என் மலர்
நீங்கள் தேடியது "with ganja"
- பவானிசாகர் தொப்பம் பாளையம் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர்.
- பாலித்தீன் கவரில் 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது.
சத்தியமங்கலம்,
ஈரோடு மாவட்டம் பவானிசாகர் சிறப்பு உதவி ஆய்வாளர் பூர்ணசந்திரன் மற்றும் போலீசார் பவானி சாகர் அருகே உள்ள தொப்பம் பாளையம், நால்ரோடு ஆகிய பகுதிகளில் ரோந்து சென்றனர்.
அவர்கள் பவானிசாகர் தொப்பம் பாளையம் அண்ணாநகர் பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது போலீசாரை பார்த்ததும் மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் தப்பிஓட முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி சோதனை நடத்தினர்.
அப்போது அவர்களது மோட்டார் சைக்கிள் சீட்டிற்கு கீழே பாலித்தீன் கவரில் 100 கிராம் கஞ்சா வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் பவானி சாகர் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமை சேர்ந்த மதுரை செல்வன்(21), கவி என்கிற கவியரசன் (22) ஆகிய 2 பேரையும் கைது செய்தனர்.
- மகேஸ்வரி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டார்.
- அவரிடம் இருந்த கஞ்சாவை பவானி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.
பவானி:
பவானியில் கஞ்சா பொருட்கள் விற்பனை செய்ய கொண்டு வரப்ப டுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
சம்பவத்தன்று பவானி போலீசார் புதிய பஸ் நிலையம் அருகில் சந்தே கத்திற்கு இடம் அளிக்கும் வகையில் நின்று கொண்டி ருந்த ஒரு பெண்ணை பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.
அவர் பவானி காவேரி வீதி, கந்தன் பட்டறை பின்புறம் பகுதியில் வசிக்கும் விஜயன் என்கிற விஜயகுமார் மனைவி மகேஸ்வரி (26) என்பதும், அவர் கஞ்சா விற்பனை செய்யும் வகையில் 1½ கிலோ கஞ்சா வைத்திருந்தது தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து மகேஸ்வரி கைது செய்யப்பட்டு கோவை மத்திய சிறைச்சா லையில் அடைக்கப்பட்டார். மேலும் அவரிடம் இருந்து 1½ கிலோ கஞ்சாவை பவானி போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.