என் மலர்
நீங்கள் தேடியது "Virat Kohil"
- இங்கிலாந்தின் ஜோ ரூட் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார்.
- டாப் 10-ல் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் மட்டுமே உள்ளார்.
துபாய்:
ஆண்களுக்கான டெஸ்ட் கிரிக்கெட்டின் புதிய தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டது.
அதன்படி, டெஸ்ட் பேட்டர்கள் தரவரிசையில் இங்கிலாந்தின் ஜோ ரூட் மீண்டும் முதல் இடம் பிடித்துள்ளார். 2வது இடத்தில் சக நாட்டவர் ஹாரி புரூக் நீடிக்கிறார்.
3வது இடத்தில் நியூசிலாந்தின் கேன் வில்லியம்சன் உள்ளார்.
டாப் 10 தரவரிசையில் இந்திய வீரர்களில் ஜெய்ஸ்வால் மட்டுமே உள்ளார். ஜெய்ஸ்வால் 4-வது இடத்தில் நீடிக்கிறார். ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரரான டிராவிஸ் ஹெட் 5-வது இடத்தை பிடித்துள்ளார்.
இந்திய வீரர் ரிஷப் பண்ட் ஒரு இடம் பின்தங்கி 12-வது இடத்துக்கு தள்ளப்பட்டார்.
இந்நிலையில், இந்திய பேட்டிங் ஜாம்பவான்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ச்சியாக மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் டெஸ்ட் பேட்டிங் தரவரிசையில் சரிவை சந்தித்து வருகின்றனர்.
விராட் கோலி 633 புள்ளிகளுடன் 24-வது இடத்திலும், ரோகித் சர்மா 560 புள்ளிகளுடன் 40-வது இடத்தையும் பிடித்துள்ளனர்.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான சமீபத்திய டெஸ்ட் தொடரில் அவர்களின் செயல்பாடுகள் மோசமாக உள்ளதால் இந்த சரிவு ஏற்பட்டுள்ளது.
- விராட் கோலி, பெரிய சவாலை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர்.
- சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது.
சாம்பியன்ஸ் டிராபி தொடர் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த தொடரின் முதல் அரையிறுதியில் மோதிய இந்தியா- ஆஸ்திரேலியா போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.
இந்த போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராட் கோலி ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்நிலையில் சச்சின், தோனியை விட சேஸிங்கில் விராட் கோலி சிறப்பாக விளையாடுகிறார் என இந்திய அணி முன்னாள் வீரர் கபில் தேவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
அவர் பெரிய சவாலை எதிர்கொள்ளும் குணம் கொண்டவர் என்று நினைக்கிறேன். அதில்தான் அவருக்கு ஆற்றல் கிடைக்கிறது. அவர் அந்த அழுத்தத்தில் விளையாட விரும்புகிறார். அவரை போல சில கிரிக்கெட் வீரர்களுக்கு அந்த குணம் உள்ளது.
நாளின் இறுதியில் போட்டியை வென்றுக் கொடுக்கும் திறமை அவரிடம் இருக்கிறது. அதை தோனி எந்தளவுக்கு செய்தார் என்பது நமக்குத் தெரியும். ஆனால் விராட் கோலி அதை செய்வதில் மற்ற அனைவரையும் விட ஒரு படி மேலே இருக்கிறார்.
சாம்பியன்ஸ் டிராபியை இந்தியா வெல்ல அதிக வாய்ப்பு இருக்கிறது. ஆனால் எதிரணியையும் நீங்கள் குறைத்து மதிப்பிடக்கூடாது.
என்று கபில்தேவ் கூறினார்.
இந்த நிலையில் விராட் கோலி 40 வயது வரை விளையாடினால் பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிப்பார் என்று முன்னாள் கேப்டனும், டெலிவிஷன் வர்ணனையாளருமான கவாஸ்கர் கூறியுள்ளார்.
இது தொடர் பாக அவர் கூறியதாவது:-
விராட் கோலியின் பேட்டிங் நாளுக்குநாள் மிகவும் அபாரமாக இருக்கிறது. அவரது இந்த திறமை வாய்ந்த ஆட்டத்தால் எந்த ஒரு சாதனைக்கும் உத்தரவாதம் இல்லை. அவரால் அதிக ரன், அதிக சதம் என பேட்டிங்கில் அனைத்து சாதனைகளையும் முறியடிக்க முடியும்.
விராட் கோலியின் உடல் தகுதியும் நன்றாக இருக்கிறது. அவரால் இன்னும் 5 முதல் 7 ஆண்டுகள் இல்லாமல் 10 வருடங்களுக்கு மேல் ஆட இயலும். சச்சின் தெண்டுல்கர் 40 வயது வரை விளையாடினார். இதேபோல் கோலியும் 40 வயது வரை ஆடினால் டெஸ்ட் சாதனை, ஒருநாள் போட்டி சாதனைகள் அனைத்தையும் முறியடிக்க இயலும். கிரிக்கெட்டில் அனைத்து சாதனைகளும் அவர் பெயரில் இருக்கும்.
இவ்வாறு கவாஸ்கர் கூறியுள்ளார்.