சினிமா செய்திகள்

மருத்துவர்களே இல்லை - அரசு மருத்துவமனையில் நடிகர் கஞ்சா கருப்பு போராட்டம்

Published On 2025-02-11 12:51 IST   |   Update On 2025-02-11 13:05:00 IST
  • தமிழ் திரையுலகில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் கஞ்சா கருப்பு.
  • மருத்துவர்கள் இல்லாததால், நீண்ட நேரம் காக்க வைக்கப்பட்டதாக குற்றச்சாட்டு.

தமிழ் திரையுலகில் பிரபல நடிகர் கஞ்சா கருப்பு. நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து புகழ்பெற்ற கஞ்சா கருப்பு சமீப காலங்களில் அதிக படங்களில் நடிக்காமல் இருக்கிறார். இந்த நிலையில், சென்னையில் அரசு மருத்துவமனைக்கு சென்ற நடிகர் கஞ்சா கருப்பு திடீரென போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பான சூழல் நிலவியது.

இன்று காலை சென்னை போரூரில் உள்ள பெருநகர சென்னை மாநகராட்சி நகர்புற சமுதாய நல மருத்துவமனைக்கு நடிகர் கஞ்சா கருப்பு சென்றுள்ளார். மருத்துவமனையில் மருத்துவர்கள் இல்லாமல் நீண்ட காலமாக காக்க வைத்ததாக நடிகர் கஞ்சா கருப்பு குற்றம்சாட்டினார்.

காலை 7 மணியில் இருந்தே மருத்துவர்கள் இல்லாமல் காக்க வைக்கப்பட்டதாக கூறி நடிகர் கஞ்சா கருப்பு போராட்டத்தில் ஈடுபட்டார். திடீர் போராட்டம் காரணமாக மருத்துவமனையில் பரபரப்பான சூழல் காணப்பட்டது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும். 


Tags:    

Similar News