என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Women hostels"

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரியது.
    • வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் பாதுகாவலருமான பிஷால் சோனார் தலைமை ஏற்றார்

    அசாமின் சில்சார் பகுதியில் சுமார் 100 கிலோ எடையுள்ள ராட்சத மலைப்பாம்பு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. 17 அடி நீளமுள்ள, பர்மிய மலைப்பாம்பு பராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதில் மிகப்பெரியது.

    அசாம் மாநிலம் சில்வார் பகுதியில் பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள பெண்கள் தங்கும் விடுதி அருகே சுமார் 100 கிலோ எடையுள்ள ராட்சத பாம்பு நுழைந்துள்ளது.

    கடந்த 18 ஆம் தேதி இரவு 10.30 மணியளவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. கிட்டத்தட்ட 100 கிலோகிராம் எடையுள்ள 17 அடி நீளமுள்ள இந்த பர்மிய மலைப்பாம்புபராக் பள்ளத்தாக்கில் மனித வாழ்விடத்தில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்டதிலேயே மிகப்பெரியது.

    பாம்பு வந்தது குறித்த தகவலின் பேரில் வனவிலங்கு ஆராய்ச்சியாளரும் பாதுகாவலருமான பிஷால் சோனார் மற்றும் அவரது உதவியாளர் திரிகல் சக்ரவர்த்தி உள்ளிட்ட 13 பேர் சேர்ந்து பாம்பை மீட்டனர். இதுதொடர்பான காட்சிகள் தற்போது வைரலாகி வருகிறது.  

    • உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதி, குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம் இயங்க அனுமதி இல்லை
    • கண்காணிப்பு குழுக்களின் மூலம் நடத்தப்படும் தொடர் ஆய்வின் மூலம் குறைகள் கண்டறியும் பட்சத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்களின் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    தென்காசி:

    தென்காசி மாவட்ட கலெக்டர் ஆகாஷ் வெளியிட்டுள்ள செய்திக்கு–றிப்பில் கூறியிருப்பதாவது:-

    தென்காசி மாவட்டத்தில் செயல்பட்டு வரும் அனைத்து பணிபுரியும் மகளிர் விடுதிகள், குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இடங்கள், தமிழக அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் விடுதிகள் மற்றும் இல்லங்கள் முறைப்படுத்துதல் சட்டம் 2014-ன் கீழ் மாவட்ட கலெக்டர் அவர்களின் மூலம் உரிமம் பெற்று செயல்படவேண்டும். உரிமம் இல்லாமல் செயல்படும் மகளிர் விடுதி, குழந்தைகள் மற்றும் பெண்கள் தங்கும் இல்லம் இயங்க அனுமதி இல்லை.

    எனவே உரிய சான்றுகளுடன் பதிவு செய்தல், புதுப்பித்தல் போன்றவற்றை தனியார் விடுதிகள், இல்லங்களை நடத்திவரும் அனைத்து நிர்வாகிகளும் கூடிய விரைவில் முடித்திட வேண்டும். மேலும் விடுதியில் போதிய பாதுகாப்பு வழங்குதல் மற்றும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் உள்ளதை உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டுக் கொள்ளப்படு கிறார்கள். கண்காணிப்பு குழுக்களின் மூலம் நடத்தப்படும் தொடர் ஆய்வின் மூலம் குறைகள் கண்டறியும் பட்சத்தில் விடுதிகள் மற்றும் இல்லங்களின் மேல் சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


    ×