என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ஈரோடு"

    • ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது.
    • வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு:

    தமிழகத்தில் கடந்த மார்ச் மாதத்தில் இருந்தே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. சர்வ சாதாரணமாக 100 டிகிரி வெயில் பதிவானது. இதனால் மக்கள் அவதி அடைந்து வந்தனர்.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த மார்ச் மாதம் முதல் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அனைத்து தரப்பு மக்களும் அவதி அடைந்து வருகின்றனர்.

    ஈரோடு மாவட்டத்தில் அதிகபட்சமாக 104 டிகிரி வெயில் கொளுத்தியது. காலை 8 மணிக்கு தொடங்கும் வெயிலின் தாக்கம் மாலை 5 மணி வரை நீடிக்கிறது. அனல் காற்றுடன் வெயில் வாட்டி வதைப்பதால் பொதுமக்கள், வாகன ஓட்டிகள் அவதி வருகின்றனர். வீடுகளில் புழுக்கம் நிலவுவதால் குழந்தைகள், முதியவர்கள், பெண்கள் சிரமம் அடைந்து வருகின்றனர்.

    நாளுக்கு நாள் வெயிலின் தாக்கம் அதிகரித்து வருவதால் மதிய நேரங்களில் எப்போதும் பரபரப்பாக காட்சியளிக்கும் ஈரோடு பன்னீர்செல்வம் பார்க், மணிக்கூண்டு, மேட்டூர் ரோடு, ஆர்.கே.வி. ரோடு ஆகியவை மக்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது. வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் வெளியே செல்லும் பெண்கள் குடையை கொண்டு செல்கின்றனர். இன்னும் சிலர் முகத்தில் துணியை மறைத்து செல்கின்றனர்.

    வெயில் தாக்கத்திலிருந்து தப்பிக்க குளிர்பானங்களை அதிக அளவில் பருகி வருகின்றனர். தற்போது மாவட்டத்தில் முலாம்பழம், நுங்கு, கரும்பு பால், இளநீர் வியாபாரம் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போதே வெயிலின் தாக்கம் அதிகமாக இருக்கும் சூழ்நிலையில் இனி வரக்கூடிய நாட்களில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    இதனால் மக்கள் திணறி வருகின்றனர். மதியம் 12 மணி முதல் 3 மணி வரை குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்கள் வெளியே வருவதை தவிர்க்க வேண்டும் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.
    • பலத்த காற்றால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைபட்டது.

    ஈரோடு:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் மாவட்ட முழுவதும் பரவலாக கோடை மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் வாட்டி வதைத்தது.

    ஆனால் மாலை நேரம் வானில் கருமேகங்கள் சூழ்ந்து லேசான மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் இடியுடன் கூடிய கனமழை பெய்தது. நம்பியூரில் நேற்று மாலை 6 மணி முதல் 8 மணி வரை 2 மணி நேரம் சூறாவளி காற்றுடன் கனமழை பெய்தது.

    இதன் காரணமாக தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கியது. நம்பியூர் அருகே உள்ள சூரிபாளையம், நம்பியூர் சூரியம்பாளையத்தில் உள்ள ஊராட்சி தொடக்கப்பள்ளியில் உள்ள வளாகத்தில் 5 மரங்கள் சாய்ந்து விழுந்தன. இரவு நேரம் மரங்கள் விழுந்ததால் பெரும் பாதிப்பு ஏற்படவில்லை.

    குறிப்பாக சூறாவளி காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஓட்டு வீடு, குடிசை வீடுகளின் மேற்கூரை காற்றில் பறந்தன. சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து சேதம் அடைந்தன. இதனால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதையடுத்து மீட்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன.

    குப்பிபாளையம் பகுதியில் பலத்த காற்றால் மின்கம்பங்கள் முறிந்து விழுந்து மின்சாரம் தடைப்பட்டு இரவு முழுவதும் அப்பகுதி மக்கள் இருளில் அவதி அடைந்தனர்.

    இதேபோல் நம்பியூர் அடுத்த காந்திபுரம் மேடு பகுதியில் நேற்று இரவு பெய்த மழையால் அந்த பகுதியில் உள்ள நடுநிலைபள்ளி வளாகத்தில் உள்ள மரம் முறிந்து கழிப்பறை மீது விழுந்தது.

    இதனால் இன்று பள்ளிக்கு சென்ற மாணவர்கள் அவதி அடைந்தனர். இதேபோல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

    அதே சமயம் சூறாவளிக்காற்றும் வீசியது. காற்றுக்கு தாக்குப் பிடிக்க முடியாமல் ஆர்.ஜி.கே. புதூரை சேர்ந்த ராசு என்பவர் தோட்டத்தில் 500 கதளி ரக வாழைகள் முறிந்து விழுந்தன. இதே போல் வட்டக்காடு கிராமத்தில் நிர்மல்குமார் என்பவர் தோட்டத்தில் 100 செவ்வாழைகள், அதே பகுதியில் குமார் என்பவர் தோட்டத்தில் 400 செவ்வாழை மரங்கள், முத்தரசன் குட்டையில் தேவராஜ் என்ற ஒரு தோட்டத்தில் 100 கதளி வாழை மரங்கள் என மொத்தம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்து கீழே விழுந்தன.

    அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழை மரங்கள் முடிந்து விழுந்ததால் விவசாயிகளுக்கு லட்சக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்தனர்.

    களம்பூர் மலைப்பகுதிகளும் லேசான சாரல் மழை பெய்து கொண்டே இருந்தது. அனைத்தரை மற்றும் மாக்கம்பாளையம் வழியில் அணைக்காடு பகுதியில் சூறாவளி காற்றால் 4 மின்கம்பங்கள் முறிந்து சாலையின் நடுவே விழுந்தது. கடம்பூர் மலை பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் ஏற்கனவே 3 நாட்களாக மின்சாரம் இன்றி தவித்து வருகின்றனர்.

    இதே போல் பர்கூரின் கிழக்கு மற்றும் மேற்கு மலையில் கனமழை பெய்தது. இதில் ஓசூர், கொங்காடை, செங்குளத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் ஓசூர் அருகே உள்ள மண் ரோடு சேரும் சகதியுமாக காட்சியளித்தது. அப்போது அந்த வழியாக வந்த மினி பஸ் ஒன்று சேற்றில் சிக்கியது.

    அப்பகுதி மக்கள் உதவியுடன் மினி பஸ் மீட்கப்பட்டது. அம்மாபேட்டை, குண்டேரி பள்ளம், கவுந்தப்பாடி, வரட்டு பள்ளம், கொடிவேரி, பவானிசாகர் என மாவட்டம் முழுவதும் புறநகர் பகுதியில் பரவலாக மழை பெய்தது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் இருந்தது. இரவு 9 மணி முதல் ஒரு மணி நேரம் கனமழை பெய்தது.

    • அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் பலத்த மழை பெய்தது.
    • ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    கோபி:

    ஈரோடு மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகளவில் இருந்து வந்தது. இதனால் குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை அவதி அடைந்து வந்தனர். அனல் காற்று வீசியதால் வாகன ஓட்டிகளும் திணறி வந்தனர். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் 2 நாட்கள் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    இதன்படி நேற்று முன் தினம் சுமார் அரை மணி நேரம் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது. இந்நிலையில் நேற்று காலை வழக்கம் போல் மாவட்டம் முழுவதும் வெயில் கொளுத்தியது. ஆனால் மாலை நேரத்தில் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்ய தொடங்கியது.

    குறிப்பாக கோபிசெட்டிபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இரவில் லேசாக பெய்ய தொடங்கிய மழை நேரம் செல்ல செல்ல இடியுடன் கூடிய கன மழையாக கொட்டி தீர்த்தது. இந்த கன மழையால் கோபி பகுதியில் தாழ்வான இடங்களில் மழைநீர் சாலையோரம் தேங்கி நின்றது.

    இடியுடன் கூடிய கன மழையால் பல்வேறு இடங் களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கோபி அடுத்த நாகதேவம்பாளையம் பகுதியில் கீழ்பவானி வாய்க்கால் செல்கிறது. அதன் அருகே கசிவு நீர் குட்டையில் நேற்று இரவு பெய்த மழையால் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

    இதன் காரணமாக அந்த பகுதியில் சுமார் 15 வீடுகளில் மழைநீர் சூழ்ந்தது. இரவு நேரத்தில் மழை நீர் சூழ்ந்ததால் மக்கள் கடும் அவதி அடைந்தனர். இதனையடுத்து கோபி தாசில்தார் சரவணன், நீர்வளத் துறை அதிகாரிகள், பொது பணித்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

    பின்னர் குட்டையில் அடைப்பு சரி செய்யப்பட்டு மழைநீர் வடிந்தது. இதன் பின்னர் இயல்பு நிலை திரும்பியது. நேற்று ஒரே நாள் இரவில் மட்டும் கோபிசெட்டிபாளையத்தில் 15 சென்டிமீட்டர் மழை கொட்டி தீர்த்தது. இதே போல் அந்தியூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியிலும் பலத்த மழை பெய்தது.

    அப்போது அந்தியூர் கருவாச்சி அடுத்த பால பாளையம் பகுதியில் உள்ள ஒரு கோவிலில் இடி தாக்கியது. இதில் கோவிலில் லேசான சேதாரம் ஏற்பட்டது. மேலும் ஈரோடு புறநகர் பகுதியில் விடிய விடிய மழை கொட்டி தீர்த்தது. எலந்தை குட்டை மேடு, கவுந்தப்பாடி பகுதிகளில் 100 மில்லி மீட்டர் மழை பதிவானது.

