என் மலர்
நீங்கள் தேடியது "WIvIND"
- 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, ஐந்து 20 ஓவரில் ஆடுகிறது.
- ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 1-ந்தேதி நடக்கிறது.
புதுடெல்லி:
இந்திய கிரிக்கெட் அணி அடுத்த மாதம் (ஜூலை) வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் ஐந்து 20 ஓவர் ஆட்டங்களில் விளையாடுகிறது. இதற்கான போட்டி அட்டவணையை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்டுள்ளது.
ஜூலை 12 முதல் 16 வரை முதல் டெஸ்டும், ஜூலை 20 முதல் 24 வரை 2-வது டெஸ்ட்டும் நடக்கிறது. ஒருநாள் போட்டிகள் ஜூலை 27, 29 மற்றும் ஆகஸ்ட் 1-ந்தேதியும், 20 ஓவர் ஆட்டங்கள் ஆகஸ்ட் 3, 6, 8, 12 மற்றும் 13 ஆகிய தேதிகளிலும் நடக்கிறது. இந்திய நேரப்படி டெஸ்ட் போட்டிகள் இரவு 7.30 மணிக்கும், ஒருநாள் ஆட்டங்கள் இரவு 7 மணிக்கும், 20 ஓவர் போட்டிகள் இரவு 8 மணிக்கும் தொடங்குகிறது.
- ரோகித் சர்மா 7 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளார். 2 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. ஒரு டெஸ்ட் ‘டிரா’ ஆனது.
- கடந்த 11 இன்னிங்சில் அவர் 50 ரன்னுக்கு மேல் எடுத்தது இல்லை.
புதுடெல்லி:
லண்டன் ஓவல் மைதானத்தில் சமீபத்தில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷின் இறுதிப் போட்டியில் இந்திய அணி 209 ரன் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று கோப்பையை இழந்தது.
கடந்த 10 ஆண்டுகளாக இந்திய அணியால் ஐ.சி.சி. போட்டிகளில் கோப்பையை வெல்ல முடியவில்லை. இந்த தோல்வியால் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறார்.
11 பேர் கொண்ட அணியில் அஸ்வினை சேர்க்காதது மற்றும் இந்திய வீரர்கள் செயல்பாடு போன்றவற்றால் அவரும், பயிற்சியாளர் ராகுல் டிராவிட்டும் விமர்சனத்தை சந்தித்து வருகிறார்கள்.
இந்திய அணி அடுத்து வெஸ்ட் இண்டீசில் அடுத்த மாதம் சுற்றுப் பயணம் செய்து 2 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டி, ஐந்து 20 ஓவர் ஆட்டத்தில் விளையாடுகிறது.
இந்த நிலையில் வெஸ்ட் இண்டீஸ் பயணத்துக்கு பிறகு கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்று தகவல் வெளியாகி உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரில் அவரது செயல்பாட்டை பொறுத்து கேப்டன் பதவியின் தலைவிதி நிர்ணயிக்கப்படும்.
இதுதொடர்பாக இந்திய கிரிக்கெட் கட்டுபாட்டு வாரிய நிர்வாகி ஒருவர் கூறியதாவது:-
கேப்டன் பதவியில் இருந்து ரோகித் சர்மா நீக்கப்படுவார் என்பது ஆதாரமற்றது. ஐ.சி.சி.யின் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-ம் ஆண்டில் முடிவடையும் போது அவருக்கு கிட்டத்தட்ட 38 வயதாகிவிடும். இதனால் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2 வருட சுழற்சி முழுவதிலும் ரோகித் சர்மா கேப்டன் பதவியில் நீடிப்பாரா? என்பது ஒரு பெரிய கேள்வியாகவே உள்ளது.
வெஸ்ட் இண்டீசில் நடைபெறும் 2 டெஸ்ட் போட்டியில் அவரது பேட்டிங் நிலையை தேர்வுக் குழு பார்க்கும் என்று நம்புகிறேன்.
வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கு பிறகு இந்திய அணி தென் ஆப்பிரிக்காவுக்கு செல்லும். அதன் பிறகு டிசம்பர் இறுதி வரை டெஸ்ட் இல்லை. எனவே தேர்வுக்குழுவினர் ஆலோசித்து முடிவு எடுக்க அவகாசம் உள்ளது.
இவ்வாறு அந்த நிர்வாகி கூறியுள்ளார்.
ரோகித் சர்மா 7 டெஸ்டுக்கு கேப்டனாக இருந்து 4-ல் வெற்றி பெற்றுள்ளார். 2 டெஸ்டில் தோல்வி ஏற்பட்டது. ஒரு டெஸ்ட் 'டிரா' ஆனது.
36 வயதாகும் ரோகித் சர்மாவின் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான நாக்பூா் டெஸ்டில் சதம் அடித்த பிறகு அவர் மிகப் பெரிய ஸ்கோரை எடுக்கவில்லை. கேப்டன் பதவியில் 7 டெஸ்டில் 390 ரன்கள் எடுத்துள்ளார்.
சராசரி 35.45 ஆகும். கடந்த 11 இன்னிங்சில் அவர் 50 ரன்னுக்கு மேல் எடுத்தது இல்லை.
- இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது.
- முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12-ந் தேதியும் 2-வது டெஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளது.
புதுடெல்லி:
உலக டெஸ்ட் கிரிக்கெட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 209 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணியை வென்றது. இதனால் இந்தியா மீது மோசமான விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில், உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2023-25 தொடருக்கான முதல் டெஸ்ட் தொடரை வெஸ்ட் இண்டீஸ் உடன் இந்திய அணி தொடங்க உள்ளது. இதற்காக வரும் ஜூலை 12-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ந் தேதி வரை இந்திய அணி மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ளது.
இந்திய அணி, 2 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. முதல் டெஸ்ட் போட்டி ஜூலை 12-ந் தேதியும் 2-வது டெஸ்ட் 20-ம் தேதியும் நடைபெற உள்ளது. ஜூலை 27, 29, ஆகஸ்ட் 1-ம் தேதிகளில் 3 ஒருநாள் போட்டிகள் நடைபெற உள்ளது.ஆகஸ்ட் 3, 6, 8, 12, 13 ஆகிய தேதிகளில் 5 டி20 போட்டிகள் நடைபெற உள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சில ஆட்டங்களில் (டெஸ்ட் தொடர் அல்லது வெள்ளைப்பந்து தொடர்) இந்திய கேப்டன் ரோகித் சர்மாவுக்கு ஓய்வு அளிக்கப்படலாம் என தகவல்கள் வெளி வந்த வண்ணம் உள்ளன.
கடந்த சில மாதங்களாக தொடர்ந்து கிரிக்கெட் ஆடி வருவதால் அவருக்கு ஓய்வு தேவைப்படலாம் என்பதால் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் சில ஆட்டங்களில் அவர் ஓய்வு எடுக்க அறிவுத்தப்படலாம் எனவும் தகவல்கல் வெளியாகி உள்ளன.
- டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்டுள்ளார்.
- ஒருநாள் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார்.
வெஸ்ட் இண்டீஸ்-க்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் போட்டியும் அடுத்து ஒருநாள் போட்டிகளும் நடக்கிறது.
இந்நிலையில் ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை பிசிசிஐ அறிவித்துள்ளது. இரு அணிகளுக்கு ரோகித் சர்மா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஒருநாள் தொடருக்கு ஹர்திக் பாண்ட்யாவும், டெஸ்ட் தொடருக்கு ரகானேவும் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
டெஸ்ட் அணியில் புஜாரா நீக்கப்பட்டுள்ளார். புதுமுகமாக ருதுராஜ் கெய்க்வாட், ஜெய்ஸ்வால், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஒருநாள் அணியை பொறுத்தவரை சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம் பிடித்துள்ளார். மேலும் ருதுராஜ், ஜெய்ஸ்வால் மற்றும் உம்ரான் மாலிக், முகேஷ் குமார் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.
