என் மலர்
நீங்கள் தேடியது "அண்ணாமலை"
- 2011 தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2017 இல் அதிரடியாக பாஜகவில் இணைந்தார்.
திருநெல்வேலியைச் சேர்ந்த நயினார் நாகேந்திரன் அதிமுகவில் தனது அரசியல் பயணத்தை தொடங்கியவர். 2001 சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலிருந்து சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
2001-2006 வரை நடைபெற்ற அதிமுக ஆட்சியில் மின்சாரத்துறை அமைச்சராகவும், தொழில்துறை அமைச்சராகவும் பணியாற்றியிருக்கிறார். 2011 தேர்தலில் மீண்டும் சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் 2016 தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வியை சந்தித்தார்.

இதைத்தொடர்ந்து அதிமுகவில் இருந்து விலகிய நயினார் நாகேந்திரன் 2017 இல் அதிரடியாக பாஜகவில் இணைந்தார். பின்னர் 2019 இல் நடைபெற்ற பாரளுமன்றத் தேர்தலில் இராமநாதபுரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்ட நாகேந்திரன் படுதோல்வியை சந்தித்தார்.
தொடர்ந்து 2021 தமிழக சட்டமன்றத் தேர்தலில் திருநெல்வேலி தொகுதியிலல் பாஜக சார்பில் சட்டமன்ற உறுப்பினரானார். பின் 2023 மக்களவை தேர்தலில் திருநெல்வேலி தொகுதியில் போட்டியிட்ட நயினார் நாகேந்திரன் தோல்வியை சந்தித்தார்.

தற்போதைய மாநில தலைவர் பதவிக்கான ரேஸில் பாஜக நயினார் நாகேந்திரன் தொடக்கத்தில் இருந்தே முன்னிலையில் இருந்தார். பாஜக கட்சி விதிகளின்படி 10 ஆண்டுகள் கட்சியில் இருந்தவர்கள்தான் மாநில தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்க வேண்டுமே என்று கூறப்பட்டது.
அப்படிப் பார்த்தால் நயினார் நாகேந்திரன் பாஜகவில் இணைந்து 8 ஆண்டுகள் மட்டுமே ஆகியுள்ளது. ஆனால் அண்ணாமலைக்கு மாநில தலைவர் பதவி வழங்கப்பட்டதற்கு 6 மாதங்கள் முன்னர்தான் அவர் பாஜகவில் சேர்ந்திருக்கிறார்.

இதை வைத்துப் பார்த்தால் நயினார் நாகேந்திரன் அண்ணாமலையை விட சீனியர் என்ற நோக்கத்திலும் அதிமுக-பாஜக இரண்டிலுமே இருந்தவர் என்ற அடிப்படையிலும் அதிமுகவை திருப்திப்படுத்த பாஜக தலைமை நயினார் நாகேந்திரனை மாநிலத் தலைவர் ஆக்கியிருக்கலாம் என்று அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர்.
- நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார்.
- நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 3 ஆயிரம் பேருக்கு இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
சென்னை:
தமிழ்நாட்டில் பா.ஜ.க. உட்கட்சி தேர்தல் கடந்த 3 மாதமாக நடந்து வருகிறது. கிளைகள், மண்டல், மாவட்டம் என்று கட்சியின் பல்வேறு மாவட்டங்களிலும் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.
கடைசியாக மாநில தலைவர், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்த வேண்டி இருந்தது. இதற்கிடையில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைக்க தலைவர் பதவியில் அண்ணாமலை நீடிப்பதை அ.தி.மு.க. தலைமை விரும்பவில்லை.
இதனால் கூட்டணியை உறுதிப்படுத்துவதற்கு முன்பு புதிய தலைவரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயம் பா.ஜ.க.வுக்கு ஏற்பட்டது.
நேற்று அமித்ஷா சென்னையில் இருந்த போது கட்சி தலைவருக்கான தேர்தலை மின்னல் வேகத்தில் தொடங்கினார்கள். மதியம் 2 மணி முதல் மாலை 4 மணிவரை தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்புபவர்கள் மனுதாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டது.
ஆனால் கட்சி மேலிடத்தை பொறுத்தவரை நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ.வை மாநில தலைவராக நியமிக்க முடிவு செய்து விட்டனர். எனவே தேர்வு ஒரு மனதாக இருக்க வேண்டும் என்ற மேலிடத்தின் விருப்பம் பற்றிய தகவல் கட்சியினருக்கு தெரிவிக்கப்பட்டது.
இதனால் தலைவர் பதவியை எதிர்பார்த்த மூத்த தலைவர்கள் உள்பட யாரும் வேட்பு மனு தாக்கல் செய்யவில்லை. நயினார் நாகேந்திரன் மட்டுமே வேட்பு மனுதாக்கல் செய்ததால் அவர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டார்.
