search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "which is better"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கருங்காலி மாலைகள் அணிந்துகொள்வது ஒரு டிரெண்டாகி விட்டது.
    • செங்காலிமாலைகள் அணிந்துகொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    சமீப காலமாகவே கருங்காலி மாலைகள் அணிந்துகொள்வது ஒரு டிரெண்டாகி விட்டது. சினிமா பிரபலங்கள் பலர் கருங்காலி மாலைகளை அணிந்து வலம்வர, பலரும் அதை பின்பற்றத் தொடங்கிவிட்டனர்.

     கருங்காலி மாலைகள் அணிந்துகொண்டால் கண் திருஷ்டி ஏற்படாது, அதிர்ஷ்டம் கைகூடும், செல்வ வளம் ஏற்படும் என்றும் சொல்லப்படுகிறது. அதேபோன்று தற்போது செங்காலிமாலைகள் அணிந்துகொள்வதில் பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள்.

    இந்து மத சம்பிரதாயத்தில், அணியும் மாலைகளில் ருத்திராட்ச மாலை, துளசி மாலை, கருங்காலி மாலை என பல வகைகள் உள்ளன. இதில் சமீப காலமாக கருங்காலி மாலைகள் குறித்த பதிவுகளும், விற்பனையும் சமூக வலைதளங்களில் களைகட்டி வருகிறது. கருங்காலி மாலை அணிவதால் செல்வம் சேரும் என்று யாரோ கிளப்பி விட அதனால் கருங்காலி மாலைகளின் விலையும் அதிகரித்துள்ளது. இதை பயன்படுத்தி சிலர் ஒரிஜினல் கருங்காலி மாலை என ஆயிரங்களில் மாலைகளை விற்பதும் நடந்து வருகிறது.

     இந்த கருங்காலி மாலைக்கான டிமாண்டை கண்டு அடுத்து செங்காலி மாலையும் சந்தைகளில் நல்ல விற்பனையாகி வருகிறது. ஆனால் ஜோதிட சாஸ்திர நிபுணர்கள் கருங்காலி மாலை நேர்மறை ஆற்றலை அதிகரிக்குமே தவிர, செல்வ விருத்தி அளிக்காது என்றும் கூறி வருகின்றனர்.

    கருங்காலி, செங்காலி ஆகிய இரண்டு மரங்களும் ஒரே தன்மை உடையவைதான். ஆன்மிக அடிப்படையில் கருங்காலி மிருக சீரிட நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் என்றால் செங்காலி திருவாதிரை நட்சத்திரத்துக்கு உரிய விருட்சம் என்கிறார்கள். செங்காலி மாலைகளும், கருங்காலி மாலைகளுக்கு இணையான பலன் தரும் என்றும் சொல்லப்படுகிறது. இதனால் மக்கள் பலரும் தற்போது செங்காலி மாலைகளை அணிந்துகொள்வதில் ஆர்வம் காட்டத்தொடங்கியுள்ளனர்.

    கருங்காலி மாலைகளைப் போல் செங்காலி மாலைகள் அணிந்துகொள்வதும் அதிர்ஷ்டம் தருமா... செங்காலி மாலைகளுக்கு ஆன்மிக முக்கியத்தும் உண்டா போன்ற பல கேள்விகள் தற்போது எழுந்துள்ளன.

    ஆன்மிக மரபில் இயற்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் உண்டு. இறைவழிபாட்டை போலவே இயற்கை வழிபாடும் முக்கியமானது என்று நம் முன்னோர்கள் கருதியதே அதற்கு காரணம்.

    அந்த வகையில் கருங்காலி மரங்கள் மிகவும் சக்தி வாய்ந்த மரங்களாகக் கருதப்பட்டன. கருங்காலி என்று சொல்கிறபோதே அதில் செங்காலியும் அடக்கம். இரண்டுக்கும் சிறு வேறுபாடு உண்டு. கருங்காலி மரங்கள் மிகவும் உறுதியானவை. செங்காலி கருங்காலியை விடக் கொஞ்சம் உறுதித் தன்மை குறைந்தது. அதனால்தான் ஆயுதங்கள் செய்யும்போது கருங்காலியை நம் முன்னோர்கள் தேர்ந்தெடுத்தார்கள். பெரும்பாலும் அந்த கால ஆயுதங்களான ஈட்டி, கோடாரி ஆகியவற்றின் பிடிகளை கருங்காலியிலேயே செய்தார்கள்.

    இப்படி பல காரணங்களுக்காகவே கருங்காலி மற்றும் செங்காலிகளை நம் முன்னோர்கள் பயன்படுத்தினார்கள். ஆனால் இன்று இவை ஆன்மிக முக்கியத்துவம் கொண்டவையாகச் சொல்லப்படுகின்றன.

    கருங்காலி, செங்காலி ஆகிய இரு மரங்களும் வசியத் தன்மை கொண்டவை என்று நம்பப்படுகின்றன. அந்த காலத்தில் குறிசொல்கிறவர்கள் கைகளில் வைத்திருக்கும் கம்பு கருங்காலி மரமே. கருங்காலி, செங்காலி இரண்டிலுமே அந்த காலத்தில் மாலைகள் செய்து அணிந்துவந்தார்கள். அதற்கு அதன் மருத்துவப் பயன்பாடே முக்கிய காரணம்.

