என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Virat Kholi"

    • இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும்.
    • அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.

    இந்தியா- வங்காளதேச அணிகள் டி20 உலகக் கோப்பையின் சூப்பர் 8 சுற்று போட்டியில் இந்திய நேரப்படி இன்று இரவு பலப்பரீட்சை நடத்துகின்றன. டி20 கிரிக்கெட் போட்டியை வரை இந்தியாவின் கையே ஓங்கியுள்ளது. மேலும் வங்காளதேச அணிக்கெதிராக விராட் கோலி சிறப்பாக விளையாடியுள்ளார். சராசரி 90-க்கு மேல் வைத்துள்ளார்.

    இந்த நிலையில் வங்காளதேச அணியின் சுழற்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான ஷாகி் அல் ஹசன் விராட் கோலிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

    விராட் கோலி குறித்து ஷாகிப் அல் ஹசன் கூறியதாவது:-

    இந்திய அணிக்காக விராட் கோலி சாதித்தது நம்ப முடியாதவையாகும். தனி நபராக இந்திய அணிக்காக ஏராளமான வெற்றிகளை தேடிக்கொடுத்துள்ளா்ர. அவருடைய நாட்டிற்கும் கிரிக்கெட்டிற்கும் விராட் கோலி போன்று மற்றொருவரால் செய்ய முடியும் என என்னால் நினைக்க முடியவில்லை.

    இவ்வாறு ஷாகிப் அல் ஹசன் தெரிவித்துள்ளார்.

    • வங்கதேச அணி முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
    • இந்தியாவின் பும்ரா 4 விக்கெட், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர்.

    சென்னை:

    இந்தியா, வங்கதேசம் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது.

    அதன்படி, முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா 91.2 ஓவரில் 376 ரன்கள் குவித்து ஆல் அவுட்டானது. அஷ்வின் 113 ரன்னும், ஜடேஜா 86 ரன்னும் குவித்தனர்.

    வங்கதேசம் தரப்பில் ஹசன் மக்மூத் 5 விக்கெட் வீழ்த்தினார்.

    இதையடுத்து ஆடிய வங்கதேசம் முதல் இன்னிங்சில் 149 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஷகிப் அல் ஹசன் 32 ரன் எடுத்தார்.

    இந்தியா சார்பில் பும்ரா 4 விக்கெட்டும், சிராஜ், ஆகாஷ் தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    227 ரன்கள் முன்னிலை பெற்ற இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது. இரண்டாம் நாள் முடிவில் இந்தியா 3 விக்கெட்டுக்கு 81 ரன்கள் அடித்துள்ளது. கில் 33 ரன்னும், பண்ட் 12 ரன்னும் எடுத்து களத்தில் உள்ளனர். இந்தியா 308 ரன் முன்னிலை பெற்றுள்ளது.

    2-வது இன்னிங்சில் களமிறங்கிய விராட் கோலி 17 ரன்னில் ஆட்டமிழந்து ஏமாற்றம் அளித்தார்.

    இந்நிலையில், விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் சாதனையை தகர்த்து புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட்டில் சொந்த மண்ணில் அதிவேகமாக 12,000 ரன்கள் அடித்த வீரர் என்ற மாபெரும் உலக சாதனையை விராட் கோலி படைத்துள்ளார். இவர் 243 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையைப் படைத்துள்ளார்.

    முன்னதாக, சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ்களில் 12,000 ரன்கள் அடித்ததே சாதனையாக இருந்தது. தற்போது விராட் கோலி புதிய உலக சாதனை படைத்துள்ளார்.

    விராட் கோலி 243 இன்னிங்ஸ், சச்சின் டெண்டுல்கர் 267 இன்னிங்ஸ், குமார் சங்ககரா 269 இன்னிங்ஸ், காலிஸ் 271 இன்னிங்ஸ், ரிக்கி பாண்டிங் 275 இன்னிங்ஸ்.

    லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விராட் கோலிக்கு புதிய கவுரவம் அளிக்கப்பட்டுள்ளது.
    லண்டன்:

    உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இன்று லண்டனில் உள்ள ஓவல் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியில் இங்கிலாந்து- தென் ஆப்பரிக்கா அணிகள் மோதுகின்றன. இன்று தொடங்கி வரும் ஜூலை மாதம் 14ம் தேதி வரை போட்டிகள் நடைபெற உள்ளது.

    இந்த தொடரில் 45 லீக் போட்டிகள், 3 நாக்-அவுட் போட்டிகள் என சுமார் 12 நகரங்களில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெறும். இதில் 10 அணிகள் ஒன்றுடன் ஒன்று மோத உள்ளன.



