சினிமா செய்திகள்

ஐ.நா. தலைமையகத்தில் ஏ.ஆர்.ரகுமான்- ட்ரெண்டாகும் புகைப்படம்

Published On 2023-10-10 09:25 GMT   |   Update On 2023-10-10 09:25 GMT
  • ஏ.ஆர்.ரகுமான் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.
  • சென்னையில் இவர் நடத்திய இசை நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.

இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான ஏ.ஆர்.ரஹ்மான் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் ஹாலிவுட் படங்களுக்கு இசையத்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் பல இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார். சமீபத்தில் சென்னையில் இவர் நடத்திய இசை நிகழ்ச்சியில் கூட்டநெரிசல் மற்றும் போக்குவரத்து நெரிசலால் பல்வேறு சர்ச்சைகள் எழுந்தன.


இதைத்தொடர்ந்து பல ரசிகர்கள் ஏ.ஆர்.ரகுமானுக்கு எதிராக கருத்து பதிவிட்டு வந்த நிலையில் திரைப்பிரபலங்கள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்து பதிவுகளை பகிர்ந்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாத ரசிகர்களுகு கட்டணம் திருப்பி கொடுக்கப்படும் என்று அறிவித்திருந்தார். அந்த கட்டணங்களும் திருப்பி கொடுக்கப்பட்டன.

இந்நிலையில், ஸ்விட்சர்லாந், ஜெனிவாவில் உள்ள ஐ.நா. சபையின் தலைமையகத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் சென்றுள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை அவர் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். அவர் எதற்காக ஐ.நா. சென்றார் என்ற தகவல் வெளியாகவில்லை.


கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு ஐ.நா.வில் ஏ.ஆர்.ரகுமான் இசை நிகழ்ச்சி நடத்தினார். பிரபல கர்நாடக பாடகி எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு பிறகு ஐ.நா.வில் இசை நிகழ்ச்சி நடத்திய இரண்டாவது இந்தியர் ஏ.ஆர்.ரகுமான் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News