என் மலர்
நீங்கள் தேடியது "Zepto"
- 10 நிமிடத்தில் வீடுகளுக்கு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதே இவர்கள் நோக்கம்.
- மக்கள் நெருக்கம் மிக்க மும்பையில் இந்த நிறுவனம் தன் சேவையை நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
மும்பையை தலைமையிடமாகக் கொண்ட "Zepto" நிறுவனம் பால்ய கால நண்பர்களான ஆதித் பலிச்சா மற்றும் கைவல்யா வோஹ்ரா ஆகியோரால் துவங்கப்பட்டது.
10 நிமிடத்தில் வீடுகளுக்கு மளிகைப் பொருட்களை டெலிவரி செய்வதே இவர்கள் துவங்கிய செப்டோ நிறுவனத்தின் பணி.
மக்கள் நெருக்கம் மிக்க மும்பையில் இந்த நிறுவனம் தன் சேவையை நாடு முழுவதும் பிரபலமடைந்துள்ளது.
செப்டோவில் அவ்வபோது ஆஃபர்களும் அறிவிக்கப்படுவது வாடிக்கை. இதனால், செப்டோவை பின்பற்றி வரும் பயனாளர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்த வருகிறது.
இந்நிலையில், சமீபத்தில் செப்டோவில் கொத்தமல்லியின் விலை ரூ.100க்கு விற்கப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

அரியானா மாநிலம் குருகிராமை நகரத்தில் வசிக்கும் நபர் ஒருவர் செப்டோவில் 100 கிராம் கொத்தமல்லி ரூ.131க்கு விற்கப்படுவதை தனது ஃபோனில் ஸ்க்ரீன் ஷாட் எடுத்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.
கடந்த ஜூலை 8ம் தேதி அன்று பகிரப்பட்ட பதிவில், உள்நாட்டில் பெறப்பட்ட மற்றும் பிரீமியம் நறுமண கொத்தமல்லி கட்டுகளின் விலை 100 கிராமுக்கு முறையே ரூ.131 மற்றும் ரூ.141 என விற்பனை செய்யப்படுவதாக குறிப்பிட்டிருந்தது.
மேலும் அந்த பதிவில், "உள்ளூர் விற்பனையாளர்களிடமிருந்து வாங்குவோம்... அவர்கள் வளர உதவுவோம்" என்று அந்த நபர் பதிவின் கீழ் கருத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து, "மலிவு மற்றும் அணுகல் ஆகியவற்றுக்கு இடையே ஒரு மெல்லிய கோடு உள்ளது," என்று மற்றொரு நபர் குறிப்பிட்டிருந்தார்.
- மீட்டிங்கள் அனைத்தும் நள்ளிரவு 2 மணிக்கு நடத்தப்படும் சூழ்நிலையே உள்ளது.
- ரூ. 30,000 க்கு அதிகமான விலையுள்ள செல்போன் பயன்படுத்துபவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது.
பிரபல மளிகை சாமான் மற்றும் காய்கறிகள் டெலிவரி நிறுவனமான ஜெப்டோ [Zepto] நிறுவனத்தின் சிஇஓ ஆதித் பாலிச்சா தனது நிறுவனத்தில் டாக்சிக் வொர்க் காலச்சாரம் இருப்பதை மறுத்துள்ளார். வேலை வாழ்க்கை சமநிலையை மறுக்கும் 84 மணிநேர வேலை நேர நடைமுறையை ஆதரித்து கிரப்ட்டைல் சிஇஓ தக்ஷ் குப்தாவின் பதிவை ஆதித் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்ததை அடுத்து இந்த விவாதம் வெடித்துள்ளது.
ரெட்டிட் சமூக வலைதள பயனர் ஒருவர் தான் ஒரு வருடமாக வேலை செய்வதாகவும், அது "மிகவும் டாக்சிக் [ நச்சுத்] தன்மை வாய்த்த பணிச்சூழலை கொண்டுள்ளது என்றும் குற்றம் சாட்டினார். சிஇஓ ஆதித் மதியம் 2 மணிக்கு தான் தனது வேலைகளை தொடங்குகிறார்.

