உள்ளூர் செய்திகள்
தூத்துக்குடியில் கஞ்சா விற்ற 3 வாலிபர்கள் கைது - போலீசார் விரட்டி பிடித்தனர்
- போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர்.
- 3 பேரும் விற்பனை செய்வதற்காக கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது.
தூத்துக்குடி:
தூத்துக்குடி சிப்காட் சப்-இன்ஸ்பெக்டர் ஹேன்சன் பால்ராஜ் தலைமையான போலீசார் சோரீஸ்புரம் சந்தன மாரியம்மன் கோவில் அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது போலீசாரை கண்டதும் 3 வாலிபர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்களை போலீசார் விரட்டி சென்று பிடித்து சோதனையிட்டதில் பொட்ட லங்களில் 330 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. அவர்கள் விற்பனை செய்வதற்காக அந்த கஞ்சா பொட்டலங்களை வைத்திருந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து கஞ்சா பொட்ட லங்களை பறிமுதல் செய்த போலீசார் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட அய்யனடைப்பு பிரசாந்த் (வயது 30), மாதவன் நகர் ஆகாஷ் (22),மட்டக்கடை ஹரிஹரன் (23) ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.