சினிமா செய்திகள்
null

வாழ்க்கையின் நாவலைப் படிப்பது போல் இருந்தது - நித்திலனின் நெகிழ்ச்சி பதிவு

Published On 2024-08-02 09:55 GMT   |   Update On 2024-08-02 10:14 GMT
  • ரஜினிகாந்த இயக்குனர் நித்திலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.
  • நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.

குரங்கு பொம்மை படத்தை இயக்கிய நித்திலன் சுவாமிநாதன் அடுத்ததாக விஜய் சேதுபதி நடிப்பில் மகாராஜா திரைப்படத்தை இயக்கினார்.

இப்படத்தை சுதன் சுந்தரம் மற்றும் ஜெகதீஷ் பழனிச்சாமி இணைந்து தயாரித்துள்ளனர். விஜய் சேதுபதிக்கு 50- வது திரைப்படமான இந்த படத்தில், கதாநாயகனாக நடித்து ஒரு கம்பேக் திரைப்படமாக விஜய் சேதுபதிக்கு அமைந்துள்ளது.

இத்திரைப்படம் கடந்த ஜூன் 14 ஆம் தேதி வெளியானது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே மிகப் பெரிய வரவேற்பை பெற்றது. இப்படம் இதுவரை 100 கோடி ரூபாய் மேல் உலகளவில் வசூலித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

திரைப்படம் சில வாரங்களுக்கு முன் ஓடிடி தளமான நெட்பிளிக்ஸ்சில் வெளியிடப்பட்டு இந்தியாவில் அதிகம் பார்த்த டாப் 10 திரைப்படங்களிலும் முதல் இடத்தில் இருந்தது குறிப்பிடத்தக்கது.

படத்தை திரைப்பிரபலங்கள் பார்த்து பாராட்டிய நிலையில், நடிகர் விஜய் சில வாரங்களுக்கு முன் பாராட்டினார். தற்பொழுது படத்தை பார்த்த ரஜினிகாந்த இயக்குனர் நிதிலன் சுவாமிநாதனை நேரில் அழைத்து பாராட்டியுள்ளார்.

இதுக்குறித்து இயக்குனர் அவரது எக்ஸ் தளத்தில் மகிழ்ச்சியுடன் பதிவை பகிர்ந்துள்ளார் அதில்

அன்புள்ள சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார், உங்களை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி. உங்களை சந்தித்தது வாழ்க்கையின் நாவலையும், அனுபவத்தை, வாழும் வாழ்க்கை முறையை கோலிவுட்டின் மிகச்சிறந்த மனிதனிடம் இர்ந்து கேட்டு தெரிந்து கொண்டது மிகவும் ஆனந்தம்.

நீங்கள் என்னை உபசரித்த பண்பும், பணிவும் பார்ப்பதற்கு மிகவும் பிரமிப்பாக இருந்தது. நீங்கள் மகாராஜா திரைப்படத்தை எவ்வளவு நேசித்தீர்கள் என்பதை தெரிந்தப்பின் மிகவும் நெகிழ்ச்சியாக இருந்தது. மீண்டும் மிக்க நன்றி சார் , லாங் லிவ் தலைவர். என்று நெகிழ்ச்சியுடம் பதிவிட்டுள்ளார்.

இப்பதிவு தற்பொழுது இணையத்தில் வைரலாகி வருகிறது.

உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

Tags:    

Similar News