இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 11 பிப்ரவரி 2025
- இன்று தைபூசம்.
- சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில் தெப்ப உற்சவம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு தை-29 (செவ்வாய்க்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: சதுர்த்தசி இரவு 7.50 மணி வரை பிறகு பவுர்ணமி
நட்சத்திரம்: பூசம் இரவு 7.31 மணி வரை பிறகு ஆயில்யம்
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: பிற்பகல் 3 மணி முதல் 4.30 மணி வரை
எமகண்டம்: காலை 9 மணி முதல் 10.30 மணி வரை
சூலம்: வடக்கு
நல்ல நேரம்: காலை 8 மணி முதல் 9 மணி வரை மாலை 5 மணி முதல் 6 மணி வரை
இன்று தைபூசம். சுவாமிமலை முருகப் பெருமான் போராயிரம் கொண்ட தங்கப் பூமாலை சூடியருளல். வடலூர் ஸ்ரீ ராமலிங்க சுவாமிகள் அருட்பெருஞ்ஜோதி தரிசனம். மதுரை ஸ்ரீ மீனாட்சி சொக்கநாதர் வண்டியூர் எழுந்தருளி தெப்ப உற்சவம். குரங்கனி ஸ்ரீ முத்துமாலையம்மன் புறப்பாடு. சென்னை ஸ்ரீ கபாலீசுவரர் கோவில் தெப்ப உற்சவம். திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் கோவிலில் ஸ்ரீ ஆண்டாள் மூலவருக்கு திரு மஞ்சனம். திருத்தணி, திருப்போரூர், வடபழனி, குன்றத்தூர், கந்தகோட்டம், வல்லக்கோட்டை முருகன் கோவில்களில் அபிஷேகம். திருநறையூர் ஸ்ரீ சித்தநாதீசுவரர் கோவிலில் ஸ்ரீ சண்முகருக்கு சத்ரு சம்கார பூஜை. ஆறுமுகமங்கலம் ஸ்ரீ ஆயிரத்தொன்று விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் வெள்ளிப் பாவாடை தரிசனம். திருநெல்வேலி சமீபம் 3-ம் ஆண்டு நவதிருப்பதி செவ்வாய் பகவானுக்குரிய தலமான ஸ்ரீ வைத்தமாநிதிப் பெருமாள் கோவிலில் திருமஞ்சனம்.
இன்றைய ராசிபலன்
மேஷம்-நட்பு
ரிஷபம்-நன்மை
மிதுனம்-உவகை
கடகம்-அன்பு
சிம்மம்-ஆதரவு
கன்னி-உயர்வு
துலாம்- வெற்றி
விருச்சிகம்-புகழ்
தனுசு- கவனம்
மகரம்-அமைதி
கும்பம்-செலவு
மீனம்-சுபம்