புதிய தலைவரை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நிகழ்ச்சியும், தேசிய பொதுக்குழு உறுப்பினர்களை தேர்வு செய்வதும் இன்று மாலை 4 மணிக்கு வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ள பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள், மூத்த தலைவர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 3 ஆயிரம் பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டு உள்ளது.
மாலையில் நிகழ்ச்சி தொடங்கியதும் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் மட்டுமே மனு செய்து இருப்பதாகவும், அவரது மனு ஏற்றுக்கொள்ளப்பட்டதாகவும் மாநில தேர்தல் அதிகாரியான சக்கரவர்த்தி அறிவிப்பார்.
அதை தொடர்ந்து மேலிட பார்வையாளர் கிஷன் ரெட்டி முன்னிலையில் தேசிய தேர்தல் பொறுப்பாளர் தருண்சுக் தமிழக பா.ஜ.க. தலைவராக நயினார் நாகேந்திரன் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டு இருப்பதாக அறிவிப்பார்.
அதை தொடர்ந்து நயினார் நாகேந்திரன் உறுதி மொழி வாசித்து தலைவர் பதவியை ஏற்றுக் கொள்வார்.
இதை அடுத்து அண்ணாமலை, மத்திய மந்திரி எல்.முருகன், தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன், முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வி.பி.துரைசாமி, ஏ.ஜி.சம்பத் ஆகியோர் வாழ்த்தி பேசுகிறார்கள்.
இந்த நிகழ்வின் போது ஒரு பாராளுமன்ற தொகுதிக்கு ஒருவர் வீதம் 39 தேசிய பொதுக்குழு உறுப்பினர்களையும் தேர்வு செய்து அறிவிக்கிறார்கள். இவர்கள் தான் தேசிய அளவில் தேசிய தலைவரை தேர்வு செய்யும் அதிகாரம் படைத்தவர்கள்.
எனவே இந்த பதவிக்கு பல மாவட்டங்களில் கடும் போட்டி நிலவியது. அங்கே சமாதான பேச்சுவார்த்தைகள் நடத்தி போட்டியில்லாமல் தலா ஒருவர் வீதம் தேர்வு செய்துள்ளார்கள். அவர்களின் பெயர் பட்டியலும் அறிவிக்கப்படும்.
இந்த விழாவை கோலாகலமாக நடத்த பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்து உள்ளார்கள். மண்டப பகுதி முழுவதும் மலர்களாலும், கட்சிக் கொடி, தோரணங்களாலும் அலங்கரிக்கப்பட்டு உள்ளது.
நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் 3 ஆயிரம் பேருக்கு இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
கூட்டணி மற்றும் கட்சி தேர்தல் திருவிழா வெற்றிகரமாக நடத்தி முடிக்கப்பட்டு விட்டதாக பா.ஜ.க.வினர் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளார்கள்.
- பாஜகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சென்ற அண்ணாமலையின் பணி முன் உதாரணமானது.
- பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பாஜகவின் வளர்ச்சிக்காக அண்ணாமலை ஆற்றிய பணி குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தனது எக்ஸ் தள பக்கத்தில் புகழ்ந்து பகிர்ந்துள்ளார்.
அப்போது, பாஜகவின் தேசிய கட்டமைப்பில் அண்ணாமலைக்கு பொறுப்பு வழங்கப்படும் என அவர் சூசகமாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பாஜகவின் திட்டங்களை மக்களுக்கு எடுத்து சென்ற அண்ணாமலையின் பணி முன் உதாரணமானது.
பாஜகவின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும் எனவும் அவர் கூறினார்.
இதுகுறித்து எக்ஸ் தள பக்கத்தில் அமித் ஷா கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரனிடமிருந்து மட்டுமே விருப்ப மனு பெறப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பாஜக பிரிவின் தலைவராக, அண்ணாமலை பாராட்டத்தக்க சாதனைகளைச் செய்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் கொள்கைகளை மக்களிடம் கொண்டு செல்வதாக இருந்தாலும் சரி, அல்லது கட்சியின் திட்டங்களை கிராமம் கிராமமாக எடுத்துச் செல்வதாக இருந்தாலும் சரி, அண்ணாமலையின் பங்களிப்பு அளப்பரியது.
பாஜக கட்சியின் தேசிய பணிகளுக்கு அண்ணாமலையின் திறமை பயன்படுத்தப்படும்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
- ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டு வந்தது.
அண்ணாமலை மாற்றப்படுவாரா? அல்லது அவரே தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற பேச்சும் பலமாக அடிபட்டது. அதுக்கு காரணம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான்.
