உள்ளூர் செய்திகள்
உடுமலை மாரியம்மன் கோவில் தேரோட்டம் குறித்து ஆேலாசனை
- பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த விழாவுக்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம், கோவிலில் நடந்தது.
- இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
உடுமலை :
உடுமலையில் மிகவும் பிரசித்தி பெற்றது மாரியம்மன் கோவில் தேரோட்டம். பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடும் இந்த விழாவுக்கான முதற்கட்ட ஆலோசனை கூட்டம், கோவிலில் நடந்தது. கோவில் பரம்பரை அறங்காவலர் ஸ்ரீதர் தலைமை வகித்தார். கூட்டத்தில் வரும் மார்ச் 28ந்தேதி, தேர்த்திருவிழாவுக்கு நோன்பு சாட்டுதல், ஏப்ரல் 4-ந்தேதி கம்பம் போடுதல், 13-ந்தேதி தேரோட்டம், 15-ந்தேதி மகாபிேஷகம் நடத்துவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.