வழிபாடு

திருச்செந்தூரில் பஞ்ச லிங்கம்

Published On 2023-05-10 10:33 GMT   |   Update On 2023-05-10 10:33 GMT
  • முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர்.
  • இது 2-ம் படைவீடு என்று போற்றப்படுகிறது.

முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்று திருச்செந்தூர். 2-ம் படைவீடு என்று போற்றப்படும் இந்த ஆலயம், முருகப்பெருமானின் தனித்துவம் மிக்க கோவில் என்றாலும், சூரபத்மனை அழித்த முருகப்பெருமான் இங்கு, சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்திருக்கிறார்.

அதுவும் ஒன்றல்ல, இரண்டல்ல.. ஐந்து சிவலிங்கங்களை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார்.

பஞ்ச லிங்கங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஐந்து லிங்கங்களும், முருகப்பெருமானின் மூலவர் கருவறைக்கு பின்புறம் உள்ள தனி அறையில் காணப்படுகிறது.

Tags:    

Similar News