    இதேபோல் நம்பியூர் அம்மாபேட்டை, கொடி வேரி, மாவட்ட அணை பகுதிகளான பவானிசாகர், குண்டேரி பள்ளம், வரட்டு பள்ளம் போன்ற பகுதிகளிலும் மழை கொட்டி தீர்த்தது. இதைப்போல் சத்தியமங்கலம், தாளவாடி மலைப்பகுதிகளும் பரவலாக மழை பெய்தது. கோடைமழை காரணமாக ஈரோடு மாவட்டத்தில் வெப்பநிலை தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியது.

    பலத்த காற்றுடன் மழை பெய்ததால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மின் தடை ஏற்பட்டது. ஈரோடு மாநகர் பகுதியில் நேற்று காலை வழக்கம் போல் வெயில் அடித்தது. ஆனால் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்தது. இந்த மழை காரணமாக ஈரோடு வ.உ.சி காய்கறி மார்க்கெட்டில் வழக்கம்போல் சேரும் சகதியுமாக காட்சியளித்தது.

    இதனால் மார்க்கெட்டிற்கு காய்கறி வாங்க வந்த வியாபாரிகள் பொதுமக்கள் கடும் அவதி அடைந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் நேற்று இரவு பெய்த மழை அளவு மி.மீட்டரில் வரு மாறு:- கோபி-155, எலந்த குட்டைமேடு-100.40, கவுந்தப்பாடி-91.40, நம்பியூர்-79, கொடிவேரி-52.20, வரட்டு பள்ளம்-51.20, பவானி சாகர்-39.40, சென்னிமலை -39, குண்டேரி பள்ளம்-29.40, சத்தியமங்கலம்-23, பவானி-19, தாளவாடி-15, ஈரோடு-12.30, மொடக்குறிச்சி-3, பெருந்துறை-2.

    • ஈரோடு மத்திய பஸ் நிலையம் ரூ.44 கோடி மதிப்பில் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது.
    • மார்ச் மாதம் இறுதிக்குள் விரிவாக்க பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகர் மையப்பகுதியில் 12 ஏக்கர் பரப்பளவில் பஸ் நிலையம் 1973-ம் ஆண்டு கட்டப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது.

    இந்த பஸ் நிலையத்தில் மினி பஸ்சுக்கு என்று தனி ரேக், ஒவ்வொரு ஊரு வாரியாக தனி ரேக் அமைக்கப்பட்டு இருந்தது. நாச்சியப்பா வீதி, சக்திரோடு, மேட்டூர் ரோடு, அகில் மேடு வீதி என 4 வழிகள் இருந்தன.

    மேலும் கட்டண கழிப்பிடம், கடைகள், வடக்கு போக்குவரத்து போலீஸ் நிலையம், சிந்தாமணி கூட்டுறவு அங்காடி போன்றவை இருந்தன.

    இந்நிலையில் ஈரோடு பஸ் நிலையத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டது. அதன்படி ரூ.44 கோடி மதிப்பில் பஸ் நிலையம் விரிவாக்கம் செய்ய முடிவு செய்யப்பட்டு நிதி ஒதுக்கப்பட்டது. இதற்கான பணிகள் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

    இதற்காக 100-க்கும் மேற்பட்ட பழைய கடைகள் இடித்து அகற்றப்பட்டன. விரிவாக்க பணிகளில் நவீன கழிப்பிடங்கள், நவீன ஓய்வறைகள் அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான பணிகள் விறு விறுப்பாக நடந்து வருகிறது.

    நாமக்கல் , சேலம் ரேக் இடிக்கப்பட்டு அங்கு புதிதாக கட்டிடங்கள் கட்டப்பட்டு வருகின்றன. தற்போது பணிகள் 70 சதவீதம் வரை நிறைவடைந்துள்ளது.

    மார்ச் மாதம் இறுதிக்குள் விரிவாக்க பணிகள் முழுவதும் நிறைவடைந்து பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து விடப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர். 

    • மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
    • இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான்.

    ஈரோடு:

    ஈரோடு மாநகராட்சியில் 60 வார்டுகள் உள்ளன. சமீப காலமாக மாநகராட்சி பகுதிகளில் தெரு நாய்கள் தொல்லை அதிகரித்து வருகின்றன. தெரு வோரங்களில் கூட்டமாக கூடியிருந்து தெருவில் வரும் வாகன ஓட்டிகளை துரத்தி வருகின்றன.

    பகல் நேரங்களில் சில சமயம் தெருவில் நடமாடும் பெண்கள், குழந்தைகளையும் துரத்துகின்றன. இதனால் குழந்தைகள், பெண்கள் தெருவில் நடமாட அச்சப்படுகின்றனர்.

    முன்பு கறிக்கடை முன்பு நாய்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். தற்போது மாநகர் பகுதி முழுவதும் பெரும்பாலான இடங்களில் தெரு நாய்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.

    இதற்கு முக்கிய காரணம் நாய்களுக்கு கருத்தடை செய்யாமல் இருப்பது தான். முன்பு மாநகராட்சி சார்பில் தெருவில் சுற்றி திரியும் நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டது.

