உள்ளூர் செய்திகள்
கோப்பு படம்
நிலக்கோட்டை அருகே திருமண ஏக்கத்தால் கூலித்தொழிலாளி தற்கொலை
- தொழிலாளி திருமண ஏக்கத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
- போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
நிலக்கோட்டை:
நிலக்கோட்டை அருகே உள்ள காட்டுநாயக்கன்பட்டிைய சேர்ந்தவர் காமராஜ் மகன் மோகன் (வயது32). கூலித்தொழிலாளி.
இவர் அடிக்கடி வீட்டில் திருமணம் செய்து வைக்க கோரி சண்டையிடுவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று திருமணமாகாததால் விரக்தியில் இருந்த மோகன் பூச்சி மருந்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நிலக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் குருவெங்கட்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.