    • தூங்க செல்வதற்கு முன்பு குளிப்பது ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும்.
    • ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு உடலை சுத்தம் செய்ய வேண்டும்.

    அலுவலக வேலைக்கு செல்பவர்கள் காலையில் குளித்துவிட்டு புத்துணர்ச்சியோடு வீட்டை விட்டு கிளம்புவார்கள். கடினமான உடல் உழைப்பு கொண்ட வேலைக்குச் செல்பவர்கள் நாள் முழுவதும் உடல் வியர்வை, உடல் சோர்வை போக்கும் விதமாக இரவில் குளிக்கும் வழக்கத்தை பின்பற்றுவார்கள்.

    உடல் உழைப்பு சார்ந்த விஷயமாக பார்க்காமல் எந்த நேரத்தில் குளிப்பது சிறந்தது? என்ற கேள்வி பலருக்கும் எழுவதுண்டு. இது தொடர்பாக மேற்கொள்ளப்பட்ட ஆராய்ச்சியில், காலையில் குளிப்பதை விட இரவில் குளிப்பதுதான் அதிக பலன்களை கொண்டிருப்பது தெரியவந்துள்ளது.

    இரவில் ஏன் குளிக்க வேண்டும்?

    சரும நிபுணர்களின் கருத்துப்படி, தூங்க செல்வதற்கு முன்பு குளிப்பது சரும ஆரோக்கியத்திற்கு நலம் சேர்க்கும். வெளியே சென்றுவிட்டு வீடு திரும்பும்போது சருமத்தில் அழுக்கு, வியர்வை படிவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

    சிலருக்கு ஒவ்வாமை பிரச்சினையும் ஏற்படும். இரவில் ஆழ்ந்த தூக்கத்தை பெறுவதற்கு உடலை சுத்தம் செய்ய வேண்டும். இரவுநேர குளியல் அந்த வேலையை செய்துவிடும்.

    காலையில் குளிக்கலாமா?

    காலையில் குளித்துவிட்டு அந்த நாளை தொடங்குவது உற்சாகத்தைக் கொடுக்கும். காலை குளியல் நம் உணர்வுகளை புத்துணர்ச்சியாக்கும் தன்மை கொண்டது.

    பொதுவாக காலையில் எழுந்ததும் மேற்கொள்ளும் அன்றாட வேலைகளின் காரணமாக உடலில் சர்க்காடியன் ரிதத்தின் செயல்பாடுகளில் மாற்றம் ஏற்பட்டு உடல் வெப்பநிலை அதிகரிக்கும். அதிலும் ஜிம்முக்கு செல்பவராகவோ, தினமும் உடற்பயிற்சி செய்பவராகவோ இருந்தால் பயிற்சியை முடித்துவிட்டு கட்டாயம் குளிக்க வேண்டும். அப்போதுதான் உடல் வெப்பநிலை இயல்புக்கு திரும்பும்.

    எப்போதும் காலை குளியல் உடலுக்கும், மனதுக்கும் புத்துணர்வையும், உத்வேகத்தையும் கொடுக்கும். அதேவேளையில் இரவில் தூங்கச் செல்வதற்கு முன்பும் குளிக்க மறக்காதீர்கள்.

    இரவு குளியல் தூக்கத்திற்கு இடையூறாக இருக்குமா?

    தூங்குவதற்கு முன்பு குளிப்பது, சர்க்காடியன் ரிதத்தை கட்டுப்படுத்தி உடலின் உட்புற வெப்பநிலையை சீராக்கும். மேலும் இரவில் குளிக்கும்போது பகல் பொழுதில் உடலில் நிலவிய வெப்பநிலை படிப்படியாக குறையத் தொடங்கும். தூங்கும்போது உடலின் வெப்பநிலை குறைந்துவிடும்.

    இரவில் குளிக்கும்போது சருமம் சூடாகும், அதனை உலர்த்தும்போது குளிர்ச்சியடைந்துவிடும். அத்தகைய குளிர்ச்சி தன்மை இனிமையான தூக்கத்தை தொடங்குவதற்கு உதவும். அதனால்தான் காலை குளியலை விட இரவு குளியல் அதிக பலனை கொடுப்பதாகச் சொல்கிறார்கள்.

    எந்த குளியலில் பலன்கள் அதிகம் கிடைக்கும்?

    இரு குளியலையும் ஒப்பிடுகையில் இரவு குளியலில்தான் அதிக பலன் கிடைக்கிறது. சருமம் சார்ந்த பிரச்சினைகளில் இருந்து விடுபடவும், நல்ல தூக்கத்தை பெறவும், அடுத்த நாளை களைப்பின்றி உற்சாகமாகத் தொடங்கவும் இரவு நேர குளியல் உதவும்.

    மேலும் மன அழுத்தத்தை தூண்டும் கார்டிசோல் ஹார்மோன் அளவை சம நிலைப்படுத்தவும் இரவு குளியல் உதவுகிறது. இதன் மூலம் தோல் அழற்சி ஏற்படுவதற்கான வாய்ப்பு குறையும்.

    ×