இன்றைய முக்கிய நிகழ்வுகள் மற்றும் பஞ்சாங்கம்- 10 மார்ச் 2025
- இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம்.
- ஸ்ரீ இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம்.
இன்றைய பஞ்சாங்கம்
குரோதி ஆண்டு மாசி-26 (திங்கட்கிழமை)
பிறை: வளர்பிறை
திதி: ஏகாதசி காலை 10.43 மணி வரை பிறகு துவாதசி
நட்சத்திரம்: பூசம் பின்னிரவு 3.07 மணி வரை பிறகு ஆயில்யம்.
யோகம்: சித்தயோகம்
ராகுகாலம்: காலை 7.30 மணி முதல் 9 மணி வரை
எமகண்டம்: காலை 10.30 மணி முதல் 12 மணி வரை
சூலம்: கிழக்கு
நல்ல நேரம்: காலை 6 மணி முதல் 7 மணி வரை மாலை 3 மணி முதல் 4 மணி வரை
இன்று சர்வ ஏகாதசி. சுபமுகூர்த்தம். சங்கரன்கோவில் ஸ்ரீ கோமதியம்மன் புஷ்பப் பாவாடை தரிசனம். ஸ்ரீ இம்மையில் நன்மை தருவார் திருக்கல்யாணம். பெருவயல் ஸ்ரீ முருகப் பெருமானுக்கு விஷணுவாம்சம் காட்சி. காரமடை ஸ்ரீ அரங்கநாதர் திருக்கல்யாணம். நத்தம் ஸ்ரீ மாரியம்மன் புறப்பாடு. வேதாரண்யம் ஸ்ரீ சிவபெருமான் திருவீதிஉலா. கீழ்த்திருப்பதி ஸ்ரீ கோவிந்தராஜப் பெருமாள் சந்நிதியில் ஸ்ரீ கருடாழ்வாருக்குத் திருமஞ்சன சேவை. திருநெல்வேலி ஸ்ரீ நெல்லையப்பர் கொலுதர்பார் காட்சி. திருவிடை மருதூர், திருமயிலை, திருவான்மியூர், பெசன்ட்நகர் கோவில்களில் காலை சிறப்பு சோமவார அபிஷேகம், அலங்காரம், வழிபாடு. திருச்சேறை ஸ்ரீ சாரநாதருக்கு திருமஞ்சன சேவை. ஸ்ரீ வைகுண்டம் அருகில் 2-ம் நவ திருப்பதி திருவரகுணமங்கை என்கிற நத்தத்தல் மூலவர் விஜயாசன பெருமாள் மற்றும் தாயார்கள் வரகுண வல்லித்தாயார், ஸ்ரீ வரகுணமங்கைக்கு காலையில் சிறப்பு திருமஞ்சன சேவை.
இன்றைய ராசிபலன்
மேஷம்-பொறுமை
ரிஷபம்-போட்டி
மிதுனம்-வரவு
கடகம்-வெற்றி
சிம்மம்-நட்பு
கன்னி-களிப்பு
துலாம்- செலவு
விருச்சிகம்-நன்மை
தனுசு- பாராட்டு
மகரம்-பொறுப்பு
கும்பம்-நிறைவு
மீனம்-முயற்சி