கன்னடத்தை புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு பாடம் புகட்ட வேண்டும்- கொந்தளித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.
- கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமானார்.
- கர்நாடகா எங்கே இருக்கிறது என தெரியாது என்று ராஷ்மிகா கூறியதாக காங்கிரஸ் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
2016 ஆம் ஆண்டு வெளியான கிரிக் பார்ட்டி என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் சினிமாவில் ராஷ்மிகா மந்தனா சினிமாவில் அறிமுகமானார். இப்படத்தில் ரக்ஷித் ஷெட்டிக்கு ஜோடியாக ராஷ்மிகா நடித்திருந்தார். அப்போது இருவரும் காதலிப்பதாகவும் விரைவில் திருமணம் செய்து கொள்ளவுள்ளனர் என்றும் தகவல் பரவியது.
பின்னர் ராஷ்மிகா தெலுங்கு படங்களில் நடித்து முன்னணி நடிகையாக மாறிய பிறகு இந்த திருமணத்தை நிறுத்தியதாக கூறப்படுகிறது. தற்போது தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய அளவில் முன்னணி நடிகையாக ராஷ்மிகா மந்தனா வலம்வருகிறார்.
இந்நிலையில், நடிகை ராஷ்மிகா மந்தனா கன்னடத்தை புறக்கணிப்பதாக கர்நாடகா மாநில காங்கிரஸ் எம்.எல்.ஏ. ரவிக்குமார் கவுடா குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக பேட்டி அளித்த ரவி, "கன்னட மொழி படத்தின் மூலம் திரையுலகில் வாழ்க்கையை தொடங்கிய நடிகை ராஷ்மிகா தற்போது கன்னடத்தை புறக்கணிக்கிறார். கடந்த ஆண்டு சர்வதேச திரைப்பட விழாவில் பங்கேற்க நாங்கள் அழைத்தபோது ராஷ்மிகா மறுத்து விட்டார்
என் வீடு ஹைதராபாத்தில் உள்ளது. கர்நாடகா எங்கே இருக்கிறது என தெரியாது, என்னால் வர முடியாது என்று ராஷ்மிகா கூறிவிட்டார் கன்னடத்தை புறக்கணித்த ராஷ்மிகாவுக்கு பாடம் கற்பிக்க வேண்டாமா?" என்று ஆவேசமாக தெரிவித்துள்ளார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.