search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "WhatsApp group admin"

    • கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில், ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும்.
    • கலவரக்காரர்கள் மற்றும் கலவரத்திற்கு தூண்டி யவர்களை போலீசார் கைது செய்த வருகின்றனர்.

    கடலூர்:

    விருத்தாசலத்தை அடுத்த வேப்பூர் பகுதிக்குட்பட்ட என்.நாரையூர் கிராமத்தை சேர்ந்த பழமலை என்பவரின் மகன் தேவேந்திரன் (வயது 27). இவர் வேப்பூர் பகுதியில் புகைப்பட ஸ்டுடியோ நடத்தி வருகிறார். கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த சம்பவத்தில், ஸ்ரீமதிக்கு நீதி வேண்டும் என வாட்ஸ் அப் குழுவில், குழுவின் அட்மினாக இருந்துள்ளார். அதன் மூலம் கலவரம் நடக்க இவர் காரணமாக இருந்தார் என கூறப்படுகிறது. இந்நிலையில் கள்ளக்குறிச்சி பள்ளியில் நடந்த கலவரம் தொடர்பாக, கலவரக்காரர்கள் மற்றும் கலவரத்திற்கு தூண்டி யவர்களை போலீசார் கைது செய்த வருகின்றனர்.

    தேவேந்திரனையும் போலீசார் தேடிவந்தனர். இதனை அறிந்த தேவேந்திரன் நேற்று மாலை விருத்தாசலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அன்னலட்சுமி முன்னிலையில் சரணடைந்தார். நீதிமன்றத்தில் சரண் அடைந்த தேவேந்திரனை 2 நாட்கள் விருத்தாசலம் கிளைச் சிறையில் அடைக்க நீதிபதி அன்னலட்சுமி உத்தரவிட்டார். இதனை யடுத்து போலீசார் தேவே ந்திரனை விரு த்தாசலம் கிளைச் சிறையில் அடைத்தனர்.

    அரியானா மாநிலத்தில் வாட்ஸ்அப்பில் அனுப்பிய புகைப்படத்தால் மோதல் ஏற்பட்டு, 28 வயது வாலிபர் அடித்துக் கொல்லப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #WhatsAppGroupAdmin #SonepatViolent
    சண்டிகர்:

    அரியானா மாநிலம் சோனிபட் நகரைச் சேர்ந்த லவ் ஜோகர் (வயது 28) என்பவர் வாட்ஸ்அப் குரூப்பின் அட்மினாக செயல்பட்டு வருகிறார். அப்பகுதியில் வசிப்பவர்கள் அனைவரும் இந்த குரூப்பில் இணைந்து, தங்கள் சமுதாயம் சார்ந்த தகவல்களை பரிமாறிக்கொள்கின்றனர். இந்த தேர்தலில் எந்த கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை முடிவு எடுப்பதற்காக இந்த குரூப் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

    இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு வாட்ஸ்அப் குரூப்பில் தனது தனிப்பட்ட புகைப்படத்தை லவ் ஜோகர் பகிர்ந்துள்ளார். இதுதொடர்பாக லவ் ஜோகருக்கும் தினேஷ் என்பவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர் பிரச்சினையை பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று தினேஷ் கூற, அவரது வீட்டிற்கு லவ் ஜோகர் சென்றுள்ளார். அவருடன் அவரது சகோதரர்களும் சென்றுள்ளனர்.



    தினேஷ் வீட்டில் பேச்சுவார்த்தை நடந்தபோது மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த தினேஷ் மற்றும் அவரது குடும்பத்தினர் லவ் ஜோகர் மற்றும் அவரது சகோதரர்களை கடுமையாக தாக்கி உள்ளனர். இதில் பலத்த காயமடைந்த லவ் ஜோகர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். சகோதரர்கள் 3 பேர் காயமடைந்தனர்.

    இந்த சம்பவம் தொடர்பாக தினேஷ் குடும்பத்தைச் சேர்ந்த 6 பேர் மீது போலீசார் கொலை வழக்கு பதிவு செய்து அவர்களைத் தேடி வருகின்றனர். தங்கள் சமுதாயத்தில் ஆதிக்கம் செலுத்துவது யார்? என்பதில் ஏற்பட்ட போட்டியே சண்டை ஏற்பட காரணம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. #WhatsAppGroupAdmin #SonepatViolent

    ×