என் மலர்![tooltip icon](/images/info-tooltip.svg)
முகப்பு » Who died? investigation
நீங்கள் தேடியது "Who died? investigation"
- மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மயங்கி விழுந்து இறந்தவர் யார்? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மகப்பேறு வார்டுக்கு எதிரே உள்ள காத்திருப்பு பகுதி அருகில் மயங்கி கிடந்தார்.
மதுரை
மதுரை அரசு ஆஸ்பத்திரி மகப்பேறு வார்டுக்கு எதிரே உள்ள காத்திருப்பு பகுதி அருகில் கடந்த 29-ந் தேதி காலை 50 வயது மதிக்கத்தக்க நபர் மயங்கி கிடந்தார். அவரை அவசர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவர் இறந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது தெரியவில்லை. வெள்ளை கலர் சட்டையும், பச்சை கலர் போர்வையும் அணிந்திருந்தார். வலது மார்பின் கீழ கருப்பு மச்சமும், இடது பக்க விலாவில் காயத்தழும்பும் காணப்படுகிறது. அவரது உடல் அரசு ஆஸ்பத்திரி சவக்கிடங்கில் வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அரசு ஆஸ்பத்திரி காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
×
X