உள்ளூர் செய்திகள்

சேதமடைந்த கார்களை படத்தில் காணலாம்.

பாவூர்சத்திரம் அருகே கார்கள் நேருக்கு நேர் மோதல்- டிரைவர்கள் உயிர் தப்பினர்

Published On 2023-11-04 08:39 GMT   |   Update On 2023-11-04 08:39 GMT
  • ராம கிருஷ்ணன் தனது காரில் கே.டி.சி. நகர் பகுதியில் வந்து கொண்டிருந்தார்.
  • எதிர்பாராத விதமாக 2 கார்களும் திடீரென நேருக்கு நேர் மோதியது.

தென்காசி:

தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே உள்ள ஐந்தாங்கட்டளை கிராமத்தை சேர்ந்த ராம கிருஷ்ணன் என்பவர் தனது காரில் பாவூர்சத்திரம் அருகே உள்ள கே.டி.சி. நகர் பகுதியில் வந்து கொண்டி ருந்தார்.

அப்போது நெல்லையை சேர்ந்த ஒருவர் தென்காசி யில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டர் ஒருவரை இறக்கி விட்டு விட்டு மீண்டும் நெல்லை நோக்கி திரும்பி வந்து கொண்டி ருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக 2 கார்களும் திடீரென நேருக்கு நேர் மோதியது. இதனை கண்ட அக்கம் பக்கத்தினர் காருக்குள் இருந்தவர்களை மீட்க சென்றனர் .

அப்போது 2 கார்களிலும் டிரைவர்கள் மட்டும் இருந்தனர். மேலும், கார்க ளில் உள்ள ஏர்பேக் விரிவடைந்து செயல்பட்டதால் எவ்வித காயங்களும் இன்றி 2 டிரைவர்களும் அதிர்ஷ்ட வசமாக உயிர்தப்பினர்.

இருப்பினும் 2 கார்களி லும் முன் பகுதியில் பலத்த சேதம் ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த வந்த பாவூர்சத்திரம் போலீசார் விபத்து குறித்து விசாரணை மேற்கொண்டனர். மேலும் கார்கள் நேருக்கு நேர் மோதிய சி.சி.டி.வி. காட்சியும் வெளியாகி உள்ளது.

Tags:    

Similar News