ஒருநாள் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், இஷான் கிஷன், ஹர்திக் பாண்ட்யா, ஷர்துல் தாக்கூர், ஜடேஜா, அக்சர் படேல், யுஸ்வேந்திர சாஹல், குல்தீப் யாதவ், ஜெய்தேவ் உனட்கட், முகமது. சிராஜ், உம்ரான் மாலிக், முகேஷ் குமார்.
டெஸ்ட் அணி:
ரோகித் சர்மா (கேப்டன்), சுப்மன் கில், ருதுராஜ் கெய்க்வாட், விராட் கோலி, யஷஸ்வி ஜெய்ஸ்வால், அஜிங்க்யா ரகானே, கேஎஸ் பரத், இஷான் கிஷான், அஷ்வின், ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், அக்சர் படேல், முகமது சிராஜ், முகேஷ் குமார், ஜெய்தேவ் உனட்கட், நவ்தீப் சைனி.
- ராகுல் டிராவிட் இளம் வீரர்களை சோபார்ஸிடம் அறிமுகம் செய்தார்.
- தமிழக வீரர் அஸ்வினும் அவரிடம் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.
வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி வீரர்கள் பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி, இம்மாதம் 12-ம் தேதி டொமினிகாவின் வின்ட்சர் பார்க் மைதானத்தில் தொடங்குகிறது.
இந்நிலையில் கிரிக்கெட் மைதானத்திற்கு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் ஜாம்பவான் கேர்ஃபீல்டு சோபர்ஸ் வருகை தந்தார். அவரை உற்சாகமாக வரவேற்ற இந்திய அணியின் வீரர்கள் பேசி மகிழ்ந்தனர். விராட் கோலி, ரோகித் தங்களை முதலில் அறிமுகப்படுத்திக் கொண்டனர்.

பின்னர் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் இளம் வீரர்களை சோபார்ஸிடம் அறிமுகம் செய்தார். தமிழக வீரர் அஸ்வினும் அவரிடம் கை குலுக்கி அறிமுகம் செய்து கொண்டார்.
இது தொடர்பான வீடியோவை பிசிசிஐ தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
- முதல்முறையாக ஜெய்ஸ்வால், திலக்வர்மா, முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
- எதிர்பார்க்கும் வரிசையில் விராட் கோலி அல்லது ரோஹித் ஷர்மாவுக்கு இன்னும் இடமில்லை.
ஆகஸ்ட் 3 ஆம் தேதி தொடங்கும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐயின் அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அறிவித்துள்ளது.
இந்த அணியில் முதல்முறையாக ஜெய்ஸ்வால், திலக்வர்மா, முகேஷ் குமார் ஆகியோருக்கு வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஹர்திக் பாண்டியா தலைமையிலான அணியில் இஷான் கிஷன், ஷுப்மான் கில், சூர்ய குமார் யாதவ், சஞ்சு சாம்சன், அக்சர் படேல், சாஹல், குல்தீப் யாதவ், ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங், உம்ரான் மாலிக், அவேஷ் கான், முகேஷ் குமார் ஆகியோரும் அணியில் இடம்பெற்றுள்ளனர்.
ஜெய்ஸ்வால், முன்னதாக டெஸ்ட் மற்றும் சர்வதேச ஒரு நாள் போட்டியில் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு, 20-ஓவர்கள் தொடரில் ஒரு ட்ரிஃபெக்டாவை முடித்தார்.
அதே நேரத்தில் வர்மா மும்பை இந்தியன்ஸ் உடனான நட்சத்திர பேக்-டு-பேக் சீசன்களுக்காக வெகுமதி பெற்றார்.
எதிர்பார்க்கும் வரிசையில் விராட் கோலி அல்லது ரோஹித் ஷர்மாவுக்கு இன்னும் இடமில்லை.
அடுத்த ஆண்டு உலகக் கோப்பையை மனதில் கொண்டு டி 20 ஐ தொடங்கி ஒரு இடைநிலை மாற்றத்தை உருவாக்க இந்தியா முயற்சித்து வருகிறது.
