வழிபாடு

நவராத்திரி: இன்று 5-வது நாள் வழிபாட்டு முறை

Published On 2022-09-30 06:35 GMT   |   Update On 2022-09-30 06:35 GMT
  • துர்க்கையை வணங்கினால் தீய எண்ணங்கள் வேரோடு அழியும்.
  • இன்று 5-ம் நாள் வழிபாட்டு முறையை அறிந்து கொள்ளலாம்.

5-வது நாள் 30-9-2022 (வெள்ளிக்கிழமை)

வடிவம் : மோகினி (சும்ப நிசும்பனின் தூதர்கள் தூது போன நாள்)

பூஜை : 6 வயது சிறுமியை வைஷ்ணவி வேடத்தில் பூஜிக்க வேண்டும்.

திதி : பஞ்சமி

கோலம் : கடலை மாவால் பறவை கோலம் போட வேண்டும். வாசனை தைலத்தால் அலங்கரிக்க வேண்டும்.

பூக்கள் : கதம்பம், மனோரஞ்சிதம் பூக்களால் பூஜிக்க வேண்டும்.

நைவேத்தியம் : சர்க்கரை பொங்கல், கடலை பருப்பு வடை, பாயாசம், தயிர் சாதம், பால் சாதம், பூம்பருப்புசுண்டல்.

ராகம் : பஞ்சமாவரணை கீர்த்தனைகள் பாட வேண்டும். பந்துவராளி ராகமும் பாடலாம்.

பலன் : நாம் விரும்பும் அனைத்து செல்வங்களும் கிடைக்கும்.

Tags:    

Similar News