    தற்போது அது செய்யப்ப டாமல் உள்ளதால் நாய்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. இதனால் நாய்களின் தொல்லையும் அதிகரித்துள்ளதாக பொது மக்கள் தெரிவித்துள்ளனர்.

    மாநகர் பகுதியில் தற்போது ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாய்கள் தெருக்களில் சுற்றி திரிகின்றன. நாய் கடிக்கு சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

    எனவே முன்பு போல் தெருவில் சுற்றி தெரியும் நாய்களுக்கு கருத்தடை ஆபரேஷன் செய்ய வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.
    • சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது.

    ஈரோடு:

    ஈரோடு பன்னீர்செல்வம் பார்க்கில் உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஜவுளி சந்தை வாரம் தோறும் செவ்வாய்கிழமை நடைபெறுவது வழக்கம்.

    கடந்த 2 வாரங்களுக்கு முன்பு கிறிஸ்துமஸ் மற்றும் பொங்கல் வியாபாரம் தொடங்கப்பட்டது.

    ஆனால் தொடர் மழை, வெளிமாநில மொத்த வியாபாரிகள் வருகை குறைவு உள்ளிட்ட காரணங்களால் ஜவுளி சந்தையில் வியாபாரம் மந்தமாக நடைபெற்றது.

    ஆனாலும் சில்லரை வியாபாரம் ஓரளவு நடைபெற்று வந்தது.

    இந்நிலையில் இன்று நடைபெற்ற ஜவுளி சந்தையில் வியாபாரம் அமோகமாக நடை பெற்றதாக வியாபாரிகள் கூறினர். கிறிஸ்மஸ், புத்தாண்டு, பொங்கல் என தொடர்ந்து பண்டிகைகள் வருவதால் இன்று ஜவுளி சந்தை களை கட்டியது.

    மேலும் கர்நாடகா, ஆந்திரா, கேரளா போன்ற வெளிமாநிலங்களில் இருந்து வெளி மாநில வியாபாரிகள் அதிக அளவில் வந்திருந்தனர்.

    இதேபோல் தமிழகத்தில் பிற மாவட்டங்களில் இருந்தும் அதிக அளவில் மொத்த வியாபாரிகள் ஜவுளிகளை கொள்முதல் செய்ததாகவும், வழக்கம் போல சில்லரை விற்பனை எதிர்பார்த்த அளவில் நடைபெற்றதாக ஜவுளி சந்தை வியாபாரிகள் கூறினர்.

    சில்லரை வியாபாரம் மட்டும் இன்று 40 சதவீதம் நடைபெற்றது. இனி வரக்கூடிய நாட்களில் விற்பனை மேலும் அதிகரிக்கும் என வியாபாரிகள் நம்பிக்கை தெரிவித்தனர்.

    • இன்று இரவு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர்.

    ஈரோடு:

    ஈரோடு நகரின் பிரசித்தி பெரிய மாரியம்மன் வகையறா கோவில்களின் பொங்கல் விழா ஆண்டுதோறும் மார்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா கடந்த 21-ந் தேதி இரவு பூச்சாட்டுதலுடன் தொடங்கியது.முன்னதாக முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடந்து முடிந்தது.

    இதனையடுத்து தற்போது கோவில் முன்பு பந்தல் அமைக்கும் பணியும், கடைகள் அமைக்கும் பணியும் தீவிரமாக நடந்து வருகிறது.

    தொடர்ந்து இன்று (சனிக்கிழமை) இரவு 8.30 மணிக்கு பட்டாளம்மன் அபிஷேகம், 10 மணிக்கு கம்பம் நடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    29-ந் தேதி இரவு 7.30 மணிக்கு அன்ன வாகன ஊர்வலம், இரவு 10.30 மணிக்கு கிராம சாந்தி நிகழ்ச்சியும் நடைபெறுவது.

    தொடர்ந்து பொதுமக்கள் தினமும் கம்பத்துக்கு புனித நீர் ஊற்றி வழிபடுவர். அம்மனுக்கு தினமும் சிறப்பு அபிசேகம், பூஜைகள் நடைபெறும்.

    இதையடுத்து வரும் ஏப்ரல் மாதம் 4-ந் தேதி அதிகாலை 5.30 மணிக்கு வாய்க்கால் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி நடைபெறும். இரவு 8 மணிக்கு மாவிளக்கு, கரகம் எடுத்து வந்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்தும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    தொடர்ந்து 5-ந் தேதி காலை 9.30 மணிக்கு திருவிழாவின் முக்கிய நிகழ்வான பொங்கல் வைக்கும் நிகழ்ச்சியும், சின்னமாரியம்மன் கோவிலில் தேரோட்டமும் நடைபெறும்.

    தொடர்ந்து 6-ந் தேதி இரவு 8 மணிக்கு பெரிய மாரியம்மன் திருவீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். 7-ந் தேதி மாலை 4 மணிக்கு தேர் நிலை சேரும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

    இரவு 8 மணிக்கு காரை வாய்க்கால் மாரியம்மன் திருவீதி உலா, 9.30 மணிக்கு சின்ன மாரியம்மன் திருவீதி உலா நடைபெறவுள்ளது.