    இந்நிலையில் உலக கோப்பை தொடங்குவதை முன்னிட்டு, கிரிக்கெட்டின் பிறப்பிடமான லண்டனில் உள்ள லார்ட்ஸ் மைதானத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மற்றும் நம்பர் 1 வீரரான விராட் கோலியை கவுரப்படுத்தும் விதமாக அவரது மெழுகு சிலை தத்ரூபமாக வைக்கப்பட்டுள்ளது.



    விராட் கோலியின் இந்த மெழுகு சிலை வரும் ஜூலை 15ம் தேதி வரை காட்சிக்கு வைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு லண்டனில் இருக்கும் கோலியின் ரசிகர்கள் நேரில் சென்று பார்வையிட்டு செல்ஃபி எடுத்துக் கொண்டு சமூக வலைத்தளங்களில் ஷேர் செய்து வருகின்றனர்.     

    விராட் கோலியுடன் இணைந்து கிரிக்கெட் ஜாம்பவான் என அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கரின் மெழுகு சிலையும் வைக்கப்பட்டுள்ளது.
    கேப்டன் பதவியில் 4 ஆயிரம் ரன் எடுத்த 4-வது இந்தியர் என்ற பெருமையை தற்போதைய இந்திய கேப்டன் விராட் கோலி பெற்றுள்ளார். #ViratKholi #INDvAUS
    இந்திய அணி கேப்டன் விராட்கோலியின் பேட்டிங் நாளுக்கு நாள் சிறப்பாக இருந்து வருகிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2-வது ஒருநாள் போட்டியில் செஞ்சூரி எடுத்த அவர் நேற்றைய 3-வது ஆட்டத்திலும் சதம் அடித்தார். 95 பந்தில் 123 ரன்கள் குவித்தார்.

    27-வது ரன்னை எடுத்தபோது கேப்டன் பதவியில் கோலி 4 ஆயிரம் ரன்னை தொட்டார். 66 இன்னிங்சில் அவர் இந்த ரன்னை எடுத்தார். இதன்மூலம் கேப்டன் பதவியில் 4 ஆயிரம் ரன்னை அதிவேகத்தில் எடுத்தவர் என்ற சாதனையை கோலி படைத்தார். இதற்கு முன்பு டிவில்லியர்ஸ் (தென்ஆப்பிரிக்கா) கேப்டன் பதவியில் 77 இன்னிங்சில் 4 ஆயிரம் ரன் எடுத்ததே சாதனையாக இருந்தது.

    கேப்டன் பதவியில் 4 ஆயிரம் ரன் எடுத்த 4-வது இந்தியர் என்ற பெருமையை கோலி பெற்றார். இதற்கு முன்பு அசாருதீன், கங்குலி, டோனி ஆகியோர் எடுத்து இருந்தனர்.

    ஒருநாள் போட்டியில் கோலியின் 41-வது செஞ்சூரியை பதிவு செய்தார். கேப்டன் பதவியில் 19-வது சதமாகும். ஒருநாள் போட்டியில் அதிக சதம் எடுத்து சாதனை படைத்த டெண்டுல்கரை முந்த அவருக்கு இன்னும் 9 செஞ்சூரிகளே தேவை. டெண்டுல்கர் 49 சதம் அடித்துள்ளார்.

    சர்வதேச போட்டியில் கோலியின் 66-வது சதமாகும். 2-வது இடத்தில் உள்ள பாண்டிங்கை முந்த 6 செஞ்சூரிகளே தேவை.

    ஆஸ்திரேலியாவுக்கு எதிராக கோலியின் 8-வது சதமாகும். இன்னும் ஒரு சதம் அடித்தால் டெண்டுல்கரை சமன் செய்வார். டெண்டுல்கர் 9 சதம் எடுத்து இருந்தார். #ViratKholi #INDvAUS
    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை என்று இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். #INDvAUS #ViratKholi
    விசாகப்பட்டினம்:

    ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி கடைசி பந்தில் தோல்வியை தழுவியது.

    விசாகப்பட்டினத்தில் நடந்த இந்த ஆட்டத்தில் முதலில் விளையாடிய இந்திய அணியால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ரன்னே எடுக்க முடிந்தது.

    லோகேஷ் ராகுல் அதிகபட்சமாக 30 பந்தில் 50 ரன்னும் (6 பவுண்டரி, 1 சிக்சர்) டோனி 29 ரன்னும் எடுத்தனர். நாதன் கோல்ட்டர் 3 விக்கெட்டும், பெகரன்டார்ப், ஆடம் ஜம்பா, கும்மின்ஸ் தலா 1 விக்கெட்டும் எடுத்தனர்.

    பின்னர் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்து 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. ஆட்டத்தின் கடைசி பந்தில் அந்த அணி வெற்றி பெற்றது.