- நான் இளமையாக இருக்கிறேன். என்னுள் நிறைய கிரிக்கெட் உள்ளது.
- கடந்த ஒரு ஆண்டாக எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்துள்ளேன்.
இந்திய அணி 2 டெஸ்ட் போட்டி 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீசுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. முதலில் டெஸ்ட் போட்டி நடைபெறுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாளை தொடங்குகிறது.
இந்நிலையில் நான் இளமையாக இருக்கிறேன். என்னுல் நிறைய கிரிக்கெட் உள்ளது என இந்திய அணியின் துணை கேப்டன் ரகானே தெரிவித்துள்ளார்.
இது குறித்து ரகானே கூறியதாவது:-
நான் இளமையாக இருக்கிறேன். என்னுள் நிறைய கிரிக்கெட் உள்ளது. கடந்த ஒரு ஆண்டாக எனது உடற்தகுதிக்காக நான் நிறைய உழைத்துள்ளேன். பேட்டிங்கில் சில நுணுக்களை கற்று கொண்டு பயிற்சி எடுத்துள்ளேன். நான் எனது கிரிக்கெட்டை மிகவும் ரசிக்கிறேன், எனது பேட்டிங்கை ரசிக்கிறேன். நான் எதிர்காலத்தைப் பற்றி அதிகம் சிந்திக்கவில்லை. ஒவ்வொரு ஆட்டமும் தனிப்பட்ட முறையில் மற்றும் குழுவின் பார்வையில் முக்கியமானது. நான் அதில் தான் கவனம் செலுத்துகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- வேகப்பந்து வீரர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது.
- இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 4 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருந்தது.
ரோசவ்:
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசவ்வில் இன்று (12-ந் தேதி) தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
லண்டன் ஓவல் மைதானத்தில் கடந்த மாதம் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்திய அணி மோசமாக தோற்று இருந்ததால் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. அதில் இருந்து மீண்டு இந்த தொடரில் இந்திய வீரர்கள் சிறப்பாக விளையாடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
3-வது வரிசையில் விளையாடும் புஜாரா இந்த தொடரில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இதனால் அவர் இடத்தில் இடம் பெறப்போவது யார்? என்று ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது. ஐ.பி.எல். தொடரில் அபாரமாக ஆடிய ஜெய்ஷ்வாலுக்கு வாய்ப்பு கிடைக்கும் என்று கருதப்படுகிறது.
அவர் தொடக்க வீரராக ஆடுவாரா? அல்லது 3-வது வரிசையில் களம் இறங்குவாரா? என்பது தெரியவில்லை. ரோகித் சர்மாவுடன் ஜெய்ஷ்வால் தொடக்க வரிசையில் ஆடினால் சுப்மன்கில் 3-வது வீரராக விளையாடுவார்.
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் ஸ்ரீகர் பரத் ஆட்டம் ஏமாற்றம் அளிப்பதாக இருந்தது. இதனால் அவர் இடத்தில் இஷான் கிஷன் இடம் பெறுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது.
முன்னணி சுழற்பந்து வீச்சாளரான அஸ்வினை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் 11 பேர் கொண்ட அணியில் சேர்க்காதது கடும் விமர்சனத்தை ஏற்படுத்தி இருந்தது. இந்த டெஸ்டில் அவர் ஜடேஜாவுடன் இணைந்து தாக்கத்தை ஏற்படுத்துவார்.
வேகப்பந்து வீரர்களான முகமது ஷமி, உமேஷ் யாதவ் ஆகியோருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஓய்வு கொடுக்கப்பட்டு உள்ளது. இதனால் முகமது சிராஜ், ஷர்துல் தாகூர் முதன்மை பந்துவீச்சாளர்களாக இருப்பார்கள். 3-வது வேகப்பந்து வீரராக புதுமுகமான முகேஷ் குமாருக்கு வாய்ப்பு வழங்கப்படுமா? என்று எதிர்பார்க்கப்படுகிறது. அவருக்கு வாய்ப்பு கிடைக்காவிட்டால் ஜெய்தேவ் உனத்கட் அல்லது நவ்தீப் சைனி இடம் பெறுவர்.