    இதையடுத்து 8-ந் தேதி மாலை 3 மணிக்கு கம்பம் பிடுங்கும் நிகழ்ச்சியும், மஞ்சள் நீராட்டு விழாவும் நடைபெறும்.

    இதில் பெரிய மாரியம்மன் வகையறா திருக்கோவில்களை சேர்ந்த பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோவில்களின் கம்பங்கள் எடுத்து வரப்பட்டு, நகரின் முக்கிய வீதிகள் எடுத்து செல்லப்பட்ட காவிரி ஆற்றில் விடப்படும்.

    அன்று உள்ளூர் விடுமுறையும் அளிக்கப்படுகிறது. தொடர்ந்து இறுதி நிகழ்ச்சியாக 9-ந் தேதி காலை 10.30 மணிக்கு மறு பூஜையுடன் விழா நிறைவுபெறுகிறது.

    • மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள் இன்று முககவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.
    • முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது.

    ஈரோடு:

    இந்தியாவில் கடந்த சில மாதங்களாகவே கட்டுக்குள் இருந்த கொரோனா தாக்கம் மீண்டும் மார்ச் மாதம் வேகமாக பரவத் தொடங்கியது.

    இதன் எதிரொலியாக தமிழகத்தில் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாகவே 2 இலக்கில் பதிவாகி வந்த கொரோனோ பாதிப்பு தற்போது 3 இலக்கில் பதிவாகி வருகிறது.

    தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக சுகாதாரத்து றையினர் பல்வேறு தடுப்பு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.

    முன்புபோல் முககவசம் அணிய வேண்டும். கை, கால்களை அடிக்கடி சோப்பு போட்டு கழுவ வேண்டும். சமூக இடைவெளி கடைபிடிக்க வேண்டும்.

    பொது இடங்களில் கூடுவதை தவிர்க்க வேண்டும் என அறிவுறுத்தி வருகின்றன.

    ஈரோடு மாவட்டத்திலும் கடந்த 2 வாரத்திற்கும் மேலாக தினசரி கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது.

    இதனையடுத்து கொரோனா பரவலை கட்டுப்படுத்த சுகாதார துறையினர் இன்று முதல் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து அரசு தலைமை மருத்துவமனைகள், அரசு மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள், நோயாளிகள், நோயாளிகளை பார்க்க வரும் உறவினர்கள் கண்டிப்பாக முககவசம் அணிய வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது.

    இந்த நடைமுறை இன்று தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்தது.

    அதன்படி ஈரோடு மாவட்டத்திலும் இந்த புதிய நடைமுறை இன்று அமலுக்கு வந்தது.

    ஈரோடு அரசு தலைமை மருத்துவமனையில் பணியாற்றும் நர்சுகள், டாக்டர்கள் இன்று முககவசம் அணிந்து பணிக்கு வந்தனர்.

    இதேபோல் மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு வந்த நோயாளிகள், அவர்கள் உடன் இருப்ப வர்கள், உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வருபவ ர்கள் முககவசம் அணிந்தி ருந்த னர்.

    இதேபோல் கோபிசெட்டிபாளையம், அந்தியூர், சத்தியமங்கலம், கொடுமுடி, பெருந்துறை, பவானி ஆகிய பகுதிகளில் உள்ள அரசு மருத்துவமனைகளிலும் ஊழியர்கள், நர்சுகள், டாக்டர்கள், நோயாளிகள் முககவசம் அணிந்திருந்தனர்.

    ஈரோடு மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் டாக்டர்கள், நர்சுகள், நோயாளிகள் முககவசம் அணிந்திருந்தனர். முககவசம் அணியாமல் வந்தவர்களுக்கு முககவசம் வழங்கப்பட்டது. 

    • ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.
    • கோவில் திருவிழாவை யொட்டி வியாபாரிகள் அனைவரும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

    ஈரோடு,

    ஈரோடு மாநகரில் பிரசித்தி பெற்ற பெரிய மாரியம்மன், சின்ன மாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் வகையறா கோவில்களின் குண்டம் தேர் திருவிழா கடந்த மாதம் 21 ஆம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கி நடந்து வருகிறது. தொடர்ந்து 3 கோவில்களிலும் கம்பம் நடப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து கோவில்களின் கம்பத்திற்கு தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று புனித நீர் ஊற்றி அம்மனை வழிபட்டு வருகின்றனர். பெண்கள் முளைப்பாரி எடுத்தும், தீர்த்த குடங்கள் எடுத்தும் வருகின்றனர்.

    பக்தர்கள் அலகு குத்தியும், அக்னி சட்டி ஏந்தியும் வருகின்றனர். இதனால் ஈரோடு மாநகரமே களைக்கட்டி உள்ளது.

    ஈரோடு வ.உ.சி. பூங்காவில் பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது.