    மேக்ஸ்வெல் 43 பந்தில் 56 ரன் (6 பவுண்டரி, 2 சிக்சர்) எடுத்து வெற்றிக்கு முக்கிய பங்கு வகித்தார். பும்ரா 16 ரன் கொடுத்து 3 விக்கெட் வீழ்த்தினார். யுசுவேந்திர சாஹல், கர்ணல் பாண்டியா தலா 1 விக்கெட்டும் கைப்பற்றினார்கள்.

    எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை என்று இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஒப்புதல் அளித்து உள்ளார். தோல்வி குறித்து அவர் கூறியதாவது:-

    எங்களது பேட்டிங் சிறப்பாக இல்லை. ஆட்டத்தின் 15-வது ஓவர் வரை இந்த ஆடுகளம் பேட்டிங் செய்ய ஏதுவாகவே இருந்தது. ஆனால் உண்மையில் நாங்கள் பேட்டிங்கில் நன்றாக ஆடவில்லை. லோகேஷ் ராகுல் சிறப்பாக ஆடினார். அவரும், நானும் சிறந்த பார்ட்னர் ஷிப் அமைத்தோம்.

    126 ரன் என்பது போதுமான ஸ்கோர் இல்லை. நாங்கள் 150 ரன்னுக்கு மேல் எடுத்து இருக்கலாம். அப்படி எடுத்து இருந்தால் வெற்றிக்கான ஸ்கோராக இருந்து இருக்கும்.

    எங்களது பந்துவீச்சு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் இருந்தது. 19-வது ஓவர் வரை நாங்களே நல்ல நிலையில் இருந்தோம். பும்ரா ஆச்சரியம் அளிக்கும் வகையில் அபாரமாக பந்துவீசினார்.

    புதுமுக வீரரான மான்யக் மிடில் ஓவரில் நன்றாக வீசினார். ஒட்டு மொத்தத்தில் எங்களைவிட ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியது. அந்த அணியே வெற்றிக்கு தகுதியானது.

    உலககோப்பைக்கு முன்பு ராகுல், ரி‌ஷப் பந்துக்கு மேலும் கால அவகாசம் கொடுக்க விரும்புகிறார்.

    இவ்வாறு விராட் கோலி கூறியுள்ளார்.

    இந்த வெற்றி மூலம் 3 போட்டிக்கொண்ட தொடரில் ஆஸ்திரேலியா 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. 2-வது 20 ஓவர் ஆட்டம் பெங்களூரில் வருகிற 27-ந்தேதி (புதன்கிழமை) நடக்கிறது. #INDvAUS #ViratKholi
    இந்திய அணியின் தற்காலிக கேப்டன் ரோகித் சர்மாவுக்கு நாளைய ஆட்டம் 200-வது ஒருநாள் போட்டியாகும். #RohitSharma #SachinTendulkar #ViratKholi #MSDhoni
    200-வது போட்டியில் விளையாடும் 14-வது இந்திய வீரர் என்ற பெருமையை ரோகித்சர்மா பெறுகிறார். டெண்டுல்கர் 463 போட்டியில் விளையாடி முதல் இடத்தில் உள்ளார்.

    தற்பேதுள்ள வீரர்களில் டோனி 334 போட்டியிலும், விராட்கோலி 222 போட்டியிலும் விளையாடி உள்ளனர்.

    31 வயதான ரோகித்சர்மா 199 ஒருநாள் போட்டியில் 193 இன்னிங்சில் 7799 ரன் எடுத்துள்ளார். சராசரி 48.14 ஆகும். 22 சதமும், 39 அரைசதமும் அடித்துள்ளார். அதிகபட்சம் 264 ரன் குவித்துள்ளார். #RohitSharma #SachinTendulkar #ViratKholi #MSDhoni
    இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பல சாதனைகளை முறியடிக்க வாய்ப்பு உள்ளது. #ViratKholi #AUSvIND

    ‘இந்திய கேப்டன் விராட் கோலி சில சாதனைகளை நோக்கி பயணிக்கிறார். இன்னும் 8 ரன்கள் எடுக்கும் போது, ஆஸ்திரேலிய மண்ணில் ஆயிரம் ரன்களை கடந்த 4-வது இந்தியர் என்ற சிறப்பை பெறுவார். இந்த தொடரில் 2 சதங்கள் அடித்தால், ஆஸ்திரேலியாவில் அதிக சதங்கள் நொறுக்கிய இந்தியர் என்ற சாதனையை சச்சின் தெண்டுல்கரிடம் (6 சதம்) இருந்து தட்டிப்பறிப்பார்’. #ViratKholi #AUSvIND
    இந்திய அணி விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆன மகேந்திர சிங் டோனி டி20 தொடர்களில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். #MSDhoni #INDvWI #INDvAUS
    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான ஒரு நாள் தொடர் முடிந்ததும் இந்திய அணி அந்த நாட்டு அணிக்கு எதிராக மூன்று 20 ஓவர் போட்டிகளில் விளையாடுகிறது. முதலாவது 20 ஓவர் போட்டி வருகிற 4–ந்தேதி கொல்கத்தாவில் நடக்கிறது. அதைத்தொடர்ந்து இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு முதலில் மூன்று 20 ஓவர் போட்டிகளில் பங்கேற்கிறது.