இதுதொடர்பாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தலைமையில் கூட்டணிக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலையையும் அமித்ஷா அழைத்து ஆலோசனை நடத்தினார்.
இதைதொடர்ந்து, அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபட்டதை தொடர்ந்து, நயினார் நாகேந்திரன் டெல்லி சென்று நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்தித்தார்.
இதற்கிடையே, தேர்தலில் தமிழக பாஜக தலைவர் பதவிக்கு தான் போட்டியிடவில்லை என்றும் அண்ணாமலை கூறியிருந்தார்.
இந்த பரபரப்புக்கு இடையில் இன்று தமிழக பாஜக தலைவருக்கான வேட்பு மனு தாக்கல் நடைபெற்றது.
இந்நிலையில், மத்திய அமைச்சர் எல்.முருகன், அண்ணாமலை முன்னிலையில் நயினார் நாகேந்திரன் மனு தாக்கல் செய்தார்.
தேர்தல் நடத்தும் அதிகாரியும் மாநில துணை தலைவருமான சக்கரவர்த்தியிடம் நயினார் நாகேந்திரன் விருப்பமனுவை வழங்கினார். நயினார் நாகேந்திரன் தவிர வேறு யாரும் வேட்பு மனுவை தாக்கல் செயயப்படவில்லை.
இதனால், நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், தமிழக பாஜகவின் புதிய தலைவர் குறித்து நாளை மாலை அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஸ்ரீவாரு மண்டபத்தில் நாளை மாலை 4 மணிக்கு அறிவிப்பு வௌியாகிறது.
- செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
- எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கான தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் வேட்பு மனு தாக்கல் தொடங்கி உள்ளது.
இதில், தமிழக பாஜக தலைவர் பதவிக்கு நயினார் நாகேந்திரன் ஒருவர் மட்டுமே வேட்பு மனு தாக்கல் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதற்கிடையே, இன்று சென்னைக்கு வருகைத்தர உள்ள மத்திய அமைச்சர் அமித்ஷா செய்தியாளர்களை சந்திக்க உள்ளார். செய்தியாளர் சந்திப்பு அரங்கில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் நயினார் நாகேந்திரன் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
மேலும், எல்இடி திரையில் பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டாவுக்கு அருகில் அண்ணாமலையின் புகைப்படம் இடம்பெற்றுள்ளது.
நயினார் நாகேந்திரன் பாஜக மாநில தலைவராக போட்டியின்றி தேர்வு செய்யப்படுவார் என்றும் கூறப்படுகிறது.
இந்நிலையில், தி.நகரில் உள்ள கமலாலயத்தில் பாஜக முக்கிய நிர்வாகிகளுடன் ஆண்ணாமலை ஆலோசனை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழக பாஜக தலைவர் பதவிக்கான பணிகளை ஒப்படைப்பது குறித்து அண்ணாமலை ஆலோசனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அப்போது, மத்திய இணை அமைச்சர் எல். முருகன், பாஜக மேலிட பொறுப்பாளர் சுதாகர ரெட்டியுடன் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.
- தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொடங்கியது.
- பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி உள்ள விருப்பமனு தாக்கல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
சென்னை:
தமிழகம் உள்பட நாடு முழுவதும் 19 மாநிலங்களில் புதிய தலைவர்களை நியமனம் செய்வதற்கான நடவடிக்கைகளிலும் பா.ஜ.க. தேசிய தலைமை தீவிரம் காட்டி வருகிறது.
தமிழக பா.ஜ.க. மாநில தலைவர் பதவிக்கான தேர்தல் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாஜலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் நாளை நடைபெற உள்ளது. இதற்கான விருப்ப மனுக்களை இன்று சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.
தமிழக பா.ஜ.க. தலைவர் பதவி தேர்தலுக்கான விருப்பமனு தாக்கல் தலைமை அலுவலகமான கமலாலயத்தில் தொடங்கியது.
பிற்பகல் 2 மணிக்கு தொடங்கி உள்ள விருப்பமனு தாக்கல் மாலை 4 மணி வரை நடைபெறுகிறது.
இதையடுத்து தற்போதைய மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், சட்டசபை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் கமலாலயம் வந்துள்ளனர்.
இந்த நிலையில், மாநில தலைவர் அண்ணாமலை, மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பொன்.ராதாகிருஷ்ணன், எச்.ராஜா, வானதி சீனிவாசன் முன்னிலையில் நயினார் நாகேந்திரன் விருப்பமனு தாக்கல் செய்தார்.
- முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் ஜெயிப்போம் என்கிறார். அது நடக்கப்போவதில்லை.
- ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர்.