    இங்கு 700-க்கும் மேற்பட்ட காய்கறி கடைகள் உள்ளன. இங்கு சில்லரை வியாபாரம், மொத்த வியாபாரம் நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில் ஈரோடு பெரிய மார்க்கெட் வியா பாரிகள் சார்பில் பெரிய மாரியம்மன் கோவில் திருவிழாவை யொட்டி வியாபாரிகள் அனைவரும் தீர்த்த குடம் எடுத்து ஊர்வலம் சென்றனர்.

    இதையொட்டி மார்க்கெ ட்டுக்கு இன்று விடுமுறை விடப்பட்டு உள்ள்து. இதனால் இன்று காலை வ.உ.சி. காய்கறி மார்க்கெட் ஆட்கள் நடமாட்டம் இன்றி வெறிச்சோடி காணப்ப ட்டது.

    • அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.
    • ஈரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் தீவு அமைந்துள்ளது.

    கரைபுரண்டோடும் காவிரி, அதன் நடுவே பிரணவ உருவாய் திகழும் சிவாலயம். இங்ஙனம் ஆற்றின் நடுவில் கோவில் கொண்டிருப்பதால் நட்டாற்றீஸ்வரர் என்றும், அகத்தியரால் வழிபடப்பட்டவர் ஆதலால் அகத்தீஸ்வரர் என்றும் திருப்பெயர்களை ஏற்றுத்திகழ்கிறார் சிவபிரான்.

    ஈரோட்டில் அமைந்துள்ள இந்த தீவின் பெயர் நட்டாற்றீஸ்வரர் தீவு. ஈரோட்டில் இருந்து 15 கி.மீ தொலைவில் இந்த தீவு அமைந்துள்ளது. கடல் போல் காட்சியளிக்கும் காவிரி ஆற்றின் நீருக்கு நடுவே அமைந்துள்ள இந்த குட்டி தீவின் நடுவே சிவன் கோவில் ஒன்றும் அமைந்துள்ளது.

    இந்த கோவிலில் உள்ள சிவபெருமான் நட்டாற்றீஸ்வரர் என அழைக்கப்படுகிறார். இந்த கோவில் கிட்டத்தட்ட 3000 ஆண்டுகள் பழமையானதாக கருதப்படுகிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்கள் காலத்தில் கட்டப்பட்டதாக கருதப்படும் இந்த கோவிலுக்கு முதலில் பரிசல் மட்டுமே பயன்படுத்தப்பட்டது. ஆனால் தற்போது கரையில் இருந்து கோயிலுக்கு செல்ல பாலம் கட்டப்பட்டுள்ளது. இதனால் சுற்றுலாப் பயணிகள், பொதுமக்கள் எளிதில் செல்ல முடியும்.

    கோயிலின் வரலாறு

    இந்த கோவில் குறித்து பழங்கால புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி அகத்திய முனிவர் தனது பாவங்களைப் போக்க ஒரு சிவலிங்கத்தை உருவாக்கினாராம். மணலால் செய்யப்பட்ட இந்த சிவலிங்கம் காவேரி ஆற்றின் மையத்தில் ஒரு குன்றின் மீது வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து அகத்தியர் தனது ருத்ராட்ச மாலையை மலையை சுற்றி வைத்துவிட்டு தனது தவத்தை தொடங்கினார்.

    சித்திரை முதல் நாள் அவர் எந்த தொந்தரவும் இல்லாமல் தவம் செய்துள்ளார். ஆனால் தமிழ் புத்தாண்டு அன்று சில இடையூறுகளால் கண்விழித்த அவர் தனது தவத்தை முடித்துக் கொண்டாராம். பின்னர் அவர் தனது ருத்ராட்ச மாலையை லிங்கத்தில் இருந்து அகற்ற முயன்றார். பின்னர் சிவபெருமானின் தெய்வீக குரலை கேட்டாரம். அப்போது சிவபெருமான் தனது லிங்கத்தைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்றும், அது நிரந்தரமாக அங்கேயே இருக்கும் என்று கூறினாராம்.

    அகத்தியரையும், அங்கு வந்த அனைத்து பக்தர்களையும் ஆசீர்வதிக்க தோன்றியதாகவும் கூறினாராம். எனவே, இந்த புராணத்தின் படி சிவபெருமான் ஈரோடு நகரில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். பின்னர் அகத்திய முனிவர் தனது எஞ்சிய பணியை முடிக்க தெற்கில் பல்வேறு இடங்களுக்கு சென்றதாக கூறப்படுகிறது.

    ஏறக்குறைய 3000 ஆண்டுகளுக்கு முன்பு சோழ மன்னர்கள் நட்டாற்றீஸ்வரர் கோவிலைக் கட்டி, கோவிலில் சிவ லிங்கத்தை நிறுவினர். இங்குள்ள லிங்கத்திற்கு அகஸ்தீஸ்வரர் என்று பெயர். இந்த கோவிலுக்குள் அமைந்துள்ள அத்தி மரத்தை பக்தர்கள் காணலாம். இது 3000 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது என நம்பப்படுகிறது. தமிழ் புத்தாண்டு தினத்தன்று ஈரோடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவிலுக்கு வந்து இறைவனிடம் பிரார்த்தனை செய்து கொள்கின்றனர்.

