உள்ளூர் செய்திகள்

பண்ருட்டி அருகே 8-ம் வகுப்பு மாணவி மர்ம சாவு

Published On 2022-12-27 13:21 IST   |   Update On 2022-12-27 13:21:00 IST
  • இந்த ஆண்டு தனது தந்தையுடன் வசித்து சின்னபகண்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார்
  • நீண்டநேரம் வீட்டுகதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர்.

கடலூர்: 

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அருகே உள்ள கே.டி.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் பிரபு. அவரது மகள் காவியா (வயது 13). இவரது தாயார் வரலட்சுமி இறந்து விட்டார். எனவே காவியா தனது அத்தை ஊரான விழுப்புரம் அருகே குன்னம் கிராமத்தில் தங்கி 7-ம் வகுப்பு வரை படித்து வந்தார். இந்த ஆண்டு தனது தந்தையுடன் வசித்து சின்னபகண்டை பகுதியில் உள்ள அரசு பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வந்தார். நேற்று வழக்கம்போல் பிரபு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த காவியா தூக்கில் பிணமாக தொங்கினார். நீண்டநேரம் வீட்டுகதவு திறக்கப்படாததால் அக்கம் பக்கம் உள்ளவர்கள் சந்தேகம் அடைந்தனர். உடனே ஜன்னல் வழியே எட்டிபார்த்தபோது காவியா தூக்கில் பிணமாக தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து பண்ருட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக் கப்பட்டது. தகவல் அறிந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தகு மார் தலைமை யிலான போலீசார் அங்கு விரைந்தனர். காவியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பிரபுவிடம் விசாரித்தபோது தனது மகள் தூக்குபோட்டு தற்கொலை செய்ததாக போலீசாரிடம் தெரிவி த்தார். ஆனால் காவியா வின் தலையில் காயம் உள்ளது. எனவே இந்த சாவு குறித்து போலீசார் சந்தேகிக்கி றார்கள். பிரேத பரிசேதனை முடிவில் காவியா எப்படி இறந்தார்? என்பது தெரியவரும் என போலீசார் கூறினர்.

Tags:    

Similar News