null
குடும்ப பிரச்சனை தீர... வேப்பிலை மீது மண்விளக்கு!
- வாழ்க்கையில் பிரச்சனை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது.
- பிரச்சனை இல்லாத வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்காது.
யாருக்கு தான் பிரச்சினை இல்லை. வாழ்க்கையில் பிரச்சினை இல்லாத மனிதர்களை பார்க்கவே முடியாது. அவ்வளவு ஏன்? பிரச்சினை இல்லாத வாழ்க்கை சுவாரசியமாகவும் இருக்காது என்பதற்கு பல உதாரணங்கள் சொல்லிக்கொண்டே போகலாம்.
உதாரணத்திற்கு குடும்பத்தில் அண்ணன் - தம்பி பிரச்சினை, அக்கா-தங்கை பிரச்சினை, சொத்து பிரச்சினை, பண பிரச்சனை ... இவை அனைத்தயும் தீர்த்து வைக்க முடியும்.
ஆனால் எப்போதுமே..... வீட்டில் பிரச்சினை வந்துகொண்டே இருந்தால் என்ன செய்வது? மன நிம்மதி இருக்காது. உடல் ஆரோக்கியம் சீர்கெடும், எந்த வேலையிலும் நாட்டம் இருக்காது. இப்படியான நிலையில், குடும்பத்தில் அமைதி நிலவவும், சண்டை சச்சரவுகள் இல்லாத வாழ்கை வாழவும், எதிர்மறை எண்ணங்கள் நீங்கி நேர்மறை எண்ணங்கள் உதிக்கவும் மிக சிறப்பான வழிமுறை ஒன்று உள்ளது.
பரிகாரம்
தினமும் மாலை நேரத்தில் வேப்பிலை மீது இரண்டு அகல் விளக்கு வைத்து ஏற்றுவது மிகவும் சிறந்தது. அதாவது, நம் வீட்டு வாசலில் சதுர வடிவில் மஞ்சளால் கோலமிட்டு... அதன் மீது வேப்பிலையை பரப்பி, அதன் மீது 2 அகல் விளக்குகளில் மஞ்சள் திரியிட்டு விளக்கேற்றி வந்தால், திருஷ்டி படாது. எதிரிகள் நம்மை விட்டு விலகுவார்கள். குடும்பத்தில் அமைதி நிலவும். இவ்வாறு ஏற்றப்படும் விளக்கு குறிப்பாக கிழக்கு அல்லது வடக்கு நோக்கி இருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.