மதுரை:
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஏற்குடி அச்சம்பத்து பகுதியில் அம்மா பூங்கா சுற்றுச்சுவர் அமைப்பதற்கான பூமி பூஜை நிகழ்ச்சிக்கு பின்னர் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ கூறியதாவது:-
தி.மு.க.வின் துணைப் பொதுச்செயலாளராக இருந்த அமைச்சர் பொன்முடி இன்றைக்கு கட்சியின் பொறுப்பை இழந்துள்ளார். அமைச்சர் பொன்முடி பெண்களுக்கு எதிராகவும், தாழ்த்தப்பட்ட ஏழை, எளிய பெண்கள் குறித்தும் தர குறைவாக பேசுவது இன்று நேற்றல்ல அவருக்கு வாடிக்கையான ஒன்றுதான்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இலவச பேருந்தில் பயணம் செய்யும் பெண்களை ஓசி பயணம் என்று விமர்சித்து பேசினார். எல்லாமே ஓசி என்று கேலியும் கிண்டலுமாக பேசினார். அதனை தமிழகத்தில் முதன் முதலாக கண்டித்தவன் நான் தான்.
அமைச்சரான பொன்முடிக்கு அனைத்தும் ஓசி தான். அவருக்குரிய சலுகைகளை மற்றும் உபசரிப்புகளை எல்லாம் அப்போதே குறிப்பிட்டு நான் அவருக்கு கண்டனம் தெரிவித்திருந்தேன். சமீபத்தில் கூட டெல்லி சென்ற பொன்முடி விமானத்தில் ஓசியில்தான் சென்று வந்தார். இதுவும் மக்களின் வரிப்பணம்.
பொன்முடி மீதான குற்றச்சாட்டுக்கள் முதலமைச்சருக்கு தாமதமாகவே தெரிய வந்திருக்கிறது. இதுபோல மக்கள் பிரச்சனைகளையும் லேட்டாகவே புரிந்து கொள்கிறார். எனவே தமிழக மக்கள் படும் பாட்டை முதலமைச்சருக்கு யாராவது விரைவாக எடுத்து தெரிவிக்க வேண்டும். எனவே தான் எடப்பாடியாரை மீண்டும் முதலமைச்சராக வரவேண்டும் என்று தமிழக மக்கள் மிகுந்த எதிர்பார்ப்போடு காத்திருக்கிறார்கள்.
ஆனாலும் முதலமைச்சர் ஸ்டாலின் வருகிற தேர்தலில் 200 தொகுதிக்கு மேல் ஜெயிப்போம் என்கிறார். அது நடக்கப்போவதில்லை. கடந்த 9-ந்தேதி நீட் தேர்வு தொடர்பான ஆலோசனை கூட்டத்தில் அதி.மு.க., பா.ஜ.க. கட்சிகள் பங்கேற்கவில்லை. காரணம் என்னவென்றால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த உடனேயே முதல் கையெழுத்தே நீட் தேர்வு ரத்து தான் என்று துணை முதலமைச்சர் உதயநிதி கூறி இருந்தார்.
ஆனால் எதுவும் நடக்கவில்லை. ஆனால் சட்டமன்றத்தில் இரண்டு முறை தீர்மானங்களை கொண்டு வந்தார்கள் தவிர வேறு எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. பின்னர் ஒரு கோடி கையெழுத்து என்றார்கள். இதுவெல்லாம் நாடகமாகவே நடந்து முடிந்து விட்டது.
எனவே தான் இப்போது மீண்டும் தொடக்கத்தில் இருந்து ஆலோசனை கூட்டம் என்று மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். தேர்தல் கூட்டணி என்பது தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்பட வேண்டியது. தேர்தல் நேரத்தில் தான் எந்தெந்த கட்சிகள் எந்தெந்த அணியில் இருக்கும் என்பது தெரியும். அதனை எங்கள் பொதுச்செயலாளர் உறுதியாக வலுவாக முடிவெடுப்பார்.
பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோரை சந்திப்பதாக இருந்தால் முன்கூட்டியே எடப்பாடி பழனிசாமி தெரிவிப்பார். ஊடகங்கள், கற்பனை கதைகள் எழுத தேவையில்லை. பாரதிய ஜனதா மாநில தலைவராக இருக்கும் அண்ணாமலையை மாற்றினால் வருத்தமோ, மகிழ்ச்சியோ இல்லை. அது அவர்களது கட்சி விவகாரம்.
ஜெயலலிதா 8 அடி பாய்ந்தால், எடப்பாடி பழனிசாமி 16 அடி பாய கூடியவர். யாரையும் வலுக்கட்டாயமாகவோ, வற்புறுத்தியோ சந்திக்க மாட்டார். ஜெயலலிதா சிங்கப்பெண் என்றால் எடப்பாடி பழனிசாமி சிங்கக்குட்டி. எனவே அதி.மு.க. கூட்டணி குறித்து யாரும் கவலைப்பட வேண்டாம். மக்களுக்கு தேவையான நல்ல ஒரு கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அமைப்பார். அது வெற்றி கூட்டணியாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
- பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார்.
