தமிழ்நாடு

பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வைத்த பா.ஜ.க.வினர்

Published On 2025-03-07 11:11 IST   |   Update On 2025-03-07 11:12:00 IST
  • மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.
  • கையெழுத்து இயக்கம் நடத்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.

மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கத்தை தமிழக பா.ஜ.க. முன்னெடுத்துள்ளது.

தமிழக பா.ஜ.க. சார்பில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக 'சமக்கல்வி எங்கள் உரிமை' எனும் கையெழுத்து இயக்க தொடக்க நிகழ்ச்சி, சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நேற்று முன்தினம் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு பா.ஜ.க. மாநில தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கி கையெழுத்து இயக்கத்தை தொடங்கி வைத்தார்.

இதனையடுத்து நேற்று சென்னையில் மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்து இயக்கம் நடத்த டாக்டர் தமிழிசை சவுந்தரராஜனுக்கு போலீசார் அனுமதி மறுத்தனர். மேலும், பா.ஜ.க., தி.மு.க.வினரின் போராட்டத்தால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில் சென்னை காரப்பாக்கத்தில் பா.ஜ.க.வினர் பள்ளி மாணவர்களுக்கு பிஸ்கட் கொடுத்து மும்மொழிக்கொள்கைக்கு ஆதரவாக கையெழுத்திட வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News