உள்ளூர் செய்திகள்

சூளகிரி அருகே சாமிக்கு படைக்கபட்ட தேங்காய் அசைந்த அதிசயம்

Published On 2023-05-03 15:01 IST   |   Update On 2023-05-03 15:01:00 IST
  • ஒட்டர்பாளையம் கிராமத்தில் எல்லை காக்கும் முனியப்பன் கோவில் அமைந்துள்ளது.
  • பூஜையில் பக்தர்கள் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர்.

சூளகிரி,

கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி தாலுகா, சூளகிரி ஒன்றியம் மருதாண்டப்பள்ளி ஊராட்சியை சேர்ந்த ஒட்டர்பாளையம் கிராமத்தில் எல்லை காக்கும் முனியப்பன் கோவில் அமைந்துள்ளது.

இக்கோவிலில் வாரத்திற்கு ஒரு முறை பூஜை நடைபெறுவது வழக்கம்.

இந்நிலையில் சம்பவத்தன்று நடைபெற்ற சிறப்பு பூஜையில் பக்தர்கள் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து பூஜை செய்தனர்.

இந்த பூஜையின் போது உடைத்து வைக்கபட்ட தேங்காய் சாமிக்கு படைக்க பட்டது. இந்நிலையில் சிறிது நேரத்தில் தேங்காயானது அசைந்து பக்தர்களுக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. 

Tags:    

Similar News