உள்ளூர் செய்திகள்

வீட்டை இடித்து சேதப்படுத்திய ஒற்றை யானை- தொழிலாளி குடும்பத்துடன் உயிர் தப்பினார்

Published On 2025-03-07 11:17 IST   |   Update On 2025-03-07 11:17:00 IST
  • யானை போடர்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து மாதேவன் வீட்டை இடித்து சேதப்படுத்தியது.
  • வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை யானை சாலையோரம் உலாவிக் கொண்டிருந்தது.

தாளவாடி:

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. இங்கு யானை, சிறுத்தை, புலி, கரடி, மான், காட்டெருமை உட்பட ஏராளமான வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

குறிப்பாக தாளவாடி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசித்து வருகின்றன. தற்போது வனப்பகுதியில் வறட்சி காரணமாக யானைகள் உணவு, தண்ணீரை தேடி ஊருக்குள் புகுவதும், பயிர்களை சேதப்படுத்துவதும் தொடர்கதை ஆகி வருகிறது.

இந்நிலையில் தாளவாடி அடுத்த கேர்மாளம் அருகே உள்ள போடர் பாளையத்தை சேர்ந்தவர் மாதேவன். கூலி தொழிலாளி. தனது குடும்பத்தினருடன் வெளியே சென்று இருந்தார். இந்நிலையில் நேற்று வனப்பகுதியை விட்டு வெளியேறிய ஒற்றை யானை போடர்பாளையம் கிராமத்துக்குள் புகுந்து மாதேவன் வீட்டை இடித்து சேதப்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மாலை மாதேவன் வெளியூரிலிருந்து வீட்டுக்கு வந்துள்ளார். அப்போது வீடு இடிந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அக்கம் பக்கத்தினர் ஒற்றை யானை வீட்டை இடித்து சேதப்படுத்திய தகவலை கூறினர். நல்ல வாய்ப்பாக யானை வீட்டை இடித்து சேதப்படுத்திய நேரத்தில் மாதேவன் தனது குடும்பத்துடன் வெளியூர் சென்றிருந்ததால் அதிர்ஷ்டவசமாக அவர் குடும்பத்துடன் உயிர் தப்பினார்.

இதேப்போல் திம்பம் மலைப்பாதையில் நேற்று இரவு வனப்பகுதி விட்டு வெளியேறிய ஒற்றை யானை சாலையோரம் உலாவிக் கொண்டிருந்தது.

இதனால் அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் தங்களது வாகனங்களை சற்று தொலைவில் நிறுத்தினர். சிறிது நேரம் சாலையில் நின்று கொண்டிருந்த ஒற்றை யானை பின்னர் மீண்டும் வனப்பகுதிக்குள் சென்றது. இதன் பின்னரே அந்த பகுதியில் போக்குவரத்து சீரானது.

Tags:    

Similar News