- அரியலூர் மாவட்டஊர்க்காவல் படைக்கு ஆள்தேர்வு
- 28 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படையில் பணிப்புரிய தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள செய்தி குறிப்பில், ஊர்க்காவல் படையில் காலியாக உள்ள 27 ஆண்கள், 1 பெண் என மொத்தம் 28 காலி பணியிடங்களுக்கு ஆட்கள் தேர்வு நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரும் 28,29,30 ஆகிய தேதிகளில் காலை 10 முதல் மாலை 4 மணி வரை அரியலூர் மாவட்ட ஊர்க்காவல் படை அலுவலகத்தில் வழங்கப்படுகிறது. இதற்கான தேர்வு அக்டோபர் 6, 7 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது. ஊர்க்காவல் படையில் சேர விருப்பம் உள்ளவர்கள் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் அல்லது தேர்ச்சி பெறாதவர்களாக இருக்கலாம். தேர்வு நடைபெறும் நாள்களில் 20 வயது நிறைந்தவராகவும், 45 வயது நிறைவ டையாதவராகவும், உடல் ஆரோக்கியமாகவும் இருக்க வேண்டும். கல்விச்சான்றிதழ், சாதி சான்றிதழ், ஆதார் அட்டை ஆகியவற்றின் அசல் மற்றும் நகல்களை எடுத்து வர வேண்டும். தற்போது எடுக்கப்பட்ட பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-2 எடுத்து வர வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.