    எப்படி செல்வது?

    ஈரோடு பேருந்து நிலையத்தில் இருந்து கரூர் செல்லும் பேருந்தில் ஏறி சாவடிப்பாளையம் என்ற ஊரில் இறங்க வேண்டும். அங்கிருந்து ஆட்டோ மூலம் 2 கி.மீ தொலைவில் உள்ள இந்த கோவிலுக்கு செல்லலாம். மேலும் காவிரி ஆற்றங்கரையில் இருந்தும், நாமக்கல் மாவட்டத்தில் உள்ள மற்ற ஆற்றங்கரைகளில் இருந்தும் பரிசல் சேவைகள் இக்கோயிலுக்குச் செல்லலாம். எனவே வாய்ப்புள்ளவர்கள் இந்த அழகான தீவு கோவிலுக்கு செல்வது நிச்சயம் நல்ல அனுபவத்தை தரும்.

    • வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.
    • கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    ஈரோடு:

    ஈரோடு ரெயில் நிலையத்தில் முன்பதிவு டிக்கெட் கவுண்டர் அறை அருகே ரெயில் டிரைவர்கள் அலுவலகம் உள்ளது. இதன் அருகே 80 அடி உயரத்தில் மின்விளக்கு டவர் உள்ளது. நேற்று மதியம் 2 மணி அளவில் 30 வயது மதிக்கத்தக்க வட மாநில வாலிபர் ஒருவர் திடீரென அந்த 80 அடி உயர மின்விளக்கு டவரில் வேகமாக ஏறினார்.

    முதலில் இதைப்பார்த்த ரெயில்வே ஊழியர்கள் அந்த நபர் டவரில் வேலை செய்கிறார் என்று நினைத்து கொண்டனர். ஆனால் நேரம் செல்ல செல்ல அந்த வாலிபர் 80 அடி உயரத்திற்கு மேலே உட்கார்ந்து இருப்பது தெரிய வந்தது.

    இதனால் அதிர்ச்சி அடைந்த ரெயில்வே அதிகாரிகள் இதுகுறித்து ஈரோடு ரெயில்வே போலீசார், ஈரோடு ரெயில்வே பாதுகாப்பு படை போலீசார், சூரம்பட்டி போலீசார் மற்றும் ஈரோடு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். சிறிது நேரத்தில் சம்பவ இடத்திற்கு போலீசார் வரைந்து வந்தனர். அவர்கள் அந்த வாலிபர் இடம் பேச்சுவார்த்தை கொடுத்தனர்.

    அப்போது அந்த வாலிபர் ஹிந்தியில் பேசியதால் ஹிந்தி பேசத் தெரிந்த மற்றொரு வாலிபரை அழைத்து வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அந்த வாலிபர் தனக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும், கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ள போகிறேன் எனவும் மிரட்டல் விடுத்தார். சர்ச் பாதிரியாரை வரச்சொல்லுங்கள் அப்போதுதான் கீழே இறங்குவேன் என்றும் கூறினார்.

    பின்னர் அந்த வாலிபர் மேலே ஏறுவதும் பாதி தூரம் வரை கீழே வந்து திருப்பி மீண்டும் மேலே ஏறுவதும் என போக்கு காட்டி வந்தார். ஒரு கட்டத்தில் செல்போன் கேட்கவே போலீசார் ஒரு செல்போனை டவர் தகட்டில் வைத்தனர். அதை எடுக்க இறங்கியபோது போலீசார் பிடிக்க முயன்றதால் போனை எடுக்காமல் மீண்டும் டவர் மீது ஏறிக்கொண்டார். பின்னர் போலீசார் ஒருவர் பாதிரியார் போன்று வேஷம் போட்டு மேலே செல்ல முயன்றார். ஆனால் அவர் உண்மையான பாதிரியார் இல்லை என தெரிந்து கொண்ட அந்த வாலிபர் மீண்டும் மேலே ஏறி சென்று விட்டார்.

    இந்நிலையில் மாலை 4.30 மணியளவில் கனமழை பெய்ய தொடங்கியது. அப்போது அந்த வாலிபர் இறங்கி விடுவார் என்று எதிர்பார்த்த போலீசாருக்கு ஏமாற்றம் மிஞ்சியது. அந்த நபர் மழையில் நடந்தபடி மேலே டவரில் தொடர்ந்து அமர்ந்து இருந்தார். இரவு வரை தொடர்ந்த அந்த வாலிபர் டவரில் அமர்ந்து இருந்தார். பின்னர் இரவு 12 மணி ஆனது. ஆனாலும் அந்த வாலிபர் போலீசாருக்கு டிமிக்கி கொடுத்து தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து கொண்டிருந்தார்.