- இந்து தர்மத்தின் மீது தி.மு.க.வின் இடைவிடாத தாக்குதல்கள் பதிலளிக்கப்படாமல் கடந்து போகாது.
சென்னை:
கடந்த 6-ந்தேதி நடைபெற்ற தி.மு.க. கூட்டத்தில், பெண்களைப் பற்றி கொச்சைப்படுத்தும் விதமாகவும், சைவ, வைணவ மதத்தை அவமதிக்கும் வகையில் அமைச்சர் பொன்முடி பேசியுள்ளது தற்போது சர்ச்சையாகி உள்ளது. பொன்முடியின் பேச்சுக்கு தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் கனிமொழி, மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் சண்முகம், தமிழக பா.ஜ.க., பாடகி சின்மயி உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அந்த வகையில், இதுதான் தமிழ்நாட்டில் தி.மு.க.வின் அரசியல் பேச்சுக்களின் தரம் என பொன்முடியின் சர்ச்சை பேச்சு தொடர்பான வீடியோவை பகிர்ந்து அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். மேலும், எக்ஸ் தள பக்கத்தில் அண்ணாமலை கூறியிருப்பதாவது:-
இதுதான் தமிழ்நாட்டில் திமுகவின் அரசியல் பேச்சுக்களின் தரம். திரு. பொன்முடி ஒரு காலத்தில் தமிழ்நாட்டின் உயர்கல்வி அமைச்சராகவும், தற்போது வனத்துறை மற்றும் காதி அமைச்சராகவும் இருந்தார். தமிழக இளைஞர்கள் இந்த அசுத்தத்தை பொறுத்துக்கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறதா? இந்த அமைச்சர் மட்டுமல்ல, ஒட்டுமொத்த தி.மு.க. கூட்டமும் மோசமானது மற்றும் அநாகரீகமானது.
இவ்வளவு அவமானகரமான கூட்டத்தை வழிநடத்தியதற்காக, வெட்கப்பட்டு தலையை குனிந்து கொள்ளுங்கள், திரு. மு.க.ஸ்டாலின். இன்று அவரை ஒரு கட்சிப் பதவியில் இருந்து நீக்குவதன் மூலம், மக்கள் முன்னேறுவார்கள் என்று தி.மு.க. நினைத்தால், துரதிர்ஷ்டவசமாக அது தவறான ஒன்று தான்.
இந்து தர்மத்தின் (சைவம் & வைணவம்) மீது தி.மு.க.வின் இடைவிடாத தாக்குதல்கள் பதிலளிக்கப்படாமல் கடந்து போகாது. எங்கள் மௌனத்தை பலவீனமாகக் கருதாதீர்கள், திரு. மு.க. ஸ்டாலின்.
- 2 நாள் பயணமாக சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
- அமித்ஷாவின் வருகை குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பனர்.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நாளை இரவு சென்னை வருகிறார். 2 நாள் பயணமாக சென்னை வரும் அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் தங்குகிறார்.
இதனை தொடர்ந்து, வெள்ளிக்கிழமை அன்று தமிழக பா.ஜ.க. முக்கிய நிர்வாகிகளை சந்தித்து அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளார். தமிழக பா.ஜ.க தலைவர் யார் என்பது குறித்து விவாதிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில், அமித்ஷாவின் வருகை குறித்து அண்ணாமலையிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பனர்.
அப்போது அவர் கூறியதாவது:-
அமித்ஷா சென்னை வருகைக்கும் பாஜக மாநிலத் தலைவர் பதவிக்கும் சம்மந்தமில்லை.
அடுத்த ஆண்டு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் அமித்ஷா சென்னை வருகிறார்.
ஏற்கனவே பீகார் மாநிலத்திற்கும் அமித்ஷா சென்று வந்திருக்கிறார்.
உச்சநீதிமன்ற உத்தரவு ஆளுநருக்கு பின்னடைவு இல்லை.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா எதற்காக வருகிறார் என்பது குறித்து நாளை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும்.
பாமக தலைவர் மாற்றம் தொடர்பான கேள்விக்கு எதுவாக இரு்நதாலும் ராமதாஸ், அன்புமணி நல்ல முடிவு எடுப்பார்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை.
- இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள்.
