என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "won gold"

    • சிவகங்கை மாணவர் தங்கம் வென்றார்.
    • மாணவர் சாய்வாசனை பயிற்சியாளர் ஜெரிமார்டின், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    சிவகங்கை

    சிவகங்கை முதலியார் தெருவை சேர்ந்த பாஸ்கரன்-லதா தம்பதியரின் மகன் சாய்வாசன் (14). சென்னை தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படிக்கிறார். பாட்மின்டன் வீரரான இவர் ஒடிசா மாநிலம் புவனேசுவரில் நடந்த தேசிய பாட்மின்டன் சாம்பியன் ஷிப் போட்டியில் பங்கேற்றார். 15 வயதிற்கு உட்பட்ட ஒற்றையர் பிரிவு இறுதி ஆட்டத்தில் சாய்வாசன், அசாம் வீரர் போர்னில் ஆகாசை 15-21, 23-21, 21-17 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார். இதில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்.சாய்வாசனை பயிற்சியாளர் ஜெரிமார்டின், பெற்றோர், ஆசிரியர்கள் பாராட்டினர்.

    • தேசியப் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற வீரர்கள்-வீராங்கனைகளை சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.
    • கூடோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    புதுச்சேரி:

    அகில இந்திய கூடோ பெடரேஷன் சார்பில் தேசிய அளவிலான கூடோ போட்டியை மகாராஷ்டிரா மாநிலத்தில் நடத்தியது.

    இந்தப் போட்டியில் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலத்தைச் சேர்ந்த கூடோ விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

     புதுவை மாநிலத்தைச் சேர்ந்த கூடோ வீரர்கள் 20 பேர் கொண்ட அணி புதுவை மாநில கூடோ சங்க செயலாளர் சந்தோஷ் குமார் தலைமையில் மற்றும் மூத்த நிர்வாகிகள் அகில இந்திய குடோ நடுவர்கள் பாலச்சந்தர், செந்தில்குமார் முன்னிலையில் கலந்து கொண்டனர்.

    இந்த போட்டியில் புதுவை அணியை சேர்ந்த பாலச்சந்தர், செந்தில்குமார், தமிழரசி, சுப்புராம், சுதர்சன் உள்ளிட்டவர்கள் தங்கம் மற்றும் வெண்கல பதக்கங்களை வெண்றனர்.

    இவர்களுக்கு பாராட்டு விழா புதுவையில் நடைபெற்றது. பாராட்டு விழாவிற்கு புதுவை மாநில கூடோ சங்க பொதுச் செயலாளர் சந்தோஷ் குமார் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் பாலச்சந்தர், இணைச் செயலாளர் செந்தில்குமார், மாநில விளையாட்டு வீரர் நல சங்க இணை செயலாளர் கராத்தே சுந்தர்ராஜன் ஆகியோர் முன்னிலையில் வகித்தனர்.

    புதுவை மாநில கூடோ சங்கத் தலைவர் வளவன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு தேசியப் போட்டியில் வெற்றி பெற்று பதக்கங்களை வென்ற வீரர்கள்-வீராங்கனைகளை சான்றிதழ் வழங்கி வாழ்த்தினார்.

    நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவரையும் சீனியர் பயிற்சியாளர் அசோக் வரவேற்றார். முடிவில் காலாப்பட்டு சீனியர் பயிற்சியாளர் செல்வம் நன்றி கூறினார்.

    • தேசிய அளவிலான சிலம்ப போட்டி பண்ருட்டி மாணவன் தங்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
    • இதில் தமிழகம் சார்பில் பண்ருட்டி மாணவன் துளசிதரன் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

    கடலூர்:

    பலவேறு பயனுள்ள வேதிப்பொருட்களை தயாரிக்கப் பயன்படும் மெத்தனால் என்ற திதேசிய அளவிலான இளையோர் சிலம்பப் போட்டி அரியானாவில் கடந்த 4ந் தேதி 6ம் தேதி வரை நடந்தது. இதில் தமிழகம் சார்பில் பண்ருட்டி மாணவன் துளசிதரன் கலந்து கொண்டு தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.தங்கவென்ற மாணவன் துளசிதரன் நேற்று பண்ருட்டி திரும்பினார். பண்ருட்டியில் அவருக்கு சிலம்பம் கழகம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது . தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில்தங்க வென்ற மாணவன் துளசிதரனை பண்ருட்டி துணை போலீஸ் சூப்பிரண்டு சபியுல்லா பாராட்டி வாழ்த்து தெரிவித்தார். பண்ருட்டி வீர தமிழர் தற்காப்பு கலை கூடபேரவை சிலம்பம் ஆசிரியர் சிகாமணி,முத்துலிங்கம் தண்டபாணி ஆகியோர் உடனிருந்தனர்.

    ×