உள்ளூர் செய்திகள்
கோப்புப்படம்

மானிய விலையில் நிலக்கடலை, நெல் விதைகள், உரங்கள்

Published On 2022-05-27 16:24 IST   |   Update On 2022-05-27 16:24:00 IST
திருப்பத்தூர் கந்திலி பகுதியில் நிலக்கடலை, நெல் விதைகள் உரங்கள் மானிய விலையில் வழங்கப்படுவதாக வேளாண்மை உதவி அலுவலர் தெரிவித்தார்.
திருப்பத்தூர்:

திருப்பத்தூர் மற்றும் கந்திலி வட்டாரங்களில் உள்ள விவசாயிகள் கடந்த 2 வாரங்களாக பெய்த மழையினால் மேற்கொண்டு வருகின்ற மாணவரிபருவத்தில் விதைப்பு மேற்கொள்ளும் போது நெல், நிலக்கடலை, துவரை காராமணி, உளுந்து, விதைகள் திருப்பத்தூர் மற்றும் கந்திலி வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. 

நிலக்கடலை கதிரி1812, என்ற ரகம் 16 டன் இருப்பில் உள்ளது. விதைகள் வேளாண்மை உழவர் நலத்துறையின் மூலம் மானியத்தில் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது தேவைப்படும் விவசாயிகள் தங்கள் பகுதியில் உதவி வேளாண்மை அலுவலர் தொடர்புகொண்டு உழவர் அலுவலர் தொடர்பு திட்டம் மூலம் பதிவு செய்தவுடன் வேளாண் விரிவாக்க மையங்களில் இருந்து பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் நிலக்கடலை சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு தேவையான ஜிப்சம் 45 டன் இருப்பில் உள்ளது ஜிப்சத்தை அடி உரமாகவும் 45வதுநாள் மேல் உரமாகவும் இரண்டு முறை இடுவதால் நிலக்கடலை மகசூல் அதிகரிக்கும் எனவே நிலக்கடலை விதைகளை மானியத்தில் ஜிப்சம் வாங்கி பயனடையவும் மேலும் நிலக்கடலை விதைகளை விதைப்பு செய்யும் முன் டிரைகோடேர்மா பிரிவு அல்லது பேவிஸ்டின் மருது கலந்து விதை நேர்த்தி செய்து விதைக்க வேண்டும், நெல்ரகம் வெள்ளைப்பொன்னி மற்றும் டிகேஎம் 1 ரகங்களும் கையிருப்பு உள்ளது.

நெல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு மானியத்தில் வழங்க ப்படுகிறது விதைகள் மானியத்தில் பெற்று பயனடையுமாறு வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராகினி தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News