27டி, 23வி ஆகிய பஸ்கள் ஐ.சி.எப். பஸ் நிறுத்தத்தில் இருந்து புறப்பட்டு புதிய ஆவடி சாலை வழியாக நாதமுனி சென்று 'யூ டர்ன்' எடுத்து வில்லிவாக்கம் (கல்பனா) பஸ் நிறுத்தம் வழியாக அதன் அடிப்படை வழித்தடத்திலேயே இயக்கப்படும்.

    வில்லிவாக்கத்தில் இருந்து இயக்கப்பட்ட மினி பஸ் தடம் எண்கள் எஸ்43, எஸ்44 பயணிகள் வசதிக்காக வழக்கம் போல் வில்லிவாக்கம் பஸ் நிலையத்தில் இருந்தே இயக்கப்படும். தடம் எண்.22 வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட பஸ் வழித்தடம் நீட்டிக்கப்பட்டு கொரட்டூர் வரையும், தடம் எண். 63 திருவேற்காடு முதல் வில்லிவாக்கம் வரை இயக்கப்பட்ட பஸ் தடம் நீட்டிக்கப்பட்டு ஐ.சி.எப். வரை இயக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    வில்லிவாக்கத்தில் கல்லூரி மாணவர்களை தாக்கி பணம்-செல்போன் பறிப்பு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    அம்பத்தூர்:

    நங்கநல்லூரைச் சேர்ந்தவர் ஷியாம்சுந்தர். இவரது நண்பர் வெங்கடேஷ்குமார். இருவரும் கல்லூரி மாணவர்கள்.

    நேற்று இரவு ஷியாம்சுந்தர், வெங்கடேஷ்குமாருடன் வில்லிவாக்கத்தில் உள்ள தனது பாட்டி வீட்டுக்கு சென்றார்.

    பின்னர் இருவரும் வீட்டுக்கு புறப்பட்டனர். அயனாவரம் ஜாயிண்ட் ஆபீஸ் அருகே உள்ள செல்போன் கடைக்கு சென்றபோது 2 மோட்டார் சைக்கிளில் 4 பேர் கும்பல் ஷியாம்சுந்தர், வெங்கடேஷ்குமாரை தாக்கினர்.

    பின்னர் 2 பேரையும் மோட்டார் சைக்கிளில் ஏற்றி வில்லிவாக்கம் ரெயில் நிலையம் அருகே காலி மைதானத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு கல்லூரி மாணவர்களை தாக்கி செல்போன், பணம், மோதிரத்தை பறித்து கொண்டு தப்பி விட்டனர்.

    இதுகுறித்து ஐ.சி.எப். போலீசில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள்.

    வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அருகே உள்ள ரெட்டி தெருவில் தனியார் வங்கியின் ஏ.டி.எம். மையம் உள்ளது.

    அப்பகுதியில் நேற்று நள்ளிரவு 1.30 மணிக்கு போலீசார் ரோந்து சென்றனர். அப்போது ஏ.டி.எம். மையத்துக்குள் சென்று சோதனை செய்தனர். அங்கு ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு இருந்தது. மையத்தின் முன்பக்க கண்காணிப்பு கேமரா உடைக்கப்பட்டும் உள்ளே இருந்த கேமரா திருப்பி வைக்கப்பட்டும் இருந்தது. இதையடுத்து கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    அதில், 4 பேர் தலையில் ஹெல்மெட் அணிந்தபடி வந்து கேமராவை உடைப்பது தெரிந்தது. அவர்கள் கடப்பாறையால் ஏ.டி.எம். எந்திரத்தை உடைத்துள்ளனர். ஆனால் பணம் இருந்த பகுதியை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பினர்.

    இதுகுறித்து போலீசார் வழக்குபதிவு செய்து 4 பேர் கும்பலை தேடி வருகிறார்கள். வில்லிவாக்கம் போலீஸ் நிலையம் அருகே ஏ.டி.எம்.மில் கொள்ளை முயற்சி நடந்து இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சென்னை வில்லிவாக்கத்தில் ஓட்டலில் ஏற்பட்ட தகராறில் 2 பேரை ஓட ஓட விரட்டி தாக்கிய கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
    வில்லிவாக்கம்:

    வில்லிவாக்கம் சிட்கோ நகரைச் சேர்ந்தவர்கள் சதீஷ், சிவா. ஏ.சி. மெக்கானிக். இவர்கள் நேற்று இரவு வில்லிவாக்கம் நாதமுனி அருகே உள்ள ஓட்டலில் சாப்பிட்டனர். அப்போது அங்கு சாப்பிட்டுக் கொண்டிருந்த வில்லிவாக்கம் பாரதி நகரைச் சேர்ந்த கிஷோருக்கும், சதீசுக்கும் தகராறு ஏற்பட்டது. உடனே கிஷோர், அவரது நண்பர்கள் ஆகாஷ், ரஞ்சித், விஜய், கார்த்தி ஆகிய 5 பேர் உருட்டு கட்டையால் சதீஷ், சிவாவை நடுரோட்டில் ஓட ஓட விரட்டி சரமாரியாக தாக்கினார்கள். தப்பி ஓடி குடியிருப்பில் புகுந்த இருவரையும் துரத்தி தாக்கினர்.

    படுகாயம் அடைந்த 2 பேரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து கிஷோர் உள்பட 5 பேரை கைது செய்தனர்.
    வில்லிவாக்கத்தில் தலையில் இரும்பு குண்டு விழுந்து உடற்பயிற்சி கூடத்தில் பள்ளி மாணவர் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    அம்பத்தூர்:

    வில்லிவாக்கம் அகத்தியர் நகர் 34-வது தெருவைச் சேர்ந்தவர் சுரேஷ். பாடியில் உள்ள மின் வாரிய அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார்.

    இவரது மகன் மோகன சுந்தரம் (வயது15). வில்லிவாக்கம் சிட்கோ நகரில் உள்ள தனியார் பள்ளியில் 10-ம் வகுப்பு முடித்திருந்தார். இறுதித் தேர்வில் 427 மதிப்பெண் வாங்கி இருந்தார்.

    மோகனசுந்தரம் கடந்த 2 வாரமாக வில்லிவாக்கத்தில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் உடற்பயிற்சி செய்து வந்தார்.

    நேற்று இரவு 8 மணியளவில் அவர் உடற்பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது வலுதூக்கும் குண்டு அவரது தலையில் விழுந்தது. இதில் காயம் அடைந்த அவரை உடற்பயிற்சி கூட உரிமையாளர் வினோத்குமார் அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதித்தார். அங்கு சிகிச்சை பலனின்றி மோகனசுந்தரம் பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து வில்லிவாக்கம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத்கமால், சப்- இன்ஸ்பெக்டர் சத்தியபாமா ஆகியோர் வழக்குப்பதிவு செய்து உடற்பயிற்சி கூட உரிமையாளர் வினோத் குமாரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    ×