உள்ளூர் செய்திகள்

மாணவி பாலியல் வன்கொடுமை: குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மறுத்த பெற்றோர்கள்

Published On 2025-02-07 10:25 IST   |   Update On 2025-02-07 10:25:00 IST
  • ஆசிரியர்கள் 3 பேரும் பணி சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ளனர்.
  • போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

போச்சம்பள்ளி:

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி தாலுகாவில் ஒரு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி இயங்கி வருகிறது. அந்த பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் 13 வயதுடைய மாணவி பள்ளி ஆசிரியர்களால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டார்.


இது தொடர்பாக பர்கூர் அனைத்து மகளிர் போலீசார் விசாரணை நடத்தி, ஆசிரியர்கள் ஆறுமுகம் (வயது48), சின்னசாமி (57), பிரகாஷ் (37) ஆகிய 3 பேரை கைது செய்தனர். அவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைபெற்றது.

பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்களை போலீசார் கிருஷ்ணகிரி கோர்ட்டில் ஆஜர்படுத்தி சேலம் மத்திய சிறையில் தனி அறையில் அடைத்தனர். இதற்கிடையில் ஆசிரியர்கள் 3 பேரும் பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்யப்பட்டுள்ளனர்.

தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக காவல் துறையினரும், பள்ளி கல்வி துறையினரும் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக பள்ளிக்கு நேற்று முன்தினம் விடுமுறை விடப்பட்டது.

இதற்கிடையே அரசு தொடக்கப்பள்ளி இணை இயக்குனர் சாந்தி தலைமையில் கல்வித்துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியை, மற்றும் ஆசிரியைகளிடம் விசாரணை நடத்தினார்கள். இதையடுத்து நேற்று 2-வது நாளாக பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

நேற்று 2-வது நாளாக பர்கூர் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துகிருஷ்ணன் தலைமையில் 5 இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார் பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பணிகளை மேற்கொண்டனர். சம்பந்தப்பட்ட பள்ளியில் உள்ள மற்ற மாணவ, மாணவிகளுக்கு மனநல ஆலோசனைகள் வழங்கி பள்ளியை திறக்க அதிகாரிகள் முடிவு செய்து இன்று காலை பள்ளி திறக்கப்பட்டது.

அப்போது மாணவர் களின் பெற்றோர்கள் பள்ளி முன்பு இன்று காலை திரண்டு வந்து இனி தங்களது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப மாட்டோம் என்று கூறி திடீரென்று ஆசிரியர்களு டனும், அதிகாரிகளுடனும் வாக்கு வாதத்தில் ஈடுபட்ட னர். அப்போது அங்கு பாது காப்பு பணியில் இருந்த போலீசார் பெற்றோர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

தொடர்ந்து பள்ளி முன்பு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கைதான ஆசிரியர்கள், வேறு மாணவிகள் யாரிடமும் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளனரா? என்பது குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

கைதான 3 பேருக்கு ஆதரவாக நீதிமன்ற வழக்கு களில் வழக்கறிஞர்கள் யாரும் ஆஜராக போவ தில்லை என்று கிருஷ்ணகிரி மாவட்ட வழக்கறிஞர்கள் சங்க செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப் பட்டது.

இதேபோல் மாணவி கூட்டு பலாத்காரத்தை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் கிருஷ்ணகிரியில் நாளை ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்று அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார் என்று குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News