என் மலர்
நீங்கள் தேடியது "Welfare Center"
- சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டது.
- இதை தொடர்ந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது.
ஓமலூர்:
சேலம் மாவட்டம் ஓமலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட புளியம்பட்டி ஊராட்சியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட அங்கன்வாடி மைய கட்டிடங்கள் பழுதடைந்து காணப்பட்டது. இடிந்து விழும் நிலையில் இருந்த கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டிகொடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டு இருந்தது.
இதை தொடர்ந்து சுமார் 8 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு புதிய கட்டிடம் கட்டப்பட்டது. அதேபோல புளியம்பட்டி காலனி பகுதியில், பழுதடைந்த மற்றொரு தார்சு கட்டிடமும் 2 லட்ச ரூபாய் மதிப்பில் புதுப்பிக்கப்பட்டது.
இதையடுத்து இந்த கட்டிடங்களின் திறப்பு விழா நடைபெற்றது. ஊராட்சி மன்ற தலைவர் கோவிந்தசாமி தலைமையில், தி.மு.க. கிழக்கு ஒன்றிய செயலாளர் ரமேஷ், மாவட்ட கவுன்சிலர் அழகிரி, அ.தி.மு.க. ஒன்றிய கவுன்சிலர் சரவணன், முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணன், அய்யனார் ஆகியோர் கலந்துகொண்டு புதிய கட்டிடத்தையும், புதுபிக்கப்பட்ட கட்டிடத்தையும் திறந்து வைத்தனர்.
தொடர்ந்து குத்துவிளக்கேற்றி பயன்பாட்டிற்கு கொண்டு வந்தனர். முடிவில் ஊராட்சி மன்ற செயலர் லட்சுமணன் நன்றி கூறினார்.