உள்ளூர் செய்திகள்

சூலூரில் கிரிக்கெட் விளையாடியவர் மைதானத்தில் சுருண்டு விழுந்து சாவு

Published On 2023-07-10 14:51 IST   |   Update On 2023-07-10 14:51:00 IST
  • பந்து தாக்கியதில் இறந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
  • வெள்ளியங்கிரி அருகிலுள்ள மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு செல்லப்ப ட்டார்.

சூலூர்

சூலூர் அருகே உள்ள வெள்ளலூரை சேர்ந்தவர் வெள்ளியங்கிரி (வயது 42). இவர் தென்னம்பாளை யத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

வெள்ளியங்கிரி நேற்று காலை தென்னம்பாளையம் மைதானத்தில் நண்பர்களு டன் சேர்ந்து கிரிக்கெட் விளையாடினார். அப்போது அவர் பந்து வீச வந்தார். இந்த நிலையில் வெள்ளி யங்கிரி திடீரென மைதா னத்தில் சுருண்டு விழுந்தார். அப்போது அவருக்கு கை, கால்கள் இழுத்துக்கொ ண்டன. இதைப் பார்த்த நண்பர்கள் ஓடோடி வந்து அவருக்கு தண்ணீர் கொடுத்து முதலு தவி செய்தனர்.

அதன்பிறகு வெள்ளியங்கிரி அருகிலுள்ள மரு த்துவமனைக்கு உடனடி யாக கொண்டு செல்லப்ப ட்டார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், வெள்ளி யங்கிரி ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர். இதுபற்றிய தகவல் அறி ந்ததும் சூலூர் போலீசார் வழக்கு ப்பதிவுசெய்து வெள்ளிங்கிரி உடலை மீட்டு உடல் கூறு ஆய்வு பரிசோதனைக்காக இ.எஸ்.ஐ. மருத்துவமனை க்கு அனுப்பி வைத்தனர்.

சூலூர் தென்னம்பா ளையம் கிரிக்கெட் மைதா னத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்த வெள்ளிங்கிரிக்கு மனைவி, 2 பெண் குழந்தைகள் உள்ளனர். மேலும் உடல் நலக் கோளாறு காரணமாக இறந்தாரா, அல்லது கிரிக்கெட் விளையாடும் போது ஏதேனும் பந்து அல்லது கிரிக்கெட் மட்டை தவறுதலாக பட்டு அதனால் இறந்தாரா? என்பது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சூலூர் பகுதியில் கிரிக்கெட் விளையாடி மைதானத்தில் உயிரிழக்கும் 2-வது நபர் வெள்ளியங்கிரி ஆவார். சித்தநாயக்கன் பாளையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கிரிக்கெட் விளையாடிய 32 வயது பளு தூக்கும் வீரர் மைதானத்தில் சுருண்டு விழுந்து உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News