என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Waikai Dam"

    • சேலத்தில் நடைபெறும் தி.மு.க. இளைஞரணி மாநாட்டுக்காக அமைச்சர் மூர்த்தி புல்லட்டில் சென்று பிரசாரம் மேற்கொண்டார்.
    • வைகை அைண நீர்மட்டத்தை பொறுத்து மேலூர் பகுதி பாசனத்திற்கு தண்ணீர் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

    மேலூர்

    தி.மு.க. இளைஞரணி மாநாடு சேலத்தில் 17ந்தேதி நடக்கிறது. இதற்காக மேலூர் பகுதியில் அமைச்சர் மூர்த்தி புல்லட்டில் சென்று பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் கூறியதாவது:-

    மதுரை மாவட்டத்திற்கு ஜூன் 1-ந்தேதி இரு போக பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டிய நிலையில், 3 மாதம் கழித்து தற்போது தாமதமாக தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

    அதே நிலையில் மேலூர் மற்றும் திருமங்கலம் பகுதிகளை சேர்ந்த ஒரு போக பாசன விவசாயிகள் கேட்டுக் கொண்டதின் பேரில், தற்போது குடி நீருக்காக வைகை அணையில் இருந்து 14 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேலூர் பகுதி களைச் சேர்ந்த ஒரு போக பாசன விவசாயிகள் தற்போது பாசனத்திற்காக தண்ணீர் திறக்க வேண்டும் என வலியுறுத்தி வருகின்ற னர்.

    தற்போது வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்ட பகுதிக்கு தரவேண்டிய தண்ணீர் வழங்கப்பட்டு வரும் நிலையில், அனைத்து பகுதிக்கும் ஏக போகமாக தண்ணீர் திறந்தால் பற்றாக்குறை ஏற்பட்டு விவசாயம் பாதிக்கப்படும் சூழ்நிலை ஏற்படும்.

    அதனால், வைகை அணையில் இருந்து ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டத்திற்கு உரிய தண்ணீர் வழங்கப்பட்ட பின்னர் பருவமழை மற்றும் அணையின் தண்ணீர் அளவை பொருத்து மேலூர் பகுதி ஒருபோக பாசனத்திற்கு தண்ணீர் திறக்க அதிகாரிகளின் ஆய்விற்கு பிறகு அரசு உரிய நடவடிக்கையாக முடிவெடுக்கும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    நிகழ்ச்சியில் மேலூர் நகர்மன்ற தலைவர் முகமது யாசின், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் செல்வராஜ், சுபேதா அப்பாஸ் ஒன்றிய கழக செயலாளர்கள் குமரன், பாலகிருஷ்ணன், ராஜேந்திர பிரபு, ராஜ ராஜன், கிருஷ்ணமூர்த்தி, பழனி, மாவட்ட கவுன்சிலர் நேரு பாண்டியன், மாவட்ட தொண்டர் அணி அமைப்பாளர் நாவினிபட்டி வேலாயுதம், வல்லாளப்பட்டி பேரூராட்சி துணை தலைவர் கலைவாணன் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

    • நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.97 அடியாக உள்ளது.
    • வரத்து 1171 கன அடியாகவும், இருப்பு 3223 மி.கன அடியாகவும் உள்ளது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணையில் இருந்து பூர்வீக பாசன பகுதிகளான ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களின் தேவைக்காக தண்ணீர் திறக்க விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.

    அதன்பேரில் ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை மாவட்டங்களுக்கு வைகை அணையில் இருந்து 3 கட்டங்களாக தண்ணீர் திறக்க அரசு உத்தரவிட்டது.

    அதன்படி முதல் கட்டமாக கடந்த 10-ந் தேதி ராமநாதபுரம் பாசனத்திற்கு தண்ணீர் திறக்கப்பட்டது.

    கடந்த 9 நாட்களில் 1830 மி.கன அடி தண்ணீர் திறக்கப்பட்டது. இந்த நிலையில் மதுரை மாவட்ட பாசனத்திற்காக இன்று காலை முதல் தண்ணீர் திறக்கப்பட்டது.

    நேற்று மாலை முதல் குடிநீருக்காக மட்டும் 69 கன அடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் இன்று காலை முதல் 569 கன அடியாக வெளியேற்றப்படுகிறது. 71 அடி உயரம் உள்ள அணையின் நீர்மட்டம் இன்று காலை நிலவரப்படி 57.97 அடியாக உள்ளது. வரத்து 1171 கன அடியாகவும், இருப்பு 3223 மி.கன அடியாகவும் உள்ளது.

    இன்று முதல் 10 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறந்து விடப்படுகிறது. இதனால் தேனி, மதுரை மாவட்டத்தில் வைகை கரையோரம் உள்ள மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    ஆற்றில் இறங்கவோ, கால்நடைகளை குளிப்பாட்டவோ வேண்டாம் என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர். 3-ம் கட்டமாக சிவகங்கை மாவட்டத்திற்கு தண்ணீர் திறக்கப்படும்.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 122.40 அடியாக உள்ளது. வரத்து 463 கன அடி. திறப்பு 1033 கன அடி. இருப்பு 3103 மி.கன அடியாக உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடி. வரத்து மற்றும் திறப்பு 100 கன அடி. இருப்பு 421.14 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.28 அடியில் நீடிக்கிறது. இதனால் அணைக்கு வரும் 34.29 கன அடி நீர் முழுவதும் வெளியேற்றப்படுகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    ×