    பின்னர் போலீசார் அங்கிருந்து கிளம்பி செல்வது போன்று அங்கிருந்து சிறிது தூரம் கிளம்பி சென்றனர். பின்னர் நள்ளிரவு 2.45 மணியளவில் அந்த வாலிபர் நன்றாக தூங்கி கொண்டிருந்தார். அப்போது டவரில் நன்கு ஏறும் வாலிபர் ஒருவரை போலீசார் அழைத்து வந்து அந்த 80 அடி மின் டவரில் ஏற செய்தனர். வாலிபர் நன்றாக தூங்கிக் கொண்டிருந்த சமயத்தில் டக்கென்று இந்த வாலிபர் மேலே இருந்த வாலிபரை பிடித்துக் கொண்டார்.

    உடனடியாக தீயணைப்பு துறையினர் வேகமாக சென்று அந்த வாலிபரை மீட்டனர். பின்னர் அந்த நபர் ஈரோடு ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து செல்லப்பட்டார். அவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் அவர் மத்திய பிரதேசம் மாநிலம் மண்டேல் மாவட்டத்தை சேர்ந்த ராகுல் மார்க்கம் (26) என்பதும், கேரளாவில் அவரது நண்பரை பார்க்க ரெயிலில் ஏறி வந்தவர் வழி தவறி ஈரோட்டில் இறங்கி விட்டதும் தெரிய வந்தது. அவருக்கு தமிழ் புரியாததால் ரெயில் நிலையத்தில் சிறிது நேரம் சுற்றி வந்துள்ளார்.

    பின்னர் திடீரென 80 அடி மின் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரிய வந்தது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என்று அந்த நபரிடம் கேட்டபோது அவர் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினார். இதையடுத்து கேரளாவில் உள்ள அவரது நண்பருக்கு போலீசார் போனில் தொடர்பு கொண்டு ஈரோடுக்கு வருமாறு கூறினர்.

    இதனையேற்று அவரது நண்பர் கேரளாவில் இருந்து வந்து கொண்டிருக்கிறார். அவர் வந்த பிறகு தான் ராகுல் மார்க்கமுக்கு என்ன பிரச்சனை உள்ளது. எதற்காக தற்கொலை மிரட்டல் விடுத்தார் என முழு விவரம் தெரிய வரும். கிட்டத்தட்ட 13 மணி நேரம் போலீசாரை அலறவிட்ட வடமாநில வாலிபர் செயலால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

    • மூலப்பட்டறை அருகே மாரியம்மன் என்ற கோவில் உள்ளது.
    • அம்மனின் கண்கள் மூடி திறந்தது.

    ஈரோடு:

    ஈரோடு மூலப்பட்டறை அருகே உள்ள காந்திபுரம் மில் வீதி பகுதியில் ரோட்டில் எல்லை மாரியம்மன் என்ற கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த ஆண்கள், பெண்கள், சிறுமிகள் என ஏராளமானோர் வந்து சாமி தரிசனம் செய்து வருகிறார்கள். மேலும் அந்த பகுதியை சேர்ந்தவர்கள் தினமும் அம்மனுக்கு மஞ்சள் அபிஷேகம் செய்தும் வழிபட்டு வருகிறார்கள்.

    சாலையோரம் கோவில் அமைந்துள்ளதால் எல்லை தெய்வமாக நினைத்து மக்கள் காலை, மாலை என இரு வேளைகளிலும் தரிசனம் செய்து வருகிறார்கள்.

    இந்தநிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பெண்கள் மற்றும் சிறுமிகள் அந்த கோவிலுக்கு வந்து தரிசனம் செய்தனர். இதைத்தொடர்ந்து அந்த பகுதியை சேர்ந்த சிறுமி ஒருவர் சாமி தரிசனம் செய்ய வந்தார். அப்போது அந்த அம்மனின் கண்கள் மூடி திறந்தது.

    இதைக்கண்டு அந்த சிறுமி பக்தியில் உறைந்தார். இதை பற்றி அந்த சிறுமி அக்கம் பக்கம் இருந்தவர்களிடம் கூறினார். இதையடுத்து அந்த பகுதியை சேர்ந்த பெண்கள் வந்து பார்த்து பக்தி பரவசம் அடைந்தனர்.

     இதையடுத்து அவர்கள் அம்மா, தாயே, மாரியம்மா என பக்தி கோஷம் முழங்க சாமி தரிசனம் செய்தனர். இது பற்றி தகவல் ஊர் முழுவதும் பரவியது. இதையடுத்து இரவு 8 மணிக்கு மேல் பெண்கள் மற்றும் சிறுமிகள் என கூட்டம், கூட்டமாக 100-க்கும் மேற்பட்டவர்கள் குவிய தொடங்கினர்.

    நேரம், செல்ல, செல்ல மக்களின் கூட்டம் கோவி லில் அதிகளவில் குவிந்த னர். நள்ளிரவு 12 மணி வரை சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து பக்தி கோஷம் முழங்க அம்மனை வழிபட்டு சென்றனர்.

    ×