சென்னை :
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
நீட் தேர்வு வந்த பிறகே, தமிழகத்தில் சாமானிய குடும்பப் பின்னணி கொண்ட மாணவர்களும், அரசுப் பள்ளி மாணவர்களும், மருத்துவக் கல்வி படிக்கும் வாய்ப்பு பெற்றிருக்கிறார்கள். ஆனால், தங்கள் கட்சிக்காரர்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, நீட் தேர்வை எதிர்த்துக் கொண்டிருக்கிறது திமுக.
திமுகவின் முன்னாள் அமைச்சர் ஆற்காடு வீராசாமி, தாங்கள் நடத்தும் மருத்துவக் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் எப்படி பணம் விளையாடுகிறது என்று வெளிப்படையாகவே ஒப்புக் கொண்டிருக்கிறார். ஆனால், இன்னும் நீட் எதிர்ப்பு என்று பல நாடகங்கள் நடத்தி, பொதுமக்களை ஏமாற்றிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் ஸ்டாலின். அப்படி ஒரு நாடகமான இன்றைய அனைத்துக் கட்சிக் கூட்டத்தில், தமிழக பாஜக பங்கேற்கவில்லை என்பதைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
ஏற்கனவே நீட் தேர்வு தொடர்பாக, தமிழக மக்கள் சார்பில், தமிழக பாஜக கேட்டிருந்த பல கேள்விகளுக்கு, திமுக அரசு இதுவரை பதிலளிக்கவில்லை. அந்தக் கேள்விகளை மீண்டும் இன்று முதலமைச்சர் ஸ்டாலின் முன்வைக்க விரும்புகிறேன்.
நீட் தேர்வை நாடு முழுவதும் அமல்படுத்தியது உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு. நீட் தேர்வு வேண்டாம் என்று திமுக அரசுக்கு எண்ணம் இருக்குமேயானால், நீங்கள் உச்ச நீதிமன்றத்திற்குச் சென்றிருக்க வேண்டும். டாஸ்மாக் ஊழல் விசாரணைக்குத் தடை கேட்டும், கள்ளச்சாராய மரணம் குறித்த விசாரணையைத் தடுக்கவும் நீதிமன்றம் செல்லும் உங்கள் அரசு, ஆட்சிக்கு வந்து நான்கு ஆண்டுகளில், நீட் தேர்வுக்காக நீதிமன்றம் செல்லாமல், தீர்மானம், அனைத்துக் கட்சிக் கூட்டம் என்று ஏன் நாடகமாடுகிறீர்கள்?
நீட் தேர்வு குறித்து திமுக கூறுவது உண்மை நிலவரத்துக்கு நேர்மாறாக இருக்கிறது. நீட் தேர்வுக்கு எதிராக வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கான எந்த ஆதாரங்களையும் இதுவரை முன்வைத்திருக்கிறீர்கள்?
நீட் தேர்வு வந்த பிறகே, மருத்துவக் கல்வி பயிலும் அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது. நீட் தேர்வினால், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு பாதிப்பு என்று பொய் சொல்லும் முதலமைச்சர் ஸ்டாலின், தமிழகத்தில், நீட் தேர்வு இல்லாத, 2007 - 2016 காலகட்டத்தில், ஒவ்வொரு ஆண்டும் சராசரியாக, 38 அரசுப் பள்ளி மாணவர்கள் மட்டுமே, மருத்துவக் கல்வி பெறும் வாய்ப்பு பெற்றனர் என்ற உண்மையை மறைப்பது ஏன்?
அறிவாலயத்தில் இருந்து தயார் செய்து கொடுத்த முன்னாள் நீதிபதி ஏ.கே.ராஜன் கமிட்டி அறிக்கையில், நீட் தேர்வுக்கு முன்பாக, கடந்த 2010 - 2014 ஆண்டுகளில், மருத்துவக் கல்வியில் சேர்ந்த தமிழக அரசுப் பள்ளி மாணவர்கள் எண்ணிக்கை என்ன என்பதை ஏன் குறிப்பிடவில்லை?
நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் தேர்ச்சி, ஆண்டு தோறும் அதிகரித்து வருகிறது. கடந்த 2024 நீட் தேர்வில், தமிழக மாணவர்கள் 8 பேர், தேசிய அளவில் முதலிடம் பிடித்தார்கள். தமிழகத் தேர்ச்சி விகிதம், தேசிய சராசரியை விட அதிகம் என்பது முதலமைச்சருக்குத் தெரியாதா? யாரை ஏமாற்ற இன்னும் நீட் பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்கிறார்?
ஒவ்வொரு மாவட்டம் தோறும் ஒரு மருத்துவக் கல்லூரி என்ற நோக்கத்தோடு, நமது பாரதப் பிரதமர் மோடி ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த பத்து ஆண்டுகளில், தமிழகத்தில் 14 புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. மருத்துவக் கல்வி இடங்கள், கடந்த பத்து ஆண்டுகளில் இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது. இதன் மூலம், தமிழகத்தில் மேலும் பல மாணவர்களுக்கு மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு கிடைத்துள்ளது.