ஏனெனில் அவரால் காலையில் வேகமாக எழுந்திருக்க முடியவில்லை. இதனால் மீட்டிங்கள் அனைத்தும் நள்ளிரவு 2 மணிக்கு நடத்தப்படும் சூழ்நிலையே உள்ளது.மேலும் எந்த மீட்டிங்கும் சொன்ன நேரத்தில் நடப்பதில்லை. நேரம் மாற்றப்படுகிறது அல்லது தள்ளி வைக்கப்படுகிறது.
இதனால் ஊழியகர்கள் அலைக்கழிக்கப்படுகின்றனர். ஜெப்டோ இளைஞர்களை வேலைக்கு எடுக்க விரும்புகிறது, ஏனெனில் வயதானவர்கள் 14 மணி நேர் வேலையைத் தாங்கிக்கொள்ள மாட்டார்கள்.
ஜெப்டோ செயலியில் கஸ்டமர்களிடம் இருந்து பணம் பறிக்கும் பலவித மர்மமான செயல்முறைகள் உள்ளன. ரூ.30,000 க்கு அதிகமான விலையுள்ள செல்போன் பயன்படுத்துபவர்களிடம் அதிக பணம் வசூலிக்கப்படுகிறது.

குறைந்த சம்பளத்தில் கிடைப்பதால் இளைஞர்களை வேலைக்கு எடுக்கின்றனர். மேலும் மார்ச் மாதத்தில் அதிக பணிநீக்கங்கள் [layoffs] நடக்கும் என்று அந்த முன்னாள் ஊழியர் தனது ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.
இந்நிலையில் இதற்கு பதிலளித்துள்ள சிஇஓ ஆதித், வேலை - வாழ்க்கை சமம்பாட்டுக்கு தான் எதிரானவன் இல்லை எனவும், மற்ற நிறுவங்களும் வேலை வாழ்க்கை சமநிலையை ஊழியர்களுக்கு வழங்கவேண்டும் என்றே தான் வலியுறுத்துவதாகவும் விளக்கம் அளித்துள்ளார்.
மேலும் அந்த வொர்க் லைப் பேலன்ஸ் பதிவு தன்னுடைய கருத்து இல்லை என்றும் கிரப்ட்டைல் சிஇஓ தக்ஷ் குப்தாவின் கருத்தையே தான் பதிவிட்டதாகவும் ஆதிக் தெரிவித்துள்ளார்.
- இந்த நிதியாண்டில் 72% உயர்ந்து ரூ 5,747 கோடியாக செலவினம் அதிகரித்துள்ளது.
- கடந்த நிதியாண்டில் நஷ்டம் ரூ.1,272 கோடியாக இருந்த நிலையில் அதுவே இந்த நிதியாண்டில் ரூ.1,249 கோடியாக குறைந்துள்ளது.
ஆன்லைன் காய்கறிகள் மற்றும் பலசரக்கு டெலிவரி நிறுவனமான செப்டோ [Zepto] - உடைய வருவாய் நடப்பு நிதியாண்டில் 120 சதவீத வளர்ச்சியை எட்டியுள்ளது. 2023 நிதியாண்டில் அதன் வருவாய் ரூ.2,026 கோடியாக இருந்த நிலையில் இந்த நிதியாண்டில் அது ரூ.4,455 கோடியாக உயர்ந்துள்ளது.
செப்டோ தனது ஊழியர்களுக்காக இந்த நிதியாண்டு ரூ.426.30 கோடி செலவிட்டுள்ளது, இது முந்தைய ஆண்டு செலவிடப்பட்ட ரூ.263.45 கோடியை 62% அதிகமாகும்.
ரூ.492.65 கோடியை கிடங்குகளுக்காக செலவிட்டுள்ளது, இது முந்தைய நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ.344.79 கோடியை விட 43% அதிகமாகும்.
விளம்பரங்களுக்கு ரூ.303.5 கோடி செலவிட்டுள்ளது, முந்தைய நிதியாண்டில் செலவிடப்பட்ட ரூ 215.8 கோடியிலிருந்து செலவு விகிதம் 41% அதிகரித்துள்ளது.

