ஏத்தாப்பூர் வசிஷ்டநதியில் கிடைத்த 16 -ம் நூற்றாண்டு கால பாறை புடைப்புச் சிற்பங்கள்
- இரு மாதங்களாக வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
- ராட்தச பாறையில் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
வாழப்பாடி:
சேலம் மாவட்டம் ஏத்தாப்பூரில் வசிஷ்டநதி கரையில் பஞ்சபூத சிவன் திருத்தலங்களில் ஒன்றான, 500 ஆண்டுக்கு மேல் பழமையானதாக கருதப்படும் சாம்பவமூர்த்தீஸ்வரன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் புனரமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கடந்த இரு மாதங்களாக வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. தற்போது நீர்வரத்து குறைந்த நிலையில், கோவில் அருகே ஆற்றின் மையப்பகுதியில் ராட்தச பாறையில் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
இதுகுறித்து தகவலறிந்த ஏத்தாப்பூர் பேரூராட்சி தலைவர் காசி.அன்பழகன் தலைமையிலான குழுவினர், ஏறக்குறைய 11 நீளத்தில் 4 அடி உயரம் மற்றும் அகலத்தில் காணப்படும் இந்த புடைப்புச் சிற்ப பாறையை ராட்சத கிரேன் கொண்டு மீட்டு கரைக்கு கொண்டு சுத்தப்படுத்தினர்.
அப்போது இந்த பாறையில், 16ம் நுாற்றாண்டு காலத்தை சேர்ந்த ஆஞ்சநேயர், விநாயகர் மற்றும் சிவலிங்கம் சாமிக ளின் புடைப்புச் சிற்பங்கள் இருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து இந்த புடைப்புச் சிற்ப பாறையை கோவிலுக்கு அருகே வசிஷ்டநதிக் கரையிலேயே வைத்துள்ளனர். இந்த சாமிகளை பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.