என் மலர்
நீங்கள் தேடியது "Virat Kholi"
- இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும்.
- அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.
இந்தியா- வங்காளதேச அணிகள் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய நேரப்படி இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 கிரிக்கெட் போட்டியை வரை இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. மேலும் வங்காளதேச அணிக்கெதிராக விராட் கோலி சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 90-க்கு மேல் வைத்துள்ளார்.
இந்த நிலையில் வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷாகி் அல் ஹசன் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.
விராட் கோலி குறித்து ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது:-
இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும். தனி நபராக இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளா்ர. அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.
இவ்வாறு ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.
- வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இந்தியாவின் பும்ரா 4 விக்கெட், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.
சென்னை:
இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவரில் 376 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அஷ்வின் 113 ரன்னும், ஜடேஜா 86 ரன்னும் குவித்தனர்.
வங்கதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 5 விக்கெட் வீழ்த்தினார்.
இதையடுத்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் 32 ரன் எடுத்தார்.
இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.
227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 81 ரன்கள் அடித்துள்ளது. கில் 33 ரன்னும், பண்ட் 12 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியா 308 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
2-வது இன்னிங்சில் களமிறங்கிய விராட் கோலி 17 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.
இந்நிலையில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 12,000 ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவர் 243 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.
முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.
விராட் கோலி 243 இன்னிங்ஸ், சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ், குமார் சங்ககரா 269 இன்னிங்ஸ், காலிஸ் 271 இன்னிங்ஸ், ரிக்கி பாண்டிங் 275 இன்னிங்ஸ்.
உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்பரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்று தொடங்கி வரும் ஜூலை மாதம் 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.


27-வது ரன்னை எடுத்தபோது கேப்டன் பதவியில் கோலி 4 ஆயிரம் ரன்னை தொட்டார். 66 இன்னிங்சில் அவர் இந்த ரன்னை எடுத்தார். இதன்மூலம் கேப்டன் பதவியில் 4 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்தவர் என்ற சாதனையை கோலி படைத்தார். இதற்கு முன்பு டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) கேப்டன் பதவியில் 77 இன்னிங்சில் 4 ஆயிரம் ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.
கேப்டன் பதவியில் 4 ஆயிரம் ரன் எடுத்த 4-வது இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன்பு அசாருதீன், கங்குலி, டோனி ஆகியோர் எடுத்து இருந்தனர்.
ஒருநாள் போட்டியில் கோலியின் 41-வது செஞ்சூரியை பதிவு செய்தார். கேப்டன் பதவியில் 19-வது சதமாகும். ஒருநாள் போட்டியில் அதிக சதம் எடுத்து சாதனை படைத்த டெண்டுல்கரை முந்த அவருக்கு இன்னும் 9 செஞ்சூரிகளே தேவை. டெண்டுல்கர் 49 சதம் அடித்துள்ளார்.
சர்வதேச போட்டியில் கோலியின் 66-வது சதமாகும். 2-வது இடத்தில் உள்ள பாண்டிங்கை முந்த 6 செஞ்சூரிகளே தேவை.
ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் 8-வது சதமாகும். இன்னும் ஒரு சதம் அடித்தால் டெண்டுல்கரை சமன் செய்வார். டெண்டுல்கர் 9 சதம் எடுத்து இருந்தார். #ViratKholi #INDvAUS
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது.
விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது.
லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 30 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) டோனி 29 ரன்னும் எடுத்தனர். நாதன் கோல்ட்டர் 3 விக்கெட்டும், பெகரன்டார்ப், ஆடம் ஜம்பா, கும்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.
பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அந்த அணி வெற்றி பெற்றது.
மேக்ஸ்வெல் 43 பந்தில் 56 ரன் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். பும்ரா 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். யுசுவேந்திர சாஹல், கர்ணல் பாண்டியா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.
எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒப்புதல் அளித்து உள்ளார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-
எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை. ஆட்டத்தின் 15-வது ஓவர் வரை இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏதுவாகவே இருந்தது. ஆனால் உண்மையில் நாங்கள் பேட்டிங்கில் நன்றாக ஆடவில்லை. லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடினார். அவரும், நானும் சிறந்த பார்ட்னர் ஷிப் அமைத்தோம்.
126 ரன் என்பது போதுமான ஸ்கோர் இல்லை. நாங்கள் 150 ரன்னுக்கு மேல் எடுத்து இருக்கலாம். அப்படி எடுத்து இருந்தால் வெற்றிக்கான ஸ்கோராக இருந்து இருக்கும்.
எங்களது பந்துவீச்சு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. 19-வது ஓவர் வரை நாங்களே நல்ல நிலையில் இருந்தோம். பும்ரா ஆச்சரியம் அளிக்கும் வகையில் அபாரமாக பந்துவீசினார்.
புதுமுக வீரரான மான்யக் மிடில் ஓவரில் நன்றாக வீசினார். ஒட்டு மொத்தத்தில் எங்களைவிட ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணியே வெற்றிக்கு தகுதியானது.
உலககோப்பைக்கு முன்பு ராகுல், ரிஷப் பந்துக்கு மேலும் கால அவகாசம் கொடுக்க விரும்புகிறார்.
இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.
இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் ஆட்டம் பெங்களூரில் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. #INDvAUS #ViratKholi
தற்பேதுள்ள வீரர்களில் டோனி 334 போட்டியிலும், விராட்கோலி 222 போட்டியிலும் விளையாடி உள்ளனர்.
31 வயதான ரோகித்சர்மா 199 ஒருநாள் போட்டியில் 193 இன்னிங்சில் 7799 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.14 ஆகும். 22 சதமும், 39 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சம் 264 ரன் குவித்துள்ளார். #RohitSharma #SachinTendulkar #ViratKholi #MSDhoni
இந்த ஆறு டி20 போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரன் குவிக்க தடுமாறி வரும் இந்திய விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான 37 வயதான டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியில் நிலையான இடத்தை பிடித்த பிறகு டோனி நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.
வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு மட்டும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும்போது அவர்கள் யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும். அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தொடரை இழந்தனர்.
யோ-யோ டெஸ்ட் குறித்து முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்காக இன்று அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது.

புறப்படுவதற்கு முன்பு இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்தார். அப்போது, ‘‘யோ-யோ டெஸ்ட் கட்டாயம். யோ-யோ டெஸ்ட் தொடர்பான தத்துவம் மிகவும் எளிதானது. நீங்கள் இந்த டெஸ்டில் பாஸ் ஆனால் இந்திய அணியில் விளையாடலாம். இல்லையென்றால் புறப்பட வேண்டியதுதான். யாராவது ஒருவர் ஒரு முடிவில் உறுதியாக இருக்காலாம். மற்றவர்களுக்காக இந்திய அணி செல்ல முடியாது. இந்திய அணி கேப்டன் இதில் உறுதியாக உள்ளார். அதன்பின் தேர்வாளர்கள், ஒட்டுமொத்த அணி நிர்வாகம் இதே முடிவில் உள்ளது’’ என்றார்.