ஆன்மிகம்

விநாயகருக்கு பெருச்சாளி வாகனமானது எப்படி?

Published On 2017-08-24 11:34 IST   |   Update On 2017-08-24 11:34:00 IST
விநாயகர் பெருச்சாளியை தனது வாகனமாக ஆக்கிக் கொண்ட ஆன்மிக கதையை விரிவாக அறிந்து கொள்ளலாம்.
முன்னொரு காலத்தில் கஜமுகாசுரன் என்ற அசுரன் ஒருவன் தோன்றினான். அவன் இறைவனிடத்தில் தன்னை யாரும் கொல்ல முடியாதபடி வரம் கேட்டான். அந்த அரிய வரத்தைப் பெற்றதன் காரணத்தினால் பலரைத் துன்பப்படுத்தி வந்தான். அதனால் அவனை கொல்வதற்காக இறைவன், ஆவணி மாதம் அமாவாசை கழிந்த நான்காம் நாள் சதுர்த்தியன்று விநாயகப் பெருமானை யானை (கஜம்) மூகத்தோடும், மனித உடலோடும் தோற்றுவித்தார்.

பிறகு அசுரனை வதம் செய்யும்படி அனுப்பி வைத்தார். விநாயகர் தம் கொம்புகளில் ஒன்றை ஒடித்து அக்கொம்பினால் அசுரனைக் கொன்றார். உடனே அசுரன் ஒரு பெருச்சாளி உருவம் தாங்கி விநாயகரை எதிர்த்துப் போரிட, விநாயகர் பெருச்சாளியை வென்று அதனைத் தன் வாகனமாக ஆக்கிக் கொண்டார்.

Similar News