ஆனால், அரசு மருத்துவக் கல்லூரிகளின் தரத்தைப் பராமரிக்காமல், புகழ்பெற்ற ஸ்டான்லி மருத்துவக் கல்லூரி உட்பட மூன்று அரசு மருத்துவக் கல்லூரிகளின் அங்கீகாரம் ரத்து என்ற நிலைக்குக் கொண்டு சென்றதோடு, புதிய மருத்துவக் கல்லூரிகளுக்குக் குறித்த காலத்தில் விண்ணப்பிக்காமல் அலட்சியமாக இருந்தது திமுக அரசு. திமுகவினர் நடத்தும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் வருமானத்துக்காக, தமிழக மாணவர்கள் எதிர்காலத்தைக் குழி தோண்டிப் புதைக்க முயற்சி செய்கிறது திமுக என்பதை, முதலமைச்சரால் மறுக்க முடியுமா?
நீட் தேர்வு மட்டுமல்ல, எந்தத் தேர்வானாலும் நமது மாணவர்கள் சாதனை படைக்கும் திறமை வாய்ந்தவர்கள். ஆண்டுதோறும் நீட் தேர்ச்சி விகிதமே இதற்கு சாட்சி. போதும் முதலமைச்சர் அவர்களே நீட் எதிர்ப்பு என்ற பெயரில், நீங்கள் ஆடும் சுயநல நாடகம். எனவே, இனியாவது உங்கள் நாடகங்களை நிறுத்தி விட்டு, தமிழக மாணவர்களை நிம்மதியாகப் படிக்க விடுங்கள் என்று கூறியுள்ளார்.
- குமரி அனந்தன் இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
- பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்.
சென்னை:
பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,
தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரும், பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் இணைந்து பணியாற்றிய பெருமைக்குரியவரும், அக்கா தமிழிசை அவர்களின் தந்தையாருமாகிய, இலக்கியச் செல்வர், ஐயா குமரி அனந்தன் அவர்கள், இன்று நம்மிடையே இல்லை என்ற செய்தி மிகுந்த வருத்தமளிக்கிறது.
தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும், ஐந்து முறை சட்டமன்ற உறுப்பினராகவும், பாராளுமன்ற உறுப்பினராகவும், அப்பழுக்கின்றி பணியாற்றியவர். பல்வேறு தமிழ் இலக்கியங்கள் சார்ந்த நூல்களை எழுதியவர். பனைமரங்கள் பாதுகாப்புக்காவும், நதிகள் இணைப்புக்காகவும், பாரதமாதா கோவில் அமைக்கவும், பாதயாத்திரைகள் மேற்கொண்டவர்.
தலைசிறந்த தேசியவாதியான ஐயா குமரி அனந்தன் அவர்களது மறைவு, தமிழகத்துக்கும், இலக்கிய உலகுக்கும் பேரிழப்பு. தகப்பனாரை இழந்து வாடும் அக்கா தமிழிசைக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும், ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது ஆன்மா, இறைவன் திருவடிகளை அடைய வேண்டிக் கொள்கிறேன்.
ஓம் சாந்தி!
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபடுகிறது.
- ஓரிரு நாட்களுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என தகவல்.
சென்னை:
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் புதிய தலைவரை தேர்வு செய்வதில் கட்சி மேலிடம் தீவிரமாக ஈடுபட்டுள்ளது.
அண்ணாமலை மாற்றப்படுவாரா? அல்லது அவரே தலைவர் பதவியில் நீடிப்பாரா? என்ற பேச்சும் பலமாக அடிபடுகிறது. அதுக்கு காரணம் அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க. கூட்டணி அமைக்க முயற்சிப்பதுதான்.
இதுதொடர்பாக டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்த எடப்பாடி பழனிசாமி தமிழக பா.ஜ.க. தலைமையில் கூட்டணிக்கு பிரச்சனைகள் வர வாய்ப்பு இருப்பதாக கூறினார். இதையடுத்து அண்ணாமலையையும் அமித்ஷா அழைத்து ஆலோசனை நடத்தினார்.
அதன்பிறகு அண்ணாமலை அளித்த பேட்டிகள் அவர் மாற்றப்படலாம் என்றும் நீட்டிக்கப்படலாம் என்றும் பல்வேறு யூகங்களுக்கு வழி வகுத்தது.
அவர் மாற்றப்படலாம் என்ற கருத்து தொண்டர்களை விட தலைவர்கள் மத்தியில்தான் கூடுதல் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவர் மாற்றப்பட்டால் தலைவர் பதவியை பிடிப்பது எப்படி எனறு ஒவ்வொருவரும் காய் நகர்த்தத் தொடங்கினார்கள்.

தலைவர் பதவிக்கான போட்டியில் மத்திய மந்திரி எல்.முருகன், முன்னாள் கவர்னர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன், மகளிரணி தேசிய தலைவி வானதி சீனிவாசன், மூத்த தலைவர் எச்.ராஜா, நயினார் நாகேந்திரன் எம்.எல்.ஏ. பேராசிரியர் ராம சீனிவாசன் ஆகியோர் இந்த போட்டியில் தீவிர ஆர்வம் காட்டுகிறார்கள்.
இவர்கள் ஒவ்வொரு வரும் தனித்தனி வழிகளில் காய் நகர்த்துகிறார்கள். எச்.ராஜா மூத்த நிர்வாகி. அவர் இதுவரை மாநில தலைவர் ஆனதில்லை. அதுமட்டு மல்ல, அண்ணாமலையை போல் அதிரடி அரசியல் பண்ணுவார் என்று டெல்லி மேலிடத்துக்கு நெருக்கமான தமிழக பிரபலங்கள் சிலர் முயற்சிக்கிறார்கள்.
அகில இந்திய மகளிர் அணி தலைவராக இருக்கும் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக மத்திய மந்திரி ஒருவர் களம் இறங்கி இருப்பதாகவும், அவர் அண்ணாமலையை எப்படியாவது மாற்ற வேண்டும் என்று கங்கணம் கட்டி செயல்படுவதாகவும் கூறப்படுகிறது.
இப்படி பல தளங்களில் இருந்து பல்வேறு விதமாக தகவல்களை மேலிட தலைவர்கள் காதுகளில் போட்டாலும் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் யாரை தலைவராக நியமித்தால் கட்சிக்கும் கூட்டணிக்கும் பலம் சேர்க்கும் என்ற அடிப்படையில் பரிசீலித்து வருவதாக கூறப்படுகிறது.
அதில் நயினார் நாகேந்திரன் முன்னிலை வகிப்பதாக தெரிகிறது. அ.தி.மு.க.வில் அமைச்சராக இருந்தவர் நயினார் நாகேந்திரன். எனவே கூட்டணி அமைப்பது, கூட்டணி பேச்சு வார்த்தையை சுமூகமாக கொண்டு செல்வது ஆகியவை சுலபமாக இருக்கும் என்று கருதுகிறார்கள்.
அதேநேரம் கட்சி வளர்ச்சிக்கு எந்த பலனையும் தராது என்று கட்சியினர் சிலர் வெளிப்படையாகவே கூறுகிறார்கள்.
இந்த நிலையில் நயினார் நாகேந்திரன் நேற்று இரவு திடீரென்று டெல்லி புறப்பட்டு சென்றது உச்சகட்ட பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதற்கிடையில் நேற்று மாலையில் அண்ணாமலை கூறும்போது, 'நான் பிரதமர் மோடி என்ற ஒரே தலைவரை நம்பிதான் கட்சிக்கு வந்தேன். அவர் கைகாட்டும் பணி எதுவாக இருந்தாலும் செய்து முடிப்பேன். நான் முழு நேரமும் களப்பணியில் இருப்பேன்.
மாநிலத்தில் தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்காக நான் என் காலணிகளை கழற்றி இருக்கிறேன். எனது முழுநேரத்தையும் இன்னும் தீவிரமாக களத்தில் செலவிடுவேன்.
மக்களை சந்திக்க நிறைய பயணம் இருக்கும். மாநில தலைவரைப் போல் எனக்கு அதிக வேலை இருக்காது. அதனால் நான் மகிழ்ச்சி அடைகிறேன். மற்றவர்கள் நிறுவன பணிகளை செய்யட்டும். அதனால்தான் அடுத்த மாநில தலைவருக்கான போட்டியில் நான் இல்லை என்றேன் என்றார்.
இதனால்தான் அண்ணாமலை மாற்றப்படலாம் என்று உறுதியாக பேச்சு அடிபடுகிறது. அதனால் தான் நயினார் நாகேந்திரன் டெல்லி சென்றிருப்பதாக கூறப்படுகிறது.
டெல்லியில் இருக்கும் நயினார் நாகேந்திரன், நட்டா, அமித்ஷா ஆகியோருடன் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சிலரையும் சந்திக்க இருப்பதாக கூறப்படுகிறது.
இந்த பரபரப்புக்கு இடையில் அண்ணாமலை சிருங்கேரி சென்றிருக்கிறார். இன்னும் ஓரிரு நாட்களுக்குள் புதிய தலைவர் அறிவிக்கப்படுவார் என்று கட்சியினர் கூறுகிறார்கள்.