உள்ளூர் செய்திகள்
தருமபுரி ஏல அங்காடியில் ரூ.5.32 லட்சத்துக்கு பட்டுக்கூடுகள் விற்பனை
- ஒரு கிலோ ரூ.616-க்கு விற்பனையான பட்டுக்கூடு, நேற்று கிலோவிற்கு ரூ.31 விலை குறைந்தது.
- மொத்தம் ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 522-க்கு பட்டுக் கூடுகள் விற்பனை யானது.
தருமபுரி,
தருமபுரியில் பட்டு வளர்ச்சித்துறை சார்பில் செயல்பட்டு வரும் ஏல அங்காடிக்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் பட்டுக் கூடுகளை விற்பனைக்கு கொண்டு வருகிறார்கள்.
இந்த அங்காடிக்கு நேற்று முன்தினம் 922 கிலோ பட்டுக்கூடு வந்தது. இது நேற்று 1,107 கிலோவாக அதிகரித்தது. இதேபோல ஒரு கிலோ ரூ.616-க்கு விற்பனையான பட்டுக்கூடு, நேற்று கிலோவிற்கு ரூ.31 விலை குறைந்தது.
அதன்படி ஒரு கிலோ பட்டுக்கூடு அதிகபட்சமாக ரூ.585-க்கும், குறைந்த பட்சமாக ரூ.276-க்கும், சராசரியாக ரூ.480.90 -க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ.5 லட்சத்து 32 ஆயிரத்து 522-க்கு பட்டுக் கூடுகள் விற்பனை யானது.