இந்திய அணி வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடைசியாக விளையாடிய 4 டெஸ்டிலும் வெற்றி பெற்று இருந்தது. 2002-ம் ஆண்டுக்கு பிறகு இந்திய அணி வெஸ்ட்இண்டீசிடம் தோற்றது இல்லை. அதாவது கடைசியாக ஆடிய 23 டெஸ்டில் வெஸ்ட் இண்டீ சுக்கு எதிராக தோற்றது கிடையாது.
இரு அணிகள் இடையே கடைசியாக நடந்த 8 டெஸ்ட் தொடரையும் இந்தியாவே வென்று இருந்தது. இதனால் ரோகித்சர்மா தலைமையிலான அணி மிகுந்த நம்பிக்கையுடன் வெஸ்ட்இண்டீசை எதிர்கொள்ளும்.
பிராத்வெயிட் தலைமையிலான வெஸ்ட்இண்டீஸ் அணி கடந்த பிப்ரவரி, மார்ச் மாதம் தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்டிலும் தோற்று தொடரை இழந்தது.
ஒரு காலத்தில் ஜாம்பவானாக திகழ்ந்த அந்த அணி இன்று மோசமான நிலையில் காணப்படுகிறது. இந்தியாவுக்கு எதிராக சிறப்பாக விளையாட அந்த அணி கடுமையாக போராடும்.
இன்றைய டெஸ்ட் இந்திய நேரப்படி இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது.
- வெஸ்ட் இண்டீஸ் - இந்தியா அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் இன்று இரவு தொடங்குகிறது.
- வேகப்பந்து வீச்சாளராக சிராஜ், முகேஷ், உனத்கட் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒருநாள் போட்டி மற்றும் 5 இருபது ஓவர் போட்டிகளில் விளையாடுவதற்காக வெஸ்ட் இண்டீஸ் சென்றுள்ளது.
இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள ரோசவ்வில் இன்று (12-ந் தேதி) தொடங்குகிறது. ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி வெற்றியுடன் கணக்கை தொடங்கும் ஆர்வத்தில் உள்ளது.
இந்நிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான ஆடும் லெவனை இந்திய அணியின் முன்னாள் வீரர் வாசிம் ஜாபர் வெளியிட்டுள்ளார்.

அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால் இடம் பெற்றனர். 3-வது இடத்தில் கில் இடம் பிடித்துள்ளார். கீப்பராக பரத்துக்கு பதில் இஷான் கிஷனை தேர்வு செய்துள்ளார். வேகப்பந்து வீச்சாளராக சிராஜ், முகேஷ், உனத்கட் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.
வாசிம் ஜாபரின் ஆடும் லெவன்:-
ரோகித் சர்மா, ஜெய்ஸ்வால், சுப்மன் கில், விராட் கோலி, ரகானே, இஷான் கிஷன், ஜடேஜா, அஸ்வின், உனத்கட், சிராஜ், முகேஷ் குமார்.
- சர்வதேச கிரிக்கெட்டில் தந்தை-மகன் ஜோடிக்கு எதிராக விளையாடிய வீரர்களின் பட்டியலில் சச்சினுடன் கோலி இணைந்துள்ளார்.
- மேற்கிந்தியத் தீவுகளின் இளம் திறமைசாலியாக ‘ஜூனியர்’ சந்தர்பால் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி டெஸ்ட், ஒருநாள் போட்டி, டி20 ஆகிய தொடர்களில் விளையாட உள்ளது. முதலில் டெஸ்ட் தொடரும் அடுத்ததாக ஒருநாள் அதை தொடர்ந்து டி20 தொடரும் நடக்கவுள்ளது. இருஅணிகளுக்கும் இடையேயான முதல் டெஸ்ட் போட்டி இந்திய நேரப்படி இன்று இரவு 7.30-க்கு தொடங்குகிறது.