மொத்தமாக செலவுகள் கடந்த நிதியாண்டில் ரூ 3,350 கோடியாக இருந்தது. அதுவே இந்த நிதியாண்டில் 72% உயர்ந்து ரூ 5,747 கோடியாக செலவினம் அதிகரித்துள்ளது.
இந்த வருடம் செப்டோவின் செலவினங்கள் அதிகரித்துள்ளபோதிலும் அதிக லாபம் காரணமாக நிறுவனத்தின் நஷ்டம் [நிகர இழப்பு] 2% வரை குறைந்துள்ளது. அதாவது கடந்த நிதியாண்டில் நஷ்டம் ரூ.1,272 கோடியாக இருந்த நிலையில் அதுவே இந்த நிதியாண்டில் ரூ.1,249 கோடியாக குறைந்துள்ளது.
இந்த தரவுகளை செப்டோ தலைமை நிர்வாக அதிகாரியும் இணை நிறுவனருமான ஆதித் பாலிச்சா இந்த நிதி அறிக்கையை தனது லிங்க்ட்இன் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

- ஸ்கிரீன் ஷாட்டுடன், செப்டோ, இதற்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ? என கேட்டுக் கொண்டுள்ளார்.
- பதிவின் கீழ் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது.
கர்நாடகா மாநிலம் பெங்களூரை சேர்ந்த பெண் வினிதா சிங். இவர் ஹார்ஸ் பவர் என்கிற நிறுவனத்தின் நிறுவனர் ஆவார்.
இவர் லிங்கிடுஇன் தளத்தில் வெளியிட்ட பதிவு ஒன்று அதிர்ச்சியையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, செப்டோ டெலிவரி ஆப்பில் காண்பிக்கும் விலைகள் ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன் சாதனங்களுக்கு இடையே கடுமையான விலை வேறுபாட்டை காட்டுகிறது. இதனை தெளிவுப்படுத்தும்படியும் அவர் செப்டோவிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.
அந்த இரண்டு ஸ்கிரீன் ஷாட்களில், செப்டோ செயலியின் ஆண்ட்ராய்டு வெர்ஷனில் தோராயமாக 500-600 கிராம் குடை மிளகாயின் விலை ரூ.21 ஆகவும், ஐபோன் செயலியில் அதே இடை கொண்ட குடை மிளகாயின் விலை ரூ.107ஆகவும் பட்டியலிடப்பட்டுள்ளது.
அந்த ஸ்கிரீன் ஷாட்டுடன், செப்டோ, இதற்கு ஏதேனும் விளக்கம் உள்ளதா ? என கேட்டுக் கொண்டுள்ளார்.
இதில், முதல் ஸ்கிரீன் ஷாட்: ஆண்ட்ராய்டு.
இரண்டாவது ஸ்கிரீன் ஷாட்: ஐபோன். இரண்டு ஸ்கிரீன் ஷாட்களும் இன்று காலை ஒரே நேரத்தில் எடுக்கப்பட்டன. ஆனால் ஏன் இவ்வளவு வித்தியாசம், செப்டோ?"
"அதே குடைமிளகாய், அதே விற்பனையாளர், அதே இடம் மற்றும் அதே நேரம்" என்ற தலைப்புடன் ஒரு பயனர் அதைப் பகிர்ந்த நிலையில், இந்தப் பதிவு எக்ஸ் பக்கத்தில் வைரலானது.
இந்த பதிவின் கீழ் நெட்டிசன்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும் செப்டோ தரப்பில் இருந்து இதற்கு விளக்கம் எதுவும் அளிக்கவில்லை.