    இந்த ஆறு டி20 போட்டிக்கான இந்திய அணி நேற்று அறிவிக்கப்பட்டது. ரன் குவிக்க தடுமாறி வரும் இந்திய விக்கெட் கீப்பரும், முன்னாள் கேப்டனுமான 37 வயதான டோனி அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். அணியில் நிலையான இடத்தை பிடித்த பிறகு டோனி நீக்கப்படுவது இதுவே முதல் முறையாகும்.

    வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிரான 20 ஓவர் தொடருக்கு மட்டும் கேப்டன் விராட் கோலிக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அணியில் தமிழக ஆல்ரவுண்டர் வாஷிங்டன் சுந்தருக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
    யோ-யோ டெஸ்டில் பாஸ் என்றால் இந்திய அணியில் இடம். இல்லையென்றால் புறப்பட வேண்டியதுதான் என்கிறார் ரவி சாஸ்திரி. #ENGvIND
    இந்திய கிரிக்கெட் அணியில் விளையாடும் வீரர்கள் உடற்தகுதியில் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்திய கிரிக்கெட் வாரியம் யோ-யோ டெஸ்ட் என்ற முறையை கையாண்டு வருகிறது.

    உள்ளூர் தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் வீரர்கள் இந்திய அணிக்கு தேர்வாகும்போது அவர்கள் யோ-யோ டெஸ்டில் பாஸ் ஆக வேண்டும். அம்பதி ராயுடு, சஞ்சு சாம்சன், முகமது ஷமி ஆகியோர் யோ-யோ டெஸ்டில் தோல்வியடைந்ததால் இங்கிலாந்து தொடரை இழந்தனர்.

    யோ-யோ டெஸ்ட் குறித்து முன்னாள் வீரர்கள் கண்டனம் தெரிவித்திருந்தனர். இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணி அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து தொடருக்காக இன்று அயர்லாந்து புறப்பட்டுச் சென்றது.



    புறப்படுவதற்கு முன்பு இந்திய அணி பயிற்சியாளர் ரவி சாஸ்திரி பேட்டியளித்தார். அப்போது, ‘‘யோ-யோ டெஸ்ட் கட்டாயம். யோ-யோ டெஸ்ட் தொடர்பான தத்துவம் மிகவும் எளிதானது. நீங்கள் இந்த டெஸ்டில் பாஸ் ஆனால் இந்திய அணியில் விளையாடலாம். இல்லையென்றால் புறப்பட வேண்டியதுதான். யாராவது ஒருவர் ஒரு முடிவில் உறுதியாக இருக்காலாம். மற்றவர்களுக்காக இந்திய அணி செல்ல முடியாது. இந்திய அணி கேப்டன் இதில் உறுதியாக உள்ளார். அதன்பின் தேர்வாளர்கள், ஒட்டுமொத்த அணி நிர்வாகம் இதே முடிவில் உள்ளது’’ என்றார்.
    பயிற்சியின் போது ஏற்பட்ட முதுகெலும்பு காயம் காரணமாக விராட் கோலி, இங்கிலாந்தில் நடைபெறும் கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #ViratKholi #CountyCricket #slipdiscinjury

    புதுடெல்லி:

    இந்திய கிரிக்கெட் அணி வருகிற ஜூலை 3-ம் தேதி முதல் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறது. இந்த சுற்றுப்பயணத்தின் போது 5 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த தொடருக்கு தயாராகும் வகையில் இந்திய அணி கேப்டன் விராட் கோலி கவுண்டி கிளப் அணியான சுர்ரேவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டார்.

    மேலும் இந்த தொடருக்கு தயாராகும் வகையில் ஜூன் 14 முதல் 18-ம் தேதி வரை இந்தியாவில் நடைபெற உள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான தொடரில் இருந்தும், அயர்லாந்துக்கு எதிரான தொடரில் இருந்தும் விலகுவதாக விராட் கோலி அறிவித்தார். 

    இந்நிலையில் உடற்பயிற்சி செய்யும் போது, கோலியின் முதுகெலும்பு பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் அந்த காயம் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாது எனவும், பெரிய அளவிலான சிகிச்சை தேவையில்லை எனவும் கூறப்படுகிறது. ஆனால் காயம் காரணமாக ஓய்வு தேவை என பிசிசிஐ அதிகாரிகள் கூறியுள்ளனர். இதனால் கோலி கவுண்டி கிரிக்கெட்டில் பங்கேற்பதில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. #ViratKholi #CountyCricket #slipdiscinjury
    ×