இந்நிலையில் இந்த டெஸ்ட் போட்டியில் விளையாடுவதன் மூலம் இந்திய அணி நட்சத்திர ஆட்டக்காரர் விராட் கோலி புதிய சாதனையை படைக்கவுள்ளார்.
2011-ல் டெஸ்ட் போட்டியில் விராட் கோலி அறிமுகமானார். அத்துடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஜாம்பவான் சந்தர்பாலுக்கு எதிராகவும் விளையாடினார். இன்று நடக்கும் முதல் டெஸ்ட் போட்டியில் ஜூனியர் சந்தர்பாலுடன் விளையாட உள்ளார்.
இதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் தந்தை-மகன் ஜோடிக்கு எதிராக விளையாடிய வீரர்களின் பட்டியலில் சச்சினுடன் கோலி இணைந்துள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் 1992-ல் ஆஸ்திரேலிய அணியின் ஜியோஃப் மார்ஷை எதிர்கொண்டார். அதன்பின் 2011/12 -ம் ஆண்டு ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது மார்ஷின் மகன் ஷான் மார்ஷுக்கு எதிராக விளையாடும் வாய்ப்பு அவருக்கு கிடைத்தது.
மேற்கிந்தியத் தீவுகளின் இளம் திறமைசாலியாக 'ஜூனியர்' சந்தர்பால் இதுவரை 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 45.30 சராசரியுடன் ரன் குவித்துள்ளார். அவர் தனது தந்தை செய்ததைப் போலவே இந்திய பந்துவீச்சாளர்களுக்கு சவால் விட ஆர்வமாக இருப்பார்.
- டாஸ் வென்று முதலில் ஆடிய வெஸ்ட் இண்டீஸ் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
- இத்தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் முக்கியத்துவம் பெறுகிறது.
டொமினிகா:
வெஸ்ட் இண்டீசில் சுற்றுப்பயணம் செய்துள்ள இந்திய கிரிக்கெட் அணி 2 டெஸ்ட், 3 ஒரு நாள் மற்றும 5 டி20 போட்டிகளில் விளையாடுகிறது. முதலில் டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது.
அதன்படி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டொமினிகாவில் உள்ள வின்ட்சர் பார்க் மைதானத்தில் இன்று தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங் செய்தது. ஆரம்பம் முதல் இந்திய அணி அசத்தலாக பந்து வீசியது. குறிப்பாக, அஸ்வின், ஜடேஜா சுழலில் அந்த அணி சிக்கியது.
அந்த அணியின் ஆலிக் அதானஸ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 47 ரன்கள் எடுத்தார். மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட், சிராஜ், ஷர்துல் தாக்குர் தலா ஒரு விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, இந்திய அணி முதல் இன்னிங்சில் களமிறங்குகிறது.
இந்த தொடர் 3-வது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்புக்குட்பட்டது என்பதால் அந்த வகையில் கூடுதல் முக்கியத்துவம் பெறுகிறது.
- சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி அஸ்வின் சாதனை படைத்துள்ளார்.
- கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.
டொமினிகா:
இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டொமினிகாவில் தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பேட்டிங் தேர்வு செய்தது.
வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 64.3 ஓவரில் 150 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஆலிக் அதானஸ் மட்டும் 47 ரன்கள் எடுத்தார். இந்தியா சார்பில் அஸ்வின் 5 விக்கெட், ஜடேஜா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இந்நிலையில், இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்கள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார். 700 விக்கெட் வீழ்த்திய 3வது வீரர் அஸ்வின் ஆவார்.
இதில் டெஸ்ட் கிரிக்கெட்டில் 477 விக்கெட்டும், ஒருநாள் போட்டிகளில் 151 விக்கெட்டும், டி20 போட்டிகளில் 72 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
ஏற்கனவே அனில் கும்ப்ளே, ஹர்பஜன் சிங் ஆகியோர் சர்வதேச கிரிக்கெட்டில் 700 விக்கெட்களை வீழ்த்தியுள்ளனர்.