உள்ளூர் செய்திகள்

களக்காட்டில் கஞ்சா விற்பனை செய்தவர் கைது

Published On 2022-11-08 09:07 GMT   |   Update On 2022-11-08 09:07 GMT
  • களக்காடு தனியார் பள்ளி அருகே ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
  • 1 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

களக்காடு:

களக்காடு தனியார் பள்ளி அருகே ஒருவர் கஞ்சா விற்பனை செய்து கொண்டிருப்பதாக களக்காடு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து இன்ஸ்பெக்டர் ஜோசப் ஜெட்சன், சப்-இன்ஸ்பெக்டர் ராமநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று சோதனையிட்டனர். அப்போது களக்காடு அருகே உள்ள கீழதேவநல்லூர் சிவன் கோவில் தெருவை ேசர்ந்த கண்ணன் என்ற குண்டாஸ் கண்ணன் (வயது 34) பிளாஸ்டிக் பையில் கஞ்சாவை மறைத்து வைத்து விற்பனை செய்து கொண்டிருந்தார்.

இதைப்பார்த்த போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்து 1 கிலோ 300 கிராம